Thursday, May 9, 2024

 சிக்கல்களும் - தீர்வுகளும்...!


காலம் எதற்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை, அச்சம், கவலை, வெறுப்பு, போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியா விட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது... 


பல நேரங்களில் சிக்கல்கள் ஆரம்பமான இடத்தை விட்டு நாம் தீர்வுகளை தெருவில் தேடுகின்றோம். சிக்கல்களுக்கான தீர்வை நம்மிடம் தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம்... 


நாம் என்ன தவறு செய்தோம்...? எதனால் இந்தச் சிக்கல் நேர்ந்தது..? என்று சிந்தித்து தெளிவு பெறுவது இல்லை... 


சரி!, நாம்தான் சிக்கல்களுக்கு ஆட்டுவிப்பவராக இருந்து விட்டோம், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதை திறமையாக எதிர் கொள்கிறோமா...? அதுவும் இல்லை!. 


முல்லா நஸ்ருதீன் எதையோ தொலைத்து விட்டுத் தரையில் தேடிக் கொண்டு இருந்தார். 'எதைத் தொலைத்து விட்டீர்கள் முல்லா...?' என்று வழிப்போக்கர் ஒருவர் கேட்டார்... 


எனது வீட்டுத் 'திறவுகோல்'(சாவி) என்று கூறிவிட்டு தொடர்ந்து தேடினார் முல்லா... 


மற்றவரும் சேர்ந்து தேடத் தொடங்கினார். சிறிது நேரத் தேடலின் பின் வழிப்போக்கர் முல்லாவிடம் கேட்டார், 


"எங்கே திறவுகோலைத் தொலைத்தீர்கள்...?" என்று வழிப் போக்கர்  கேட்க, அதற்கு முல்லா, "என் வீட்டில்தான் தொலைத்தேன்," என்றார்... 


வழிப்போக்கருக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு, "வீட்டில் தொலைத்ததை ஏன் தெருவில் தேடுகின்றீர்கள்...?" என்று சினந்து கொண்டார்... 


அதற்கு முல்லா அமைதியாக சொன்னார், "இங்கேதான் வெளிச்சம் இருக்கிறது" என்று!, 


வாழ்க்கை வாழ்வதற்குத்தான், அழுது வடிப்பதற்கு அல்ல, அத்தகைய வாழ்க்கையை சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத் தரும்..


ஆம்!. எந்த சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. *நாம் சற்று அறிவை பயன்படுத்தி தீர்வை கண்டால், சிக்கல் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படுவது  உறுதி...!*

 நான்_ரசித்த_பதிவு:


இன்னிக்கு படத்துக்கு போறேன்னு சொன்னியே போலயா? என

அப்பா மகனிடம் கேட்டார்


இல்ல டீவில தான்ப்பா  ரிலிஸ் 


டீவிலயா? பழைய படமா?


புதுபடம் தான்பா!


புதுபடமா? அது எப்படி?


ஒடிடில?


ஒடிடின்னா?


ஒடிடின்னா காசுகட்டினா பார்க்க முடியும்?


ஒ எங்க போய் காசு கட்டனும்?


அது ஒரு App ப்பா அது உனக்கு சொன்னா புரியாது?


ஒ App ன்னா? அது என்ன?


அய்யோ அப்பா அறுக்காத எனக்கு ஆபிஸ்க்கு நேரமாச்சு

நீ மாத்திர சாப்பிட்ட்டு தூங்கு என கிளம்பினான் மகன்


அவனை பார்த்தபடியே உள்ளிருந்து ஒரு டைரியை  மகனிடம்

கொடுத்தார் அப்பா அவன் அதை புரட்டி பார்த்தான்


1988 டிசம்பர் 4 என எழுதபட்டிருந்தது


அப்பா இது என்னப்பா?


டீவிடா?


டீவின்னா?


நாம வீட்லிருந்தே படம் பார்க்கலாம்பா?


ஒ இது என்னப்பா?


இது ஆண்டனா டா இது வச்சாதான் சிக்னல் வரும்


சிக்னல்னா?


அங்க ஒளிபரப்புறது நமக்கு இங்க  வரதுதான் சிக்னல்


ம்ம் தெரியும்  ரோடுல இருக்குமே பச்ச சிவப்பு மஞ்சள் அந்த சிக்னலாப்பா?


நான் சிரித்தபடியே அது இல்லப்பா இது வேற சிக்னல்


அன்று  1000 கேள்வி கேட்டான் என் மகன்


 அனைத்துக்கும்

சிரித்தபடியே பதில் சொன்னேன் அவனின் தெரிந்து கொள்ளும்

திறனை நினைத்து பெருமை பட்டபடியே

என எழுதி முடித்திருந்தார்.


டைரியை படித்து விட்டு மகன் கண்கலங்கி அப்பாவை

கட்டிபிடித்தான்.


ஒவ்வொரு அப்பாவும் வயதின் ஒட்டத்தில்,

குழந்தைதான். மகன் தான் அப்பாவாகிறான்........

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*


9.05.2024(வியாழக்கிழமை)

*சிந்தனை துளிகள்*


 வார்த்தை என்பது ஏணி போல நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து நம்மை ஏற்றியும் விடும்...

இறக்கியும் விடும்.!


எந்த அளவிற்கு சம்பாதித்து வைத்திருக்கிறோம் என்பது பெருமையல்ல.

இன்பத்திலும் துன்பத்திலும் நம்மோடு இருக்க எத்தனை பேரை சம்பாதித்து வைத்திருக்கிறோமோ அதுவே நம் வாழ்வின் சிறப்பாகும்.!!


எவன் ஒருவன் மற்றவர்களின் வேலைகளில் வீணாக தலையிடாமல்

தன்னுடைய வாழ்வின் கடமைகளை அறிவுடனும் அக்கறையுடனும் கவனிக்கிறானோ,

அவனுக்கு வெற்றி,கெளரவம்,செல்வாக்கு ஆகிய மூன்றும் தானாக வந்து சேரும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*செய்தி துளிகள்*



🍒🍒12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

🍒🍒அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி:

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த நடவடிக்கை

இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தகவல்

🍒🍒உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ 2024-25ம் கல்வியாண்டில் ஜூலை மாதம் முதல் தொடங்கும்

-சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

🍒🍒மே 10-ல் வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பு

tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணைதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

🍒🍒அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு.

🍒🍒2024-2025 பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பீகார் கல்விக்குழு

🍒🍒மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6 கடைசி நாளாகும்.!

🍒🍒பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு: 2 நாளில் 42,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

🍒🍒பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை10-ம் தேதி வெளியீடு.

🍒🍒கணினி பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்கள் சேகரிப்பு.

🍒🍒அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது.

🍒🍒கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம் வெளியீடு.

🍒🍒உலகத்தில் வேறு எங்கும் இல்லாத நம்பர் 1 படிப்பை அறிமுகப்படுத்திய ஐஐடி

🍒🍒தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது ஆஸ்ட்ராஜெனகா:

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு. 

தடுப்பூசியால் வெகு சிலருக்கு பாதிப்புகள் ஏற்படுவதால் திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனகா அறிவிப்பு.

🍒🍒வேகத்தடைகளுக்கு அருகே மின் கம்பங்கள் அமைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு உத்தரவு

🍒🍒பீகாரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 2 அதிகாரிகள் மாரடைப்பு காரணமாக மரணம்

🍒🍒இந்தியா கூட்டணி வென்றால் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும் என ராகுல்காந்தி உறுதி 

🍒🍒கேரளாவில் நைல் காய்ச்சல் அதிகளவில் பரவுவதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை உத்தரவு

🍒🍒தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு 

🍒🍒மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது

திருச்சி காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

திருச்சியில் இருந்து கோவை மத்திய சிறைக்கு சென்ற போலீசார் திருச்சி வழக்கில் கைது செய்வதற்காக உத்திரவினை சவுக்கு சங்கரிடம் வழங்கினர்

🍒🍒செல்பி கேட்ட நபரை துன்புறுத்திய வீரர்: 

செல்பி எடுக்க முயன்ற நபரின் கழுத்தை பிடித்து தள்ளி, அடிக்க முயன்றதால் பரபரப்பு; உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் சாஹிப் அல் ஹசனின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி

🍒🍒பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மே 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடித்தது

🍒🍒காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா

பிட்ரோடாவின் விலகல் முடிவை ஏற்று கொண்டதாக கட்சி தலைமை அறிவிப்பு

இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில் ராஜினாமா

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹ஏசியை 26+ டிகிரியில் வைத்து, ஃபேன் போடுங்கள், மின் வாியத்திலிருந்து, ஒரு நிர்வாக பொறியாளர் அனுப்பிய, மிகவும் பயனுள்ள தகவல்:


👉ஏசியின் சரியான பயன்பாடு.

கோடை வெயில் தொடங்கிவிட்டதால் AC ஐ அடிக்கடி பயன்படுத்துவதில், சரியான முறையைப் பின்பற்றுவோம்.

பெரும்பாலான மக்கள் தங்கள் ஏசிகளை 20-22 டிகிரியில் இயக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடல்  குளிர்ந்தால், அவர்கள் தங்கள் உடலை போர்வைகளால் மூடுகிறார்கள். இது இரண்டு விதமான இழப்புக்கு வழிவகுக்கிறது. 

அதாவது,

நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும்.

 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை உடல் எளிதில் பொறுத்துக்கொள்ளும். இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.

அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்போது, உடல் தும்மல், நடுக்கம் போன்ற வற்றினை எதிர்த்து போராட வேண்டும்.

