Monday, May 20, 2024

ரயில் பெட்டிகளில் உள்ள வெள்ளை மஞ்சள் நிற கோடு

01

இந்திய ரயில்வே ஏப்ரல் 16, 1853 அன்று தனது சேவையை தொடங்கியது, முதல் ரயில் மும்பையிலிருந்து தானே வரை 33 கி.மீ தூரத்தில் பயணித்தது.


02

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்திய ரயில்வே துறையில், ரயில் பெட்டிகள் மீது மஞ்சள், வெள்ளை, பச்சை நிறத்தில் கோடுகள் இருப்பதற்கும் தனிப்பட்ட காரணம் உள்ளது.


03

இந்திய ரயில்வே பயணிகளின் போக்குவரத்தில் பெரும் பங்களிப்பை பெற்றது. 1951ல் இந்திய ரயில்வே தேசிய மையமாக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் மற்றும் உலகின் 2 ஆவது பெரிய நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.


04

பொதுவாக ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சிறு, சிறு விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமல் இருக்கலாம்.


05

அதில் ஒன்று தான் ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது இருக்கும் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள். இந்த கோடுகள் எதை அடையாளப்படுத்துகிறது என பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


06

இந்தியாவில் இயக்கப்படும் விரைவு வண்டிகள், அதிவிரைவு வண்டிகள் நீலநிறங்களில் இருக்கும். இந்த நீலநிற ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளைக் கோடு இருந்தால் முன்பதிவு இல்லாத (unreserved coach) பெட்டிகள் என்று அர்த்தம்.


07

மஞ்சள் நிற கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நலம் முடியாதவர்களுக்கு சிறப்பு பெட்டி என்று அர்த்தம். இதேப்போன்று பச்சை மற்றும் கிரே நிறத்தில் கோடுகள் இருந்தால் அது மகளிருக்கான சிறப்பு பெட்டிகளாகும்.


08

ரயிலில் பயணிக்கும் பயணிகள் வசதிக்காக இந்திய ரயில்வே இதுப்போன்ற அடையாளங்களை ரயில் பெட்டிகள் பயன்படுத்துகின்றன.

வங்கியில் வாடிக்கையாளரின் கதறல்...!

*!*

வாடிக்கையாளர்:

சார் பணம் எடுக்கணும்


வங்கி ஊழியர்:

ஏடிஎம்மில் போய் எடுத்துக்கனும் இங்கே தர மாட்டோம்....


வாடிக்கையாளர்:

சார் பணம் கட்டணும்


வங்கி ஊழியர்:

வெளிய போய்ட்டு டெப்பாஸிட் மெஷின் இருக்கு அதில் கட்டுங்க சார்.


வாடிக்கையாளர்:

சார் பாஸ்புக் ஆவது என்ட்ரி போட்டுக் கொடுங்க


வங்கி ஊழியர்:

அதோ இருக்கு பாருங்க பாஸ்புக் என்ட்ரி மிஷின் அதுல போய் போட்டுக்கோங்க


வாடிக்கையாளர்:

சார் லோன் வேணும்:


வங்கி ஊழியர்:

சார் லோன் தர நாங்க ஏஜென்ட் நியமனம் பண்ணியிருக்கோம் முன்னாடி அவங்க கிட்ட போய் ஆலோசனை வாங்கிட்டு வாங்க.


கடுப்பாகிப் போன வாடிக்கையாளர்


 நீங்க எல்லாம் எதுக்குய்யா  சம்பளம் வாங்கிட்டு இங்க இருக்கீங்க எல்லாத்துக்கும் மிஷின் இருக்கு அதை வேடிக்கை பார்க்க தான் நீங்க இருக்கீங்களா எனக்கு மிஷினில் பணம் கட்ட தெரியாது இப்ப எப்படி கட்டுறது...


வங்கி ஊழியர்

சார் வெளியே செக்யூரிட்டி இருக்கிறார் அவர் சொல்லித் தருவார் நீங்க போய் அவர்கிட்ட கத்துக்கங்க...


வாடிக்கையாளர்:

அப்படின்னா உங்க ஒட்டு மொத்த வேலையும் ஒரு செக்யூரிட்டி தான் பார்க்கிறார் அப்படித்தானே.....


இதுதான் இன்றைய நிலை நிஜமா?