நீங்கள் 19-20-21 டிகிரியில் ஏசியை இயக்கும்போது, அறையின் வெப்பநிலை சாதாரண உடல் வெப்பநிலையை விட மிகக் குறைவாக இருக்கும். மேலும் இது உடலில் ஹைப்போதெர்மியா எனப்படும் நோய் உருவாகிறது, இது உடலில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, இதனால் உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் போதுமானது  இல்லை. . மூட்டுவலி போன்ற நீண்ட கால தீராத வலிகள் உருவாகின்றன.

பெரும்பாலும் ஏசி ஆன் செய்யும்போது வியர்வை வராது, அதனால் உடலில் உள்ள நச்சுகள் வெளியே வர முடியாமல், நாளடைவில் தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.

நீங்கள் குறைந்த வெப்பநிலையில் ஏசியை இயக்கும்போது, 5 ஸ்டார் AC ஆக  இருந்தாலும், அதன் கம்ப்ரசர் முழு ஆற்றலில் தொடர்ந்து வேலை செய்வதால் அதிகப்படியான மின்சாரம் செலவழிக்கப்படுகிறது மற்றும் அது உங்கள் பணத்தை விரயமாக்கிறது.

முதலில் ஏசியின் வெப்பநிலையை 20 - 21 என அமைப்பதன் மூலம் உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்பதை மனதளவில் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அப்படியானால்

ஏசியை இயக்க சிறந்த வழி எது ?

26+ டிகிரி அல்லது அதற்கு மேல் வெப்பநிலையை அமைக்கவும்.

26+ டிகிரியில் ஏசியை இயக்குவதும், மெதுவான வேகத்தில் மின்விசிறியைப் போடுவதும் எப்போதும் நல்லது. 28 பிளஸ் டிகிரி சிறந்தது.

இதற்கு மின்சாரம் குறைவாக செலவாகும், மேலும் உங்கள் உடல் வெப்பநிலையும் வரம்பில் இருக்கும், மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தத் தீங்கும் ஏற்படாது.

இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஏசி குறைந்த மின்சாரத்தை உட்கொள்ளும், மின்சாரம் சேமிக்கப் படுகிறது. மூளையின் இரத்த அழுத்தமும் குறையும் மற்றும்  இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.

 எப்படி ?

26+ டிகிரியில் ஏசியை இயக்குவதன் மூலம் ஒரு இரவுக்கு சுமார் 5 யூனிட்கள் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், சுமார் 10 லட்சம் வீடுகளும் உங்களைப் போலவே செய்கின்றனர் என்றால் ஒரு நாளைக்கு 5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கிறோம்.

பிராந்திய அளவில் இந்த சேமிப்பு ஒரு நாளைக்கு கோடி யூனிட்களாக இருக்கும். 

இதனால் புவி சூடாதல். குறையும். இதனால் இயற்க்கை பாதுகாக்கப்படும்.

தயவு செய்து மேற்கூறியவற்றைக் கவனியுங்கள், உங்கள் ஏசியை 26 டிகிரிக்குக் கீழே இயக்க வேண்டாம். உங்கள் உடலையும், சுற்று சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பொது நலனுக்காக அனுப்பப்பட்டது.

🙏🙏🙏🙏🙏

 *தினசரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து எர்ணாகுளம் (கேரளா )செல்ல...*


 காரைக்கால்

மாலை4.30

 நாகப்பட்டினம்

5.05

திருவாரூர்5.32 நீடாமங்கலம்

5.54 

தஞ்சாவூர்6.25 திருச்சிஇரவு

8.00 

குளித்தலை

8.50 

கரூர் 9.35

ஈரோடு11.05 திருப்பூர்12.10 கோவை அதிகாலை1.25 பாலக்காடு3.10 திரிசூர்4.35 எர்ணாகுளம்

காலை7.00


*நட்பும் நிகழ்வும் குழு*



 *எர்ணாகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் திரும்பி வர*


எர்ணாகுளம்

இரவு10.30

 திரிசூர்12.15 பாலக்காடு1.40 கோவை3.15 திருப்பூர்4.00 ஈரோடு 5.05

கரூர்6.20 குளித்தலை

6.55 திருச்சி7.45 தஞ்சாவூர்8.55 நீடாமங்கலம்

9.25 திருவாரூர்

10.00 நாகப்பட்டினம்

10.50 காரைக்கால்

11.57


*நன்றி.*

 பல நேரங்களில் நம் செயல்பாடுகள்  நம் அருகில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...


சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் நமக்கும் ஒட்டிக் கொள்கிறது...


எனவே வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் நாம் ஆலோசிக்க வேண்டும்...


நமது அருகில் இருப்பது யார்...? உற்சாகமானவரா.. ? சுறுசுறுப்பானவரா...? நம்பிக்கையானவரா...? விரக்தி எண்ணம் உள்ளவரா...? என்று...


இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்...!


மிகப் பெரிய வணிக நிறுவனத்தை துவக்கி, கொடிகட்டிப் பறந்தவர்கள்  தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள்...


எனவே!, நமக்கும், நம் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது...


இலக்கு, குறிக்கோள் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் கொண்ட குறிக்கோளை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக உள்ளவர்களை தேடி பிடித்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்...


நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த மகிழுந்து திடிரென்று நின்றது.. ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ர்ந்து இருந்தவர் தூங்கி வழிந்து கொண்டு இருந்தார்...


ஓட்டுனர் அவரை தட்டி எழுப்பி, அய்யா!, கொஞ்சம் பின் சென்று உறங்குங்கள். நீங்கள் உறங்குவதைக் கண்டால் எனக்கும் உறக்கம் வருகிறது”.என்றார்...


உறங்கி கொண்டிருந்தவர் எழுந்து பின்னால் சென்று அமர்ந்து கொண்டு உறக்கத்தை தொடர ஆரம்பித்தார்...


நம் அருகில் உள்ளவர்களால் நாம் எப்படி உற்சாகம் பெறுகின்றமோ, அதைப் போலவே நம்மை பார்த்து மற்றவர்களும்  எழுச்சி பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும்...


நம் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் நம் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்...


உன் நண்பன் யாரென்று சொல். உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்.’’ இப்படி ஒரு பழமொழி உண்டு...!


நம் இலக்குகளை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம். நமது இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அவர்கள்தான் உதவியாக இருப்பார்கள்...!!


நமது குறிக்கோளை அடைய பாடுபடும் போது நம்மை உற்சாகப்படுத்தி நம்முடன் கூட வருபவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு உந்துதலாக,உற்சாகப்படுத்துவராக, இருக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இணைந்து கொள்ளுங்கள்...


பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களையும் இணைத்து நட்பும் நிகழ்வும் குழுவில் பயணிக்க

கீழ்கண்ட லிங்க் மூலம் இணையலாம் 


           

     


 🙏நன்றி🙏

      வாழ்க வளமுடன்

 வன்மை மென்மை    .    . 


 _*எத்தனை*_

_*பிரச்சனைகள்*_

_*வந்தாலும்.....*_

_*சிரித்துக்கொண்டும்...*_

_*ரசித்துக்கொண்டும்...*_

_*வாழ்க்கையை கடந்து*_

_*செல்பவர்கள் தான்....*_

_*உண்மையான*_

_*புத்திசாலிகள்...*_

_*தைரியசாலிகள்.*_


_*சில நேரங்களில் எல்லாம் நமக்கு சாதகமாக நடக்கும்,*_

_*சில நேரங்களில் நடக்காமலும் போகலாம். நாம் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.*_


_*வெற்றிக்கு என்ன தேவையோ அதைதான் நாம்செய்ய வேண்டும்*_

_*முன்னேற்றத்தை நோக்கி முயற்சி செய்யுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. *_


காரணங்கள் இல்லாமல் தொடரும் வாதத்தில்

சொல்லப்படும் காரணங்கள்

அனைத்தும் கட்டுக்கதையே. 


சவால்கள் தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன

அவற்றைச் சமாளிப்பதே

வாழ்க்கையை

அர்த்தமுள்ளதாக

மாற்றுகிறது.


பெண் என்பவள் பலகோடி

பக்கங்கள் கொண்ட

புத்தகம்.


பலரும் அட்டையைப்

பார்த்து விட்டு

வைத்து விடுகிறார்கள்.


சிலர் மட்டுமே படிக்கத்

தொடங்குகிறார்கள்.


வாழ்க்கையில் இக்கட்டான

சூழ்நிலையில் சாதனைக்கு

வழிவகுப்பது

தன்னம்பிக்கை மட்டுமே.


தன்னம்பிக்கை

இல்லாமல்

எதுவும் செய்ய இயலாது.


ஒருபோதும்

தன்னம்பிக்கையை 

இழக்காதீர்கள்.


உலகம் முழுவதும்

உறவுகள் உண்டு.


நமக்கான உறவுகளை

கண்டறிவதில் தான்

எளிதாகத் தோற்று விடுகிறோம்.


வன்மையை விட மென்மையே

நீண்ட காலம் நிலைக்கிறது.

மென்மையான நாக்கை

கட்டுப்படுத்தும்.

வன்மையான பற்கள்

நீண்ட நாட்கள்

நிலைப்பதில்லை.


சிரித்துப் பேசும்

இதயங்கள்

எல்லாம் நிம்மதியானவை

என்று நினைத்து

விடாதீர்கள்.

அவ்விதயங்களும்

என்றோ

ஒருநாள் சிதைக்கப்பட்டவை

தான்.

இன்று 

எல்லாவற்றையும் தாண்டி

சிரித்துக் கொண்டிருக்கிறது.


வாழ்வில்

தோற்று விடக்கூடாது என்பதற்காக

மனிதன் செய்யும் தவறுகளில் மிகவும் மோசமானது ஒருவரின் சூழ்நிலை தெரியாமல் அவரைத் தவறாக விமர்சிப்பதாகும்.


யாருக்கும் உங்களைக் கணிக்கும் உரிமை கிடையாது.

ஏனெனில் அவர்களுக்கு உங்களைப் பற்றிய வதந்திகளே அதிகம் தெரிந்திருக்குமே தவிர, உங்களின் வலிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


மதிப்பைக் கேட்டு வாங்கும் இடத்தில் இருக்காதீர்கள்.

விரும்பித் தானே கொடுக்கும் இடத்திற்கு உங்களை

உயர்த்திக் கொள்ளுங்கள்.


நல்லதை செய்கின்றவன்

உன் எதிரியா இருந்தாலும் அவனிடம் சேர மறுக்காதே.

கெட்டதை செய்பவன் உன் நண்பனாக இருந்தாலும் விலகத் தயங்காதே.


 _*உழைத்து சாப்பிடும் போது அப்பாவின் அருமையும்.*_

_*சமைத்து சாப்பிடும் போது அம்மாவின் அருமையும் தெரியும்.*_


*_நேர்மையும், உண்மையும்_*

*_விலை உயர்ந்த பரிசுகள்._*

*_எல்லா மனிதர்களிடமிருந்தும்_*

*_அதை எதிர்பார்க்க வேண்டாம்._*

 எது நல்லது எது தீயது   . 


*வெயில் இருந்தால் தான்*

*நிழலின் அருமை புரியும்.*


*நூறுபேரின் வாயை*

*மூட முயற்சிப்பதை விட‌.*

*நம் காதுகளை மூடிக்கொள்வத*

*மிகச்சிறந்தது.*


_*கடவுள் சாட்சியாக என்ற*_

_*வாசகத்தின் துணையோடு.*_

_*பல பொய்கள்*_

_*உண்மையாக்கப்படுகின்றன.*_


அறிவுடையவர்கள்

அனைத்தையும் உடையவர்களே.

அறிவு இல்லாதவனிடத்தில் எல்லாம் இருந்தாலும், அவன் ஒன்றும் இல்லாதவனே. ஏனென்றால் எல்லா வெற்றிகளும், பொருட் செல்வங்களும் இருந்தாலும், அதைப் பயன்படுத்தும் அறிவு இல்லாதவன் வறியவனே.


அறிவு, ஆற்றல் (சக்தி), திறமை(செயல் திறன்) இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம்தான். ஆனால், ஆற்றலும், திறமையும் இருந்தும் அறிவில்லை என்றால் அதனால் யாதொரு பயனுமில்லை. அதே சமயம் அறிவு ஓங்கி நின்றால் ஒருவர் தம் ஆற்றலையும், திறமையையும் வளர்த்துக் கொள்வார். ஒரு மனிதன் படிப்பதினாலும், கேள்வி ஞானத்தினாலும் தன் அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்றால், அவனுக்கு கொஞ்சமாவது உண்மை அறிவு இருக்க வேண்டும்.


அப்பொழுதுதான்,

அவன் தான் படிக்கிற, கேட்கிற விஷயங்களை, தான் ஏற்கனவே அறிந்திருக்கின்ற விஷயங்களோடு அல்லது தன் அனுபவத்தோடு பொருத்தி, ஆராய்ந்து பார்ப்பான்.

இல்லையென்றால் யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, குழம்பிக் கொண்டிருப்பான். எனவே ஓரளவாவது தன் உண்மை அறிவை வளர்த்துக் கொள்பவன்தான் மேலும் மேலும் தன் அறிவை விருத்தி செய்து கொள்ள முடியும். 


அறிவுதான் மனிதனைக் காக்கும். அறிவுக்கு இலக்கணம் என்ன 

மனம் சொல்கிறபடியெல்லாம் ஆடாமல், அதில் எது நல்லது, எது தீயது என்று ஆராய்ந்து, தீயவைகளைப் புறந்தள்ளி, நன்மைகளை ஏற்றுக் கொள்வதே அறிவுக்கு இலக்கணம். யார் பேசுகிறார் என்பதை கவனிக்கிற அளவு, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நாம் சிந்திப்பதேயில்லை.


அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும் என்று அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

அது தவறு. அவர் என்ன பேசுகிறார்  அவர் பேசுவதில் உண்மையிருக்கிறதா என்று ஆராய வேண்டும். நாம் பேசும் பொழுதும் ஆராய்ந்துதான் பேச வேண்டும், பிறர் பேசும் பொழுதும் அதிலுள்ள உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அதுதான் அறிவு. அப்படிப்பட்ட அறிவு பெற்றவர்கள் தங்கள் வாழ்வில் தோற்பதேயில்லை.


சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடந்து கொள்வது அறிவுடையோர் செயல். அதற்காக நம் சுய இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதல்ல. நம் இயல்பை, நம் அறிவை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். தகாது என்று தோன்றினால் மௌனமாக இருக்க வேண்டும். இதுவே அறிவுடையோர்க்கு அழகாகும்.


அறிவுடையவர்கள் பின்பு நடக்கப் போவதை முன் கூட்டியே அறியும் வல்லமை பெற்றிருப்பார்கள். எனவே சில காரியங்களில் அவர்கள் தோற்றுப் போவது போலத் தோன்றும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. தனக்கும், தன் சமூகத்திற்கும் ஏற்படும் கேடுகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் அச் செயலை தவிர்த்திடுவர். இது தோல்வியல்ல. இதுதான் அறிவுடமை. அறிவில்லாதவன் வெற்றி பெற்று விட்டோம் என்று இறுமாந்து, தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பேரழிவைத் தேடிக் கொள்வான். இதை சரித்திரத்தின் பல இடங்களில் நாம் கண்டிருக்கிறோம்.


எனவே எந்த ஒரு செயலாக இருந்தாலும், ஒரு முறைக்குப் பல முறை ஆராய்ந்து பின் இறங்க வேண்டும். அவ்வாறு எண்ணிச் செயல்படும் பொழுதும் கூட, சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றினால், அஞ்சாமல் தவிர்த்து விட வேண்டும். சில நேரங்களில் தவிர்க்க இயலாமலும் போய் விடும். அப்படிப்பட்ட வேளைகளில் அடக்கமாக இருந்து கொள்ள வேண்டும்.


இப்படிப்பட்ட

வருமுன் காக்கின்ற அறிவு உடையவர்களுக்கு கொடிய துன்பங்கள் எதுவும் ஏற்படாது. எனவே அறிவு உடையவர்களிடத்தில் உலகாய வெற்றியின் மூலம் அடையப் பெறுகின்ற வேறு எதுவும் இல்லை என்றாலும், அவர்கள் அனைத்தையும் உடையவர்களே. அறிவு இல்லாதவனிடத்தில் எல்லாம் இருந்தாலும், அவன் ஒன்றும் இல்லாதவனே. ஏனென்றால் எல்லா வெற்றிகளும், பொருட் செல்வங்களும் இருந்தாலும்,அதைப் பயன்படுத்தும் அறிவு இல்லாதவன் வறியவனே. அவன் ஒரு போதும் வாழ்வில் மேன்மை நிலையை அடைய மாட்டான். மன அமைதி என்பது அவனைப் பொருத்த வரை எட்டாக் கனி. எனவே தன்னிறைவு என்பது அவனுக்கு பகல் கனவு.


தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை


தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்


தன்னை அறியும் அறிவை அறிந்தபின்


தன்னையே

அற்சிக்கத் தானிருந் தானே. 

*🤘~ திருமூலர்.*


வாழ்வில் முழுமை என்பது தன்னிறைவால் மட்டுமே ஏற்படும். 


_*நாம் வாழும் இந்த பிரபஞ்சம்*_ _*பிரம்மாண்டமான ஒன்று.*_

_*அதை படைத்து வழிநடத்திக் கொண்டிருக்கும் மிகப்பெரிய அதிபிரமாண்டமான சக்தியை பற்றி நினைத்துப் பாருங்கள்.*_


_*அவ்வளவு பெரிய சக்திக்கு முன்னால் நம் கஷ்டங்களும் துன்பங்களும் ஒரு விஷயமே அல்ல.*_


_*உங்கள் கஷ்டங்களை நீங்களே தூக்கி சுமக்கும் வரை தான் அது உங்களுக்கு பாரமாக இருக்கும். இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.*_


_*நமக்கு தரும்*_ _*கஷ்டங்கள் மூலம்*_

_*சில நேரங்களில்*_ _*சிலவற்றை இறைவன் நமக்கு கற்றுக் கொடுக்கலாம்.*_

_*புரிய வைக்கலாம்.*_


_*ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம்மை அவர் கைவிடுவதில்லை.*_


_*இறைவனை முழுமையாக நம்புங்கள் உங்களுக்கான காலம் வரும் பொறுத்திருங்கள்.*_

_*அனைத்தையும் கடந்து வருவீர்கள்*_


_*பார்க்கும் முறையை மாற்றிக்கொள்ளுங்கள்..*_

_*பார்வைக்கு*_

_*அனைத்தும்*_ _*புதுமையே.*_


_*நம்பிக்கை என்னும் ரதத்தில் பயணித்து கொண்டு இருப்பவர்களுக்கு,* *வெற்றியின் இலக்கு* *தூரம் இல்லை.*

 கற்றுக் கொள்வீர்கள். 


_*சிறந்த மனிதர்களாக யாரும் பிறப்பதில்லை... அவரவர் நடவடிக்கைகளே அவர்களை சிறந்தவர்களாக்குகிறது.*_


_*எப்போதும் நிமிர்ந்து நிற்பவர்கள் மீது தான் அடி விழுகிறது.*_

_*வளைந்துக் கொடுப்பவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.*_


_*நாளைக்கு எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைக்கிறது நம்பிக்கை.*_

_*மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை.*_


 _*படித்தவர்களிடம் பேசுவதை விட. ஒன்றுமே படிக்காதவரிடம் பேசிப் பாருங்கள்... நிச்சயமாக  நிறைய கற்றுக் கொள்வீர்கள்....*_


எப்பொழுது உணவை நீங்கள்

ரசித்து 

சுவைத்து உண்கிறீர்களோ


எப்பொழுது நீங்கள் பிரச்னை வரும் போது பதட்டப்படாமல்

ஆழ்ந்து யோசிக்கிறீர்களோ


எப்பொழுது நீங்கள் எவரேனும் துன்பத்தில் இருக்கும்போது மனம் வருந்துகிறீர்களோ


எப்பொழுது நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளோரோடு மனித நேயத்துடன் நடந்து கொள்கிறீர்களோ


எப்பொழுது நீங்கள் இயற்கையை மனதார ரசித்து

ஆனந்தமடைகிறீர்களோ


அப்போதே நீங்கள் புரிந்து கொள்ளலலாம்

உள்ளிருக்கும் இறையோடு

நீங்கள் 

கைகுலுக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று.


_*யாரிடமும் கடன் வாங்காதே வாங்கிய கடனை திரும்ப அடைக்காவிடில் கடனை செலுத்த மறுபடியும் பிறக்க வேண்டும், அது போல் நம் கடமைகளை செய்யாவிடில் மீண்டும் பிறப்பு உண்டு.*_


_*உண்மை உள்ளங்களை வேதனைப்படுத்தினால் உனக்கு கடுகளவு நிம்மதியும் கூட கிடைக்காது.*_


_*கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை ஆயிரம் பொய்களை விட மோசமானதாகும்.*_


_*உண்மையை நீருக்கடியில்*_ _*புதைத்தாலும் நிச்சயம் ஒரு நாள்*_

_*அலையாய் வெளிவந்தே தீரும்.*_


_*உண்மைகள் சில நேரங்களில்,*_

_*தொலைந்து தான் போகுமே தவிர ஒரு போதும் தோற்றுப் போகாது.*_

 அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.


வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. 


வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.


இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். 


வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.


ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.


இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.


வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.


இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.


முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.


விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். 


ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”


பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.


“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”


“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”


அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.


வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.


தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். 


குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.


தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.


தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். 


ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.


மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான். 


பிரச்சனை தான் வேறு வேறு. 


நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.


ஆடுகள் முக்கியம் தான். 


ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???


சிந்தனை செய் மனமே......!!!

 சிறந்ததை கொடுக்க வேண்டும். ஆனால் அதுவும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றதாக இருந்தால் தான் சிறப்பென கருதப்படும். காலை வணக்கம் ‌


ஒரு நாட்டில் கண் பார்வை இல்லாத ஒரு மன்னன் ஆண்டு வந்தான்!


அவனுக்கு ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான்! ஒரு நாள் அவனை அழைத்து மகனே! இந்த தேசத்திற்கு நீ மன்னன் ஆகும் நேரம் வந்து விட்டது! நீ அரியணை ஏற்க வேண்டும் அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் உனக்கு எப்படி பட்ட துணை வேண்டும் என்று சொல்ல!


அதற்கு இளவரசன் அப்பா நம் நான்கு சிற்றரசன் மகள்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை நான் தேர்ந்து எடுக்க ஆசை படுகிறேன்! ஆனால் யாரை தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை!


நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் என்று சொன்னான். அதற்கு மன்னன் கவலை படாதே அந்த நால்வருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன் அதில் யார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களை நீ திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை நீ அரண்மனையில் இரு! உனக்கு உடம்பு சரியில்லை வயிறு வலியில் துடிப்பதாக சொல்ல போகிறேன் என்றார்.


நான்கு இளவரசிகள் அழைக்கப்பட்டார்கள். மன்னன் அவர்களிடம் சொன்னான் பட்டத்து இளவரசன் உடம்பு சரியில்லை அவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கு அதனால் நீங்கள் ஒரு சிறந்த சூப்பை தயார் செய்யுங்கள் முதலில் நாம் அதை சுவைத்து பார்ப்பேன்! எந்த உணவு நன்றாக இருக்கிறதோ அந்த உணவை சமைத்தவர் அடுத்த பட்டத்து இளவரசி ஆவார் என்று சொல்ல!


நான்கு இளவரசிகள் போட்டி போட்டு கொண்டு உணவை தயார் செய்ய ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மன்னரிடம் சுவைக்க எடுத்து வரப்பட்டது!


முதல் இளவரசி சிக்கனை கொண்டு நல்ல சூப் ஒன்றை தயார் செய்து இருந்தால்! மன்னர் சுவைத்து பார்த்தார் சுவை அலாதியாக இருந்தது.


இரண்டாம் இளவரசி காய்கறிகள் மற்றும் நிறைய மசாலாக்கள் சேர்த்து அருமையான சூப் தயாரித்து இருந்தார்! அதுவும் அமிர்தமாக இருந்தது.


மூன்றாவது இளவரசி வெண்ணெய் சேர்த்து மணக்கும் சூப் ஒன்றை தயார் செய்து இருந்தார்! அதுவும் சுவைக்க அமிர்தம் போல் இருந்தது!


ஆனால் நான்காம் இளவரசி செய்த சூப் உப்பு காரம் மசாலா இல்லாமல் சூடு அதிகம் இல்லாமல் இருந்தது சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை!


முதல் மூன்று இளவரசியும் நான்காவது இளவரசியை பார்த்து நகைத்தனர்!


கண்டிப்பாக முதல் மூன்றில் ஒருவர் தான் மன்னன் தேர்ந்து எடுப்பார் என்று முடிவு செய்து இருந்தனர்!


ஆனால் மன்னன் நான்காவது இளவரசியை தேர்ந்து எடுத்தார்!


அவையில் இருந்த அனைவரும் மன்னனிடம் ஏன் என்று கேட்க அதற்கு மன்னன் சொன்னார், முதல் மூன்று பேரும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் ஆனால் நான்காவது இளவரசி மட்டும் தான் இளவரசனுக்கு உடம்பு சரியில்லை வயிறு சரியில்லை அதனால் உப்பு, காரம், எண்ணெய் மற்றும் சூடு குறைவாக இருக்கும் சூப்பை தயார் செய்தார்!


அவர் தான் உண்மையில் குடும்பத்திற்கும் ஏன் நாட்டிற்கும் சிறந்தவராக இருப்பார் என்று தீர்ப்பை சொல்லி முடித்தார்!

Wednesday, May 8, 2024

 *காலை நேர சிந்தனை*




_*உங்களை புரிந்து கொள்ளாதவர்களிடத்தில் நீங்கள் நேர்மையான வாதங்கள் எத்தனை வைத்தாலும் தீர்ப்புகள் உங்களுக்கு*_

_*சாதகமாக இருக்காது.*_


_*அவர் உங்களை மதிக்கவில்லை என நினைப்பதும் தவறு. அவருக்கு உங்கள் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை.*_


_*உங்களுடைய மௌனத்தைச் சரியாக எவரால் மொழிபெயர்க்க முடியுமோ, அவருக்கு மட்டுமே உங்களுடைய மனதைப் பிடிக்கும் சக்தி உண்டு.*_


_*யாருக்கும் உங்களை கணிக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு உங்களைப் பற்றிய வதந்திகளே அதிகம் தெரிந்திருக்குமே, தவிர வலிகளை அல்ல.*_


_*வதந்திகளை உருவாக்குவது எதிரிகளின் வேலை பரப்புவது முட்டாள்களின் வேலை. அதனை புறம் தள்ளிவிட்டு கடந்து செல்லுங்கள்.*_

 *காலை நேர சிந்தனை*

( 08.05.2024)


*வெறுப்போ வெறுப்பு.*


     முன்பெல்லாம் நான் எனது கருத்துக்களில் பிடிவாதமாய் இருப்பேன்.நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று வாதிடுவேன்.


   மற்றவரின் கருத்து தவறு என்று நிரூபிக்கவும்,எனது கருத்தை நியாயப் படுத்த வும்  மிகவும் மெனக்கிடுவேன்.


  நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரனாய் பிறரின் தவறுகளை சுட்டிக் காட்டுவேன்.


   அதே நேரத்தில் எனது தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் "எனது பாட்டில் குற்றமா...".என்று சிவபெருமானை போல் நெற்றிக் கண்ணை திறந்து விடுவேன்.


   வச்சா குடுமி,செறைச்சா மொட்டை என்கிற கதை தான். உலகத்தை திருத்த வந்த அவதார புருஷன் மாதிரி பேசித் திரிந்தேன்.


   ஒரு கட்டத்தில் வாழ்க்கையே சலிப்பாகி விட்டது. ஏன் இப்படி ஓடுகிறோம், எதற்காக ஓடுகிறோம். இந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் இருக்கிறதே என்று ஒரே  வெறுப்பு.விரக்தி.


  உலகமே நமக்கு எதிராக சதி செய்வது போல் அனைத்தின் மீதும் ,அனைவரின் மீதும் ரொம்பவே  வெறுப்பு.


 முதலில் கண்ணாடியில் தெரிந்த உருவத்தை சரி பண்ண கண்ணாடியை சரி செய்ய முயற்சிப்பது போல எனது செயல்கள் இருந்தது.அதன் பின்னர்.....


  இந்த உலகம்,ஒரு கண்ணாடி.அது நம்மைத் தான் பிரதி பலிக்கிறது. வெறுப்பு வெளியே இருக்கிறது என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தேன். அது நமக் குள் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.


   ஆனாலும் அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டி ருந்தேன்.


   தீடிரென்று ஒரு நாள் ஓஷோவின் புண்ணியத்தில் படித்த "தம்மபதா" வின் வரிகள் நினைவுக்கு வந்தது.


  "நெருப்பை நெருப்பால் அழிக்க முடியாது. நீரால் தான் முடியும். அது மாதிரி வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது.அன்பு ஒன்றால் தான் அதை வெல்ல இயலும்."


  புத்தரின் அந்த தம்மபத வரிகள் தான் என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படு த்தியது. அவர் கூறிய உண்மை மிகவும் தெளிவாக புரிந்தது.


    நாளாக நாளாக என்னுள் பார்க்கத் தொடங்கியதும் வெறுப்பு உணர்வு குறை வது தெரிந்தது.


  கடந்த வருடம் ஜூன் மாதத்தில் சென்னையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வு க்கு சென்ற போது எனது உறவினர் ஒருவரை சந்தித்தேன்.


  வெறுப்பின் உச்சக்கட்டம் அவர். அவரை பார்த்தாலே உள்ளுக்குள் எரியும். அந்த மாதிரி ஆசாமி.


   வழக்கம் போல் வெறுப்பை உமிழும் பேச்சு.அனைவரையும் திட்டி தீர்த்து விட்டார்.ஒரு அரைமணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.


   அவர் அலை கடலாய் ஆர்ப்பரித்தார் . நானோ ஆழ்கடலை போல் அமைதியாய்  இருந்தேன்.


   சாதாரணமாக அவருடன் பேசினாலே நம்முள் வெறுப்பு உணர்வு துண்டப் பட்டு விடும்.


  ஆனால் அன்று அவ்வளவு நேரம் பேசியும் என்னுள் எந்த மோசமான உணர்வும் வரவில்லை. நான் மிகவும் ஆச்சர்யப் பட்டு போனேன்.


   அவரை பார்த்தாலே நமக்கு கோபம் வருமே, இன்று எப்படி இப்படி எனக்குள்!  என்று ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனேன்.


   என்னுள் ஒரு சிறு துளி வெறுப்பு உணர்வு கூட தோன்றவில்லை. உடலிலும் எந்த வித பாதிப்பும் இல்லை.


 

  அதன் பின் நானும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். இன்று வரை வெறுப்பு உணர்வு என்னுள் பெரிதாய் ஏதும் ஏற்படவில்லை.


   பால் பொங்குவது போல் சிலசமயம் லேசாய் எட்டிப் பார்க்கும். நாம் திரும்பி உள்ளே பார்த்தால், தண்ணீர் தெளித்தார் போல் அடங்கி விடும்.


   இன்றைக்கு whatsapp பிலும் முகநூல் பதிவுகளிலும் வெறுப்பு உணர்வுடன்  சிலர் பதிவிடுவதை காண்கிறேன்.


  சிலர் பிராமணர்களின் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். 

சிலர் பிடிக்காத நடிகர்கள் மீது.


   சிலர் முஸ்லீம் மதத்தின் மீது.

பலர் பாகிஸ்தான் மீது.

இப்போதைய ட்ரெண்ட் சீனாவை திட்டுவது.


   முழுக்க முழுக்க வெறுப்பை உமிழும் பதிவுகள். அவர்களை நினைக்கையில் எனக்கு மிக பரிதாபமாக இருக்கும்.


   நான் எனது வெறுப்பு உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி முப்பதுக்கும் மேல் நீண்ட ஆண்டுகள் கழித்து தான் என்னால் அதில் இருந்து மீள முடிந்தது.


  இவர்களில் பலருக்கு தங்களிடம் வெறுப்பு உணர்வு இருக்கிறது என்ற உணர் வே இல்லாமல் இருக்கிறார்கள்.


   இவர்கள் இதில் இருந்து வெளி வர எத்தனை பிறவிகள்  ஆகுமோ....பாவம்.




┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...


இந்த நாள் இனிய நாளாகட்டும்.



🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 ➖➖➖➖➖➖➖➖➖➖


🤔  *நாளும் ஒரு சிந்தனை*


உயர்வான நட்பிற்கு

உண்மையான அன்பிற்கு

உருவம் அவசியமில்லை. நல்ல

உணர்வுகள் போதும்..!!!


🏚️  *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*


       துளசிச்சாறுடன் தேன், கிராம்புத்தூள் சேர்த்து சாப்பிட *'தோல் நோய்கள்'* மறையும்.   


📰  *நாளும் ஒரு செய்தி*


     தபாலில் பணம் அனுப்பும் முறை 1880-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.


🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*


     வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.


💰 *நாளும் ஒரு பொன்மொழி*


     தூக்கம், உணவு, பேச்சு, சோம்பல் ஆகிய நான்கையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.


                        *-வள்ளலார்*


📆 *இன்று மே 8-*


   ▪️ *உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்.*


   ▪️ * ஐக்கிய நாடுகள் அனுசரிப்பு நாள்*


   ▪️ *1980-இல் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார மையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.*


         💐 *நினைவு நாள்* 💐


⭕1987- *வி.பி.சித்தன்* (தொழிற்சங்கவாதி)


⭕2005- *வலம்புரி ஜான்* (தமிழ் எழுத்தாளர், பேச்சாளர்)


➖➖➖➖➖➖➖➖➖➖

*(பகிர்வு)*

*மகதி எண்டர்பிரைசஸ்.*

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(08-மே)

*ஜீன் ஹென்றி டியூனண்ட்.*


🏆 அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.


🏆 ஒருமுறை சால்ஃபரீனோ என்ற நகருக்கு சென்ற போது வழியில் கொடூரமான போர்க்களக் காட்சிகளைக் கண்டார். அதை பார்த்து மனம் வருந்திய இவர் மக்களோடு இணைந்து, காயமடைந்த வீரர்களுக்கு உதவினார்.


🏆 தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, இவருக்கு போரும் அதன் அவலங்களும் மட்டுமே நினைவில் நின்றன. அதன் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் (A Memory of Solferino) என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார்.


🏆 அந்த புத்தகத்தில் உலகில் எங்கு போர் நடந்தாலும், காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். என்று குறிப்பிட்டார். பிறகு 1863ஆம் ஆண்டு அந்த அமைப்பான செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது.


🏆 நோபல் பரிசு தொடங்கப்பட்ட ஆண்டான 1901ஆம் ஆண்டு இவருக்கு முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதநேயத்தை உலகம் முழுவதும் பாரபட்சமின்றி உருவாக்கிய இவர் 1910ஆம் ஆண்டு மறைந்தார்.



*சுவாமி சின்மயானந்தா.*


👉 1916ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் ஆன்மீக கருத்துகளைப் பரப்பிய சுவாமி சின்மயானந்தா கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பிறந்தார்.


👉 உலகெங்கும் பல ஆசிரமங்களையும், மையங்களையும், பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும் ஆரம்பித்தார்.


👉 கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கிராம நலத்திட்டமான சின்மயா அமைப்பை உருவாக்கிய இவர் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி மறைந்தார்.

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*




8.05.2024(புதன்கிழமை)

*சிந்தனை துளிகள்*


 இல்லாதவர்கள் சொல்லும் உண்மையை விட 

இருப்பவர்கள் சொல்லும் பொய்க்குத் தான் சமுதாயத்தில் மதிப்பு அதிகமாகும்.!


காரணம் எதுவாக இருந்தாலும்,

சரியான நேரத்தில்,

சரியான முடிவை எடுக்கத் தவறினால்...

காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்.!!



ஒருவரை தெரிந்து கொள்வதைவிட புரிந்து கொண்டால் மட்டுமே அந்த அன்பு கடைசி வரை நிலைத்து நிற்கும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செய்தி துளிகள்*


📕📘“என் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;

B.Com முடித்துவிட்டு, C.A படிக்க வேண்டும் விரும்புகிறேன்;

என்னை வெட்டியவர்களும் நன்றாக படிக்க வேண்டும்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் நாங்குநேரியில் சக மாணவர்களால் சாதியரீதியிலான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை பேட்டி.

📕📘+ 2 துணைத் தேர்வுக்கான செய்திக்குறிப்பு மற்றும் துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு.

📕📘ஆசிரியர்களை பள்ளிகளில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ள வற்புறுத்தக் கூடாது. 

அமைச்சுப்பணிகளை ஆசிரியர்களை மேற்கொள்ள வற்புறுத்துவதாக புகார் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு.

📕📘ஆசிரியர் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற EMIS இல் சிறப்பு வசதி ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை செயலர் கடிதம் வெளியீடு.

📕📘பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை10-ம் தேதி வெளியீடு.

📕📘 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் / பணி நிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் (NORMS) என்னென்ன?

அரசாணை எண் 26, (ப.க.து) நாள்: 24.01.2024 ல் பத்தி 3 மற்றும் அரசாணை எண் 48, (ப.க.து) நாள்: 21.02.2024 ல் பத்தி 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி பொது மாறுதல் / பணி நிரவல் கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு.

📕📘அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது.

📕📘பிளஸ் 2 : விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ௹. 275 கட்டணம்

📕📘மாணவர் சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி

📕📘01.06.2024 நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

📕📘தமிழக கல்வித்துறையில்.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு பூர்வாங்க பணிகள் தொடங்கியது..

பணி நிரவல் மற்றும்..‌ பணி மாறுதல் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டது.                                         📕📘IT DECLARATION IN KALANJIYAM PORTAL NEW UPDATE

👉தற்போது 80CCE-யில் உள்ள அனைத்து investment type விவரங்களும் kalanjiyam portal-லில் பதிவு செய்து கொள்ளலாம்.

Example:tuition fee,fixed deposit etc..

👉ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் GPF,CPS,NHIS,PT(PROFESSIONAL TAX) போன்ற விவரங்களையும் பதிவு செய்யத் தேவையில்லை.

📕📘மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

📕📘12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

📕📘சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்து ₹53,120-க்கும், 1 கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹6,640-க்கும் விற்பனையாகிறது.

📕📘பிஎஸ்என்எல், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.

பிஎஸ்என்எல் அதிகாரிகள் 4ஜி நெட்வொர்க்கில் வினாடிக்கு 40-45 மெகாபிட் உச்ச வேகத்தை பதிவு செய்ததாகக் கூறியுள்ளனர்.

📕📘சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்!

சென்னை அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர் 

ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்த வருவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸ் சோதனை நடத்தி நடவடிக்கை

📕📘மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி!

கட்டணம் செலுத்தாமல் சென்றதை தடுத்த ஊழியர் மீது ஓட்டுநர் காரை ஏற்ற முயன்றுள்ளார்

சுங்கச்சாவடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📕📘SETC பேருந்துகளில் இனி யுபிஐ வசதி: 

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி நேற்று முதல் அமல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1,068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

📕📘சவுக்கு சங்கர் மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு: 

பெண்கள் இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

யூடியூப் சேனல் பெலிக்ஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு; சவுக்கு சங்கரை கைது செய்து விசாரணை செய்ய சென்னை போலீஸ் திட்டம் என தகவல்.

📕📘ரஷ்ய அதிபராக 5-வது முறையாக பதவியேற்றார் விளாடிமிர் புடின்!

சுமார் 24 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் புடின்,கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

📕📘ஐபிஎல் 2024: சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி தொடங்குகிறது.

📕📘சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்.

தமிழ்நாடு அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து நிதித்துறைக்குக் கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்.                                                             📕📘3 ஆண்டுகளை நிறைவு செய்த திமுக அரசு: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹அளவுக்கு மீறினால் பாலும் நஞ்சு..! அதிகம் குடித்தால் என்ன ஆகும்?

👉உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கியமானதாக உள்ளது.ஆனால் தேவைப்படும் அளவை விட பால் அதிகம் எடுத்துக் கொள்வது சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுகுறித்து காண்போம்.

👉பாலில் கால்சியம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், கலோரிகள் உள்ளது. பால் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கால்சியம் சத்து அதிகரித்து எலும்பு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

👉பால் விரைவில் சீரணமாகாத உணவு என்பதால் அதிகம் எடுத்துக் கொள்வது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தலாம். பாலை பெரும்பாலும் பலர் டீ, காபியாகவோ சர்க்கரை அதிகம் கலந்தோ சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

👉பாலில் அதிகமாக சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் சேருவது குறைகிறது. பால் அதிகம் குடிப்பதால் கொழுப்புகள் உடலில் அதிகம் சேர்ந்து இதய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஒரு நாளைக்கு மூன்று முறைக்குள் பால் குடிப்பது உடலுக்கு நலன் பயக்கும்.

 *தினம் ஒரு மூலிகை* *காரைச் செடி*



 இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த புதர் கனிகள் உள்ள உண்ணக்கூடியவை தானே வளர்ர்பவை இலை பழம் மருத்துவ பயன் உடையவை நரம்பு சதை ஆகியவற்றை சுருங்கச் செய்யும் தன்மையுடையது இலையை வேக வைத்து கடைந்து சாப்பிட வயிற்று கடுப்பு ரத்த சீதபேதி அதிசார பேதி குணமடையும் காரை பழங்களை காலை மாலை சாப்பிட்டு வர சூடு தணியும் இரைப்பை நுரையீரலில் முதலிய அக உறுப்புகள் பலப்படும் உலர்ந்த பழங்களை நீரில் இட்டு கொதிக்க வைத்து காலை மாலை சாப்பிட்டு வர சீதபேதி வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும் தேனீக்கள் அதிகமாக விரும்பும் பூக்களில் ஒன்றாகும் காரை பூ இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணக்கூடியது ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் காரை பழம் சாப்பிட்டால் 100% குணமாகும் விவசாய நிலங்களில் உயிர் வேலியாக இதை அமைக்கிறார்கள் நன்றி

 அழுத பிள்ளை பால் குடிக்கும்.

தட்டுங்கள் திறக்கப்படும்.

கேளுங்கள் கொடுக்கப்படும்.

தேடுங்கள் கண்டடைவீர்கள்.

படித்ததில் ரகசியத்தை உணர்ந்தேன். 

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. 

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. 

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. 

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. 

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது. ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.

தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. 

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். 

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். 

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. 

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். 

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. 

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். ராஜாவிடம் சொல்லிவிடுவேன். நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். 

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். 

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். 

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது. உழைப்போம் . . . .

உயா்வோம் . . . .

 *அட்சய திருதியை

 தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்*



1.அஸ்வினி - கதம்ப சாதம்தானம்.ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.2.பரணி - நெய்தானம் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.3.கிருத்திகை - சர்க்கரை பொங்கல் தானம்.பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.4.ரோகிணி - பால் அல்லது பால் பாயாசம் தானம்.ஏழைநோயாளிகளுக்கு உதவலாம்.5.மிருக சீரிஷம் - சாம்பார் சாதம் தானம்.உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.


6.திருவாதிரை - தயிர் சாதம் தானம்.ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.7.புனர்பூசம் - தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.8.பூசம் - மிளகு கலந்த சாதம் தானம்.கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.9ஆயில்யம் - வெண் பொங்கல் தானம்.பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.10.மகம் - கதம்ப சாதம் தானம்.கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.


11.பூரம் - நெய் சாதம் தானம்.மனநோயாளிகளுக்குஉதவலாம்.12.உத்திரம் - சர்க்கரை பொங்கல் தானம்.கால்நடைகளுக்கு கோதுமைகொடுக்கலாம்.13.அஸ்தம் - பால் பாயாசம் தானம்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.14.சித்திரை - துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்.விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.15.சுவாதி - உளுந்து வடைதானம்.வயதானவர்களுக்குஉணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.


16.விசாகம் - தயிர் சாதம் தானம்.கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.17.அனுசம் - மிளகு கலந்தசாதம் தானம்.வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.18.கேட்டை - வெண் பொங்கல் தானம்.பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.19.மூலம் - கதம்ப சாதம் தானம்.ஏழைகளுக்கு உதவலாம்.20.பூராடம் - நெய் சாதம்தானம்.ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.


21.உத்திராடம் - சர்க்கரை பொங்கல் தானம்.ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.22.திருவோணம் - சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல்தானம் செய்யலாம்.23.அவிட்டம்- சாம்பார் சாதம் தானம்.கால்நடைகளுக்கு துவரைவாங்கி கொடுக்கலாம்.24.சதயம் - உளுந்து பொடிசாதம் தானம்.கால்நடைகளுக்கு உளுந்து தீவனம்கொடுக்கலாம்.25.பூரட்டாதி -தயிர் சாதம் தானம்.26.உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.27.ரேவதி -வெண் பொங்கல்பிரசாதம் தானம் நல்லது.எல்லோரும் இன்புற்று இருக்க மகாலக்ஷ்மி தாயாரை பிராத்திக்கிறேன்.

Tuesday, May 7, 2024

ஆர்க்கிமிடிஸ்

*************

நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம்.  


ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.


ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.


ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.


தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.


அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.


ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.


ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.


ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.


கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.    


ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:


நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...


என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்...


வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாறு

செய்தித் துளிகள் - 07.05.2024 (செவ்வாய்க்கிழமை)


🌅🌅12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:-

👉திருப்பூர்               - 97.45%

👉ஈரோடு                   - 97.42%

👉சிவகங்கை           - 97.42%

👉அரியலூர்                - 97.25%

👉கோவை                    - 96.97%

👉விருதுநகர்                 - 96.64%

👉திருநெல்வேலி          - 96.44%

👉பெரம்பலூர்                - 96.44%

👉தூத்துக்குடி                 - 96.39%

👉நாமக்கல்                      - 96.10%

👉தென்காசி                    - 96.07%

👉கரூர்                            -   95.90%

👉திருச்சி                       - 95.74%

👉கன்னியாகுமரி     - 95.72%

👉திண்டுக்கல்           - 95.40%

👉மதுரை                    - 95.19%

👉ராமநாதபுரம்         - 94.89%

👉செங்கல்பட்டு      - 94.71%

👉தேனி                     - 94.65%

👉சேலம்                   - 94.60%

👉சென்னை           - 94.48 %

👉கடலூர்                - 94.36%

👉நீலகிரி                - 94.27%

👉புதுக்கோட்டை - 93.79%

👉தருமபுரி            - 93.55%

👉தஞ்சாவூர்           - 93.46%

👉விழுப்புரம்           - 93.17%

👉திருவாரூர்           - 93.08%

👉கள்ளக்குறிச்சி - 92.91% 

👉வேலூர்                - 92.53%

👉மயிலாடுதுறை - 92.38%

👉திருப்பத்தூர்       - 92.34%

ராணிப்பேட்டை - 92.28%

👉காஞ்சிபுரம்          - 92.28%

👉கிருஷ்ணகிரி      - 91.87%

👉திருவள்ளூர்          - 91.32%

👉நாகப்பட்டினம்    - 91.19%

👉திருவண்ணாமலை - 90.47%

🌹👉மொத்தம்                    - 94.56%

🌹👉புதுச்சேரி                    - 93.38

🌅🌅பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

👉இயற்பியல் பாடத்தில் 98.48% பேர்

👉வேதியியல் பாடத்தில் 99.14% பேர்

👉உயிரியல் பாடத்தில் 99.35% பேர்

👉கணிதம் பாடத்தில் 98.57% பேர்

👉தாவரவியல் பாடத்தில் 98.86% பேர்

👉விலங்கியல் பாடத்தில் 99.04% பேர்

👉கணினி அறிவியல் பாடத்தில் 99.80% பேர்

👉வணிகவியல் பாடத்தில் 97.77% பேர்

👉கணக்குப்பதிவியல் பாடத்தில் 96.61% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

🌅🌅ஆண்கள் vs பெண்கள் : +2 ரிசல்ட்டில் யார் டாப்?                             🌹👉தமிழகத்தில் +2 தேர்வில் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

🌹👉இதில், கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

🌹👉 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25,305 பேர் (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

🌹👉4,08,440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 3,93,890 பேர் (96.44%),                                                🌹👉மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் (100%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.                                                         🌅🌅மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில்                                      👉திருப்பூர் மாவட்டம்  97.45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

👉97.42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளது;

👉97.25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது;

👉90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது.

🌅🌅2024-25 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை - தொடக்கக் கல்வித் துறை

🌅🌅உபரி ஆசிரியர் பணிநிரவல் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 06.05.2024 வெளியீடு.

🌅🌅 2024-25ஆம் கல்வியாண்டிலும் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்படாமலேயே மாறுதல் கலந்தாய்வை மட்டும் நடத்திட பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,


👉Apply (EMIS) : மே 13 - 17

👉Seniority & Vacancy : மே 20

👉Claims & Objections : மே 21

👉Final Seniority & Vacancy : மே 23

👉மலைச்சுழற்சி : மே 24

👉SGT பணிநிரவல் : மே 28


🌹👉M-HM

👉within Block.   : மே 31

👉within Ed.Dist.: ஜூன் 1 (மு.ப)

👉within District : ஜூன் 1 (பி.ப)

👉Dist. to Dist.    : ஜூன் 3


🌹👉BT

👉within Block.   : ஜூன் 6

👉within Ed.Dist.: ஜூன் 7 (மு.ப)

within District : ஜூன் 7 (பி.ப)

👉Dist. to Dist.    : ஜூன் 8


🌹👉P-HM

👉within Block.   : ஜூன் 10

👉within Ed.Dist.: ஜூன் 11 (மு.ப)

👉within District : ஜூன் 11 (பி.ப)

👉Dist. to Dist.    : ஜூன் 12


🌹👉SGT

👉within Block.   : ஜூன் 13

👉within Ed.Dist.: ஜூன் 14 (மு.ப)

👉within District : ஜூன் 14 (பி.ப)

👉Dist. to Dist.    : ஜூன் 15

🌹👉பார்வையில் குறிப்பிடப்படாமல் இருப்பினும், தொடக்கக்கல்வித்துறையிலும் மாநில அளவிலான முன்னுரிமையை நடைமுறைப்படுத்திய அரசாணை 243ன் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கும் ஒன்றியம் தாண்டிய மாறுதல் இம்முறை நடத்தப்பட உள்ளதால் ஒன்றிய அளவில் இன்றுவரை இருக்கும் பதவி உயர்வுப் பணியிடங்கள் பறிபோவது உறுதியாகியுள்ளது.

🌅🌅அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.

🌅🌅ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி /அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு - தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

👉கணிதம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு.                                                         👉31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு.

👉அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு.

🌅🌅தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்: ஜூன் 14-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு.

🌅🌅வருவாய் ஈட்டும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகைக்கு எமிஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள.. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் வெளியீடு.

🌅🌅பள்ளிகளில் குளிர்சாதன வசதி வழங்கப்பட்டால் பெற்றோர்களே செலவை ஏற்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்

🌅🌅அராஜக அரசாணை 243 ஐ பின்பற்றியே கலந்தாய்வு  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🌅🌅நீட் தேர்வு இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் கருத்து.

🌅🌅தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

🌅🌅+2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

🌅🌅12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு

🌅🌅தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்டங்கள் குறித்து பீகார் மாநில கல்வித்துறை அதிகாரிகள் 250 பேருக்கு சென்னையில் பயிற்சி

👉3 கட்டமாக நடந்த பயிற்சியை 117  அதிகாரிகள் முடித்துள்ளனர்.

👉வரும் 25ம் தேதி வரை மீதமுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி நடக்க இருக்கிறது

👉"பள்ளிக்கல்வி - பீகார் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பயிற்சி"

👉தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் திட்டங்கள் குறித்து அறியும் விதமாக பீகாரைச் சேர்ந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் 117 பேருக்கு மூன்று கட்டமாக சென்னையில் பயிற்சி முடிந்தது. மொத்தமாக 250 கல்வித்துறை அதிகாரிகள் பயன்பெற உள்ளனர்*

👉புதுமைப்பெண், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், தகைசால் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறை உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்கள் குறித்து பயிற்சி

🌅🌅பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதி

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தகுதி பெற்று இந்திய அணி அசத்தல்

🌅🌅வெளி மாநிலம், வெளி மாவட்ட வாகனங்கள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் - ஆட்சியர்.

🌅🌅இ-பாஸ் குழப்பத்தால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.

🌅🌅ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் மீதான கல்வீச்சு: டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி பணியிட மாற்றம்.

🌅🌅கேரளக்கடலில் எழுந்த ராட்சத அலைகளால் கடற்கரையோரம் உள்ள வீடுகள் சேதம் - அரசு.

🌅🌅உக்ரைனுக்கு அமெரிக்கா தந்த 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை அழித்தது ரஷ்யா

🌅🌅சென்னை: ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்கா காவலாளியின் மனைவி மற்றும் மகளை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்துள்ளனர்;

புகழேந்தி, அவருடைய மனைவி  மற்றும் மகன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

🌅🌅முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த மனு மீதான விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

🌅🌅T20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றால் வீரர்களுக்கு தலா ரூ.83 லட்சம் பரிசு அளிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹தெரிந்து கொள்வோம்  .

👉சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்துதல் Diabeties can be Cured.

👉சர்க்கரை வியாதியில் இந்தியாவில் முன்னோடியாக இருக்கும் நாடு இந்தியா .

👉இந்தியாவில் சர்க்கரை வியாதியில் முதல் மாநிலம் தமிழ்நாடு .


🌹👉தமிழ் நாட்டில் முதலிடம் சென்னை.

👉நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகி விட்டது.

👉நமது பாரம்பரிய உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் அந்த உணவுகளை நாம் சாப்பிட தயாராக இல்லை .

👉ஏனென்றால் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.

👉சர்க்கரை நோய்க்கான காரணம் என்னவென்றால் உணவு முறைகளின் முரண்பாடுகள்தான்.  பரம்பரையாக வந்தால் கூட உணவு முறைகளால் முதலிடம். தடுக்க முடியும்.

👉நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அது கண்டீப்பாக உணவுகளால்தான் சாத்தியமாகும்.

👉உணவுகளை அடையாளப்படுத்தி  தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தலாம்.

👉சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு .

வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

👉பாகற்காயை நன்கு காய வைத்து பொடி செய்து காலை இரவு என்று இரண்டு வேலை சாப்பிட்டு வரலாம்.

👉துவர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுப் பொருட்கள் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

👉வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுப்படும்.

👉தென்னை மரப்பூவை நன்றாக காய வைத்து பொடி செய்து காலை இரவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .மற்றும் தளர்ந்து போன நரம்புகள் சரியாகிவிடும்.

👉கருவேப்பிலை , லவங்கப்பட்டை ,வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அற்புதமான பலன்  கிடைக்கும்.

👉சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்துவதில் ஆவாரம் பூவிற்கு முக்கிய பங்கு உண்டு  .ஆவாரம் பூவை தேநீராக சாப்பிடும் பொழுது நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

👉உடல் உழைப்பு அவசியம் தேவை. நடைபயிற்சி உடலை வருத்தி செய்யக் கூடிய சில வேலைகளை செய்து வியர்வை உண்டாக்க வேண்டும்.

👉நாம் உணவில் பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு , பீர்க்கங்காய் பிஞ்சு, புடலங்காய் பிஞ்சு ,பீன்ஸ் , அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வர வேண்டும்.

👉சிறுதானியங்கள் வரகரிசி, தினைஅரிசி ,சாமை , குதுரவாலி எல்லாமே அற்புதமான உணவு .இந்த உணவுகளை ஒரு வேளை (அ )இருவேளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய தன்மை உண்டு .

காட்டவுரி(அ)நீலி - தினம் ஒரு மூலிகை

 


*காட்டவுரி(அ)நீலி* கரும்பச்சை இலைகளை உடைய சிறு செடி நீல நிறச் சாறு உடையது இதனால் நீலி என பெயர் உண்டு எல்லா பாஷாணங்களையும் சுத்தி செய்ய வல்லது இலை வேர் மருத்துவ பயன் உடையது வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும் இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படும் அவுரி இலையை கொட்டைப்பாக்கு அளவு அரைத்து 250 மில்லி வெள்ளாட்டு பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலையில் மூன்று நாள் கொடுக்க மஞ்சள் காமாலை அந்தி மாலை தீரும் அவுரி வேர் 20 கிராம் அருகம்புல் 30 கிராம் மிளகு 3 கிராம் மையாய் அரைத்து புன்னகை அளவு காலை மாலை சாப்பிட்டு இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் தீரும் இம்மருந்தை நாள்தோறும் மூன்று வேளை உப்பு புளி நீக்கி சாப்பிட பாம்பு தேள் பூரான் செய்யான் ஆகியவற்றின் நஞ்சு நீங்கும் வேர் 30 கிராம் பெரு நெருஞ்சில் இலை 50 கிராம் அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கொடுக்க வெள்ளை தீரும்.

நன்றி


சிந்தனைத் துளிகள் - 07052024

வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதனும் இல்லை...

தவறே செய்யாதவன் மனிதனும் இல்லை...

ஆனால் தவறு என்று தெரிந்தும் மீண்டும் அதனை செய்பவன் 

மனிதனே அல்ல.!!


யாரையும் நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்...

தொடக்கத்தில் நான் இருக்கேன் என்பார்கள்...

முடிவில் நான் அப்பவே சொன்னேன்  

என்பார்கள்.!!


மறைத்துப் பேசுபவர்களை  நல்லவராகவும்...                                         

மனதில் பட்டதை பேசுபவர்களை கெட்டவராகவும்... 

சித்தரிக்கப்படுகிறார்கள் இவ்வுலகில்.!!!


உறவுனு சொல்லிக்க ஆயிரம் பேர் இருக்கலாம்...

ஆனால் நம் உணர்வை புரிந்து கொள்ள ஒருத்தராவது இருக்கனும்...

அப்போது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.!


இவ்வுலகில் நல்லவன் கெட்டவன் என்ற கணக்கெல்லாம் 

அன்பு,பாசம் போன்ற குணத்தை வைத்து இல்லை...

தேவைப்படும் வரை நாம் நல்லவன்...

தேவை முடிந்தால் நாம் கெட்டவன்.!!


நம்மால் முடியும் என்று நம்மை ஊக்கப்படுத்தும் 

மனிதர்களுடன் தான் பழக வேண்டும்.

ஏனெனில் அவர்கள் தான் நாம் விழும்போதெல்லாம் 

நம்மை தாங்கி முன்னேற்றி செல்வார்கள்.!!!                               


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖕


எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும்

ஒருவரிடம் பணம், பதவி, ஏதோ ஒரு விதத்தில் வெற்றி இருந்தால் அவர்களைச் சுற்றி அதிகம் பேர் இருப்பார்கள் நிறைய நண்பர்கள் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் அவர்கள் விரும்புவது உங்களை அல்ல. உங்கள் பணத்தை. உங்கள் பதவியை. உங்கள் வெற்றியை. உங்களால் கிடைக்கும் ஆதாயத்தை,நீங்கள் நேரடியாகக் கூட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லை.


உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் சில காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்.


இதில் என்ன குற்றம் என்று சொன்னால், இவர்கள் உங்களை விரும்புவதற்கு காரணமான, பணமோ, பதவியோ, இல்லாத நிலையில், அல்லது உங்கள் வெற்றியின் இறக்கத்தை கேள்விப்பட்ட நிலையில், சரசரவென்று உங்களை விட்டு அகன்று விடுவார்கள்.


நீங்களே அவர்களிடம் பேசினாலும் கூட, தெரியாதவர் போல் காட்டிக் கொள்வார்க


நீங்கள் சங்கடப்படாமல் இருக்கவேண்டும்

என்று சொன்னால், இதைப் போன்ற நபர்களை, நீங்கள் தனியாக பிரித்து, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.


இரண்டு விஷயங்களையும் சேர்த்தால் தீருவது இதுதான்.


உன்னைப் புகழ்பவர்கள், உன்னோடு உறவு கொள்பவர்கள், உன்னை விரும்புபவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கலாம். அவர்கள் எல்லோரையும் நீ நம்பினால் மோசம் போய்விடுவாய். அதிலே இருந்து தேர்ந்தெடுத்து சிலரை நம்பு, அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவார்கள்.


இது புகழ்பெற்ற சேட்டன் பகத் சொல்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.


எப்படி உறவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். யார் உங்களுக்கு நிஜ உறவு? யார் உங்களுக்கு நிஜமாக நண்பர்கள்? ஒரு குளம்.அதில் நிறைய தண்ணீர்.

நிறைய பறவைகள் வாத்துக்கள் எல்லாம் இருந்தன. கூடவே ஆம்பலும் நெய்தலும் என சில செடிகளும் அந்த குளத்திலே இருந்தன..


ஆகா நமக்கு எவ்வளவு நண்பர்கள் உறவுகள்...என்று அந்த குளம் நினைத்தது..


கடுமையான கோடை காலம் ஆரம்பித்தது


கொஞ்சம் கொஞ்சமாக நீர் குறைய ஆரம்பித்தது. அதிலிருந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அகன்றனர்.


தண்ணீர் முழுவதும் இல்லாத நிலையில் ஒரு பறவையோ ஒரு கொக்கோ அங்கே இல்லை.


குளம் காய்ந்த நிலையில் அங்கே ஆம்பலும் நெய்தலும் வாடி கிடந்தன ..


இப்பொழுது அந்த குள த்துக்கு ஒரு உண்மை புரிந்தது.


இந்த பறவைகள் நம்மிடம் உள்ள தண்ணீருக்காகத்தான் நம்மிடம் இருந்தன போலிருக்கிறது. ஆனால் நம்முடைய கஷ்டத்திலும் இந்த செடிகள் நம்மை விட்டு அகலாமல் இருக்கின்றன. .நம்மை உண்மையில் நேசித்தது இந்த செடிகள்தான்.நம் துன்பத்தில் துணையிருந்தது இவைதான்.என்று நினைத்ததாம்


இது உருவகக் கதை தான். இதில் கூட நிறைய கேள்விகள் கேட்கப்படலாம்.


ஆனால் இது சொல்லும் ஒரு செய்தி மகத்தானது.

ஆனால் இது சொல்லும் ஒரு செய்தி மகத்தானது.


வாழ்ந்தபோது கூடியிருந்து வாழ்ந்துவிட்டு சாய்ந்த போது விட்டு உறவும் நட்பும் இல்லை என்றால்...நிஜ உறவு நட்பு எது?


.உதட்டளவில் இருக்கக்கூடிய அந்த உறவுகளால் ஒருவருக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. அதனால் முதலில் எத்தனை உறவுகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்..


நண்பர்கள் இருக்கட்டும் அது பேச்சில்லை. ஆனால் நமக்கென்று இருக்கக்கூடிய முக்கியமான ஒரு சில உறவுகளையும் நட்புகளையும் நீங்கள் விட்டுவிட வேண்டாம். மற்ற உறவுகளை நட்பில் இருப்பவர்களை முழுவதுமாக நம்பி விட வேண்டாம்....

நவகிரகங்களின் சிறப்பு ..!!!

*****************************

*1.#சூரியன்.*

காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.

சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

திக்கு - கிழக்கு

அதிதேவதை - அக்னி

ப்ரத்யதி தேவதை - ருத்திரன்

தலம் - சூரியனார் கோவில்

நிறம் - சிவப்பு

வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்

தானியம் - கோதுமை

மலர் - செந்தாமரை , எருக்கு

வஸ்திரம் - சிவப்பு

ரத்தினம் - மாணிக்கம்

அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்


*2.#சந்திரன்.*

பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.

கடக ராசிக்கு அதிபதி.

திக்கு -தென்கிழக்கு

அதிதேவதை - ஜலம்

ப்ரத்யதி தேவதை - கௌரி

தலம் - திருப்பதி

நிறம் - வெள்ளை

வாகனம் - வெள்ளைக் குதிரை

தானியம் - நெல்

மலர் - வெள்ளை அரளி

வஸ்திரம் - வெள்ளாடை

ரத்தினம் - முத்து

அன்னம் - தயிர் சாதம்.


*3 . #அங்காரகன் (செவ்வாய்)*

இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.

மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

திக்கு -தெற்கு

அதிதேவதை - நிலமகள்

ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்

தலம் - வைத்தீசுவரன் கோவில்

நிறம் - சிவப்பு

வாகனம் - ஆட்டுக்கிடா

தானியம் - துவரை

மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி

வஸ்திரம் - சிவப்பு ஆடை

ரத்தினம் - பவளம்

அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்.


*4.#புதன்.*

இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி

திக்கு - வட கிழக்கு

அதிதேவதை - விஷ்ணு

ப்ரத்யதி தேவதை - நாராயணன்

தலம் - மதுரை

நிறம் - வெளிர் பச்சை

வாகனம் - குதிரை

தானியம் - பச்சைப் பயறு

மலர் - வெண்காந்தள்

வஸ்திரம் - வெண்ணிற ஆடை

ரத்தினம் - மரகதம்

அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்.


*5.#குரு.*

இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.

தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.

திக்கு - வடக்கு

அதிதேவதை - பிரம்மா

ப்ரத்யதி தேவதை - இந்திரன்

தலம் - திருச்செந்தூர்

நிறம் - மஞ்சள்

வாகனம் - மீனம்

தானியம் - கடலை

வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை

ரத்தினம் - புஷ்பராகம்

அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.


*6.#சுக்கிரன்.*

இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,

துலாம் ராசிகளுக்கு அதிபதி.

திக்கு - கிழக்கு

அதிதேவதை - இந்திராணி

ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்

தலம் - ஸ்ரீரங்கம்

வாகனம் - முதலை

தானியம் - மொச்சை

மலர் - வெண் தாமரை

வஸ்திரம் - வெள்ளாடை

ரத்தினம் - வைரம்

அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .


*7.#சனி*

இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.

மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

திக்கு - மேற்கு

அதிதேவதை - யமன்

ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி

தலம் - திருநள்ளாறு

நிறம் - கருமை

வாகனம் - காகம்

தானியம் - எள்

மலர் - கருங்குவளை, வன்னி

வஸ்திரம் - கருப்பு நிற ஆடை

ரத்தினம் - நீலம்

அன்னம் - எள்ளுப்பொடி சாதம்.


*8.#ராகு*

இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

திக்கு - தென் மேற்கு

அதிதேவதை - பசு

ப்ரத்யதி தேவதை - பாம்பு

தலம் - காளத்தி

நிறம் - கருமை

வாகனம் - நீல சிம்மம்

தானியம் - உளுந்து

மலர் - மந்தாரை

வஸ்திரம் - கருப்பு நிற ஆடை

ரத்தினம் - கோமேதகம்

அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்.


*9.#கேது*

இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

திக்கு - வட மேற்கு

அதிதேவதை - சித்திரகுப்தன்

ப்ரத்யதி தேவதை - பிரமன்

தலம் - காளத்தி

நிறம் - செம்மை

வாகனம் - கழுகு

தானியம் - கொள்ளு

மலர் - செவ்வல்லி

வஸ்திரம் - பல நிற ஆடை

ரத்தினம் - வைடூரியம்

அன்னம் - கொள்ளு சாதம்