கோபுரம் தாங்கி - தினம் ஒரு மூலிகை

 ****


நாற் பட்டையான தண்டுகளில் அடுக்கான முழுமையான இலைகளை உடைய மிக சிறு செடி பூக்கள் இலை கோணங்களில் காணப்படும் விளைநிலங்களில் காணப்படும் இலை வேர் மருத்துவ பயன் உடையது இலை சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமுறகாய்ச்சி தலை முழுகி வர தலை மயிர் உதிர்வது நிற்கும் மண்டை கொதிப்பு தனியும் மயிர் செழித்து வளரும் கரப்பான் புழுவெட்டு காலஞ்ச படை ஆகியவை தீரும் வேரை நிழலில் உலர்த்தி பொடித்து சமன் கற்கண்டு பொடி கலந்து காலை மாலை அரை தேக்கரண்டி நெய்யில் சாப்பிட்டு வர எலும்பு நரம்பு தசை ஆகியவை வலுப்படும் உடல் உறுதியாக இருக்கும் இலை பொடி வில்வ இலை பொடி பனங்கற்கண்டு மூன்றையும் சம அளவு எடுத்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 40 நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணரலாம் சிறுநீர் எரிச்சல் குணமாக கோபுரம் தாங்கி சிறு பிழை நெருஞ்சில் வெள்ளெறி விதை நிழலில் உலர்த்தி ஒன்று இரண்டாக இடித்து வைத்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து 500 மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் அருந்த சிறுநீர் நன்கு வெளியேறும் எரிச்சல் குணமாகும்.

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.

இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு.. இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க்கொண்டிருக்கிற

திசை வேறு. கரை சேர நினைக்கிற

மனிதர்களின் கதை இது.

சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப்பிடித்துக்

கொள்கிறார்கள். சிலர்

நாயின் வாலைப் பற்றிக்

கொள்கிறார்கள்.


ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர

விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.

ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்..


ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற

ஆசையில் ஒருத்தன் நீந்திச்சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம்

ஆகியும் கரை திரும்பவில்லை.

நடு ஆற்றில் போராடிக்

கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற

நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக்கொண்டு உன்னால் வர

முடியவில்லை என்றால்

பரவாயில்லை... அதை விட்டுவிடு’’.


ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான் ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்.. இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது..

ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே.

கரடிக் குட்டி’’


தவறாகப் பற்றுகிறவர்கள்

தடுமாறிப் போகிறார்கள்.

சரியாகப் பற்றுகிறவர்கள்

கரையேறி விடுகிறார்கள்.

பற்றையே விடுகிறவர்கள்

கடவுளாகி விடுகிறார்கள்!

ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோவில்..!!

 🛕              


இந்த கோவிலில் வழிபாடு செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்குகிறதா?


🌸 கோவில் என்றாலே அதில் பழங்காலத்து பெருமைகளும், தனிச் சிறப்பும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் பெருமைமிக்க கோவில்களுள் ஒன்றான ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அதிசயங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.


அமைவிடம்:


🌸 இந்த கோவில் புதுச்சேரி நகரின் மைய பகுதியில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.


🌸 கோவிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் 5 சிலைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.


🌸 ராஜகோபுரத்தின் முன்புறம் சிவன் அவதாரங்களும், பின்புறம் பெருமாள் அவதாரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒன்றாக அமைந்து உள்ளது.


🌸 இந்த சிற்பங்கள், சிவன் மற்றும் பெருமாள் இருவரும் ஒரே இறைவனின் வெவ்வேறு வடிவங்கள் என்று கூறுகின்றன. ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோவிலின் ராஜகோபுரம் இந்த இறை ஒற்றுமையை அழகாக வெளிப்படுத்துகிறது.


சிறப்பம்சம்:


🌸 கோவிலின் கிழக்கு வாயிலில் அமைந்துள்ள ராஜகோபுரம் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையாக உள்ளது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.


🌸 இந்த கோவிலில் காலையில் அபிஷேகம் செய்யும் போது, ​​சிலை மேலே தானாகவே தண்ணீர் ஊற்றும் அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது.


🌸 கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொடி மரத்தின் உச்சியில் அமைந்துள்ள மணிகள் காற்றில் கலந்து ஓசையை ஏற்படுத்துகின்றன.


🌸 கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.


🌸 இக்கோவிலில் வழிபாடு செய்பவர்களுக்கு நவக்கிரக தோஷங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது.

சேதாரம் செய்கூலி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தங்க நகைகள் வாங்கும்போது சேதாரம் செய்கூலி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு… சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?

ஒரு பவுன் தங்கசெயினுக்கு

1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்… இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்

8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது… ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்…

இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்…

ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள்.. ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்…

ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை…!

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்…!

1 கிராம் தங்கம் ரூ. 6850/-

8 கிராம் தங்கம் ரூ. 54,800/-

1 கிராம் செம்பு – 752/-

1.5 கிராம் செம்பு – 1128/-

6.5 கிராம் தங்கம் – 44525/-


6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை - 44525+1128=45653


1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் – 54,800- 45,653= 9147/-


சேதாரம் 1.5 கிராம் = 10275/-


1 பவுனுக்கு மொத்த லாபம் 9147+10275 = 19422


என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்…!

குளியல் !

 

————–

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.  அழுக்கு போகவா… நிச்சயம் கிடையாது..


மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.  சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா… கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும். இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.  சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம். 


வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை, எல்லோரும் பயன்படுத்தும்படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.  நடிகர்களை நடிக்க விட்டு நம் தலையில் கட்டிவிட்டார்கள்.


இதன் மூலம் என்ன ஆனது..?

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலகையில்வாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.  நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது. சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது. 


இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது. நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.


மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம். வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.


நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. 

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். 

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். 

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள். குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும். 

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு… உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும். 

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.


வியக்கவைக்கிறதா… 


நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.  பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். 

புத்தி பேதலிப்பு கூட சரியாகும். 

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம். 


குளிக்க மிக நல்ல நேரம் – சூரிய உதயத்திற்கு முன்..


குளிக்க மிகச் சிறந்த நீர் – பச்சை தண்ணீர்.


குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.  இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்.

உலக அளவியல் தினம் - (20-மே)

 *இன்றைய நாள்..*

👉 நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று அளவியலை சார்ந்தே உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது.


👉 முதன்முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன்மூலமாக வெவ்வேறிடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.



*உலக தேனீக்கள் தினம்.*


🐝 உலக தேனீக்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.


🐝 நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்ரன் ஜான்ஸாவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது மே 20ஆம் தேதியை உலக தேனீக்கள் தினமாக அறிவித்தது.


🐝 உலக தேனீ தினம் என்பது சுற்றுச்சூழல் அமைப்பில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கைகளின் பங்கை அங்கீகரிப்பதாகும்.


🐝 தேனீக்களின் அவசியம் மற்றும் தேனீக்களின் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

*முக்கிய நிகழ்வுகள்...*


👉 1570ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார்.


👉 1998ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.


👉 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான த.பிரகாசம் மறைந்தார்.

நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்

நீங்கள் Google Map உதவியுடன் 

செல்லும் போது வழி தவறினால், 

Google Map உங்களை

கண்டிக்கவோ

அல்லது

திட்டுவதோ கிடையாது

என்பதை 

நீங்கள் கவனித்திருக்கிறீர்களா. 


ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி  , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயுவையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ 

என்று கத்துவதில்லை.


அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.


நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை  அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல.


இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது.


தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு.


அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த  வேண்டும்


உங்கள் குழந்தைகள், மனைவி, சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்.


வாழ்க்கை இனிமையாக இருக்கும்... 


இனியவை_கூறல்

பிச்சை பாத்திரம்

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.


அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.


இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.


ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.


முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.


சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.


பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.


இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..


எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.
யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.


அந்த துறவி “அடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..


பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.


துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.


பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...


துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.


பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.


துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...


மெள்ள மெள்ள...


மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!


பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.


ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.


பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!


“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.


இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு *ஓட்டில்* (Vote) பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.


*ஓட்டின்* மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.


படித்ததில் பிடித்தது.

ஆணின் "இதயத்தை" தொட்டுப் பாருங்கள்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அணைத்து பெண்களும் கட்டாயம் படிங்க???
ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை
ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு
ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்,
? "நேரம் நெருங்கிவிட்டது,
பிரசவ வலி நாளை அல்லது
நாளை மறுநாள் கூட வரலாம்..
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்..
? இதை கேட்ட அவள் கணவனுக்கு
நெஞ்சில் ஆனந்தம் பொங்கி
இரு கண்களை மறைக்கிறது,
? அன்று இரவே கணவன் தன் மனைவியின்
வயிற்றில் காதை வைத்துப் பார்க்கிறான்,
? "என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி
கேட்க நாளை இன்நேரம் என் மகனோ,
மகளோ என் கையில்... என்கிறான்,
? அதை கேட்க மனைவி எனக்கு
ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல,
இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான்
வேண்டும் என்று கணவன் சொல்ல
ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்,
? படுக்கையில் தன் கணவன் அருகில்
நெருங்கி வந்து அவன் கை விரலை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள்,
? தூக்கத்தில் இருந்த கணவன்
விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.
? "என்னவென்று தெரியவில்லை
இதயம் படபடவென துடிக்கிறது,
எனக்கு தூக்கமே வரவில்லை
பயமாக இருக்கிறது", என்று சொல்லி
கண்கசிகிறாள் அவன் மனைவி.
? உடனே இழுத்து தன் மார்போடு
மனைவியை அனைத்தவன்
அவள் கண்ணீரை துடைத்து
அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.
? அவள் நினைத்தால் போல்
திடீரென பிரசவ வலி வந்தது.
பயத்திலும் கடுமையான
இடுப்பு வலியிலும் கட்டிலேயே
துடித்து அழ ஆரம்பித்தாள்,
? என்ன செய்வது என தெரியாது
முழித்த கணவன்
அவள் துடிப்பதை காண இயலாமல்
அப்படியே அவளை தூக்கிக்கொண்டு
காரில் சிட்டுக் குருவியை போல்
பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான்,
? இரவு நேரம் என்பதால் உடனே
தன் மனைவியின் பெற்றோர்களுக்கு
தகவல் தெரிவித்தான்,
? ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்க
அவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும்
பயங்கரமாக கேட்டது,
? இரு கைகளையும் பிசைந்து கொண்டு
பிரசவ வார்டின் வெளியில்
இங்கே அங்கே என சுற்றுகிறான்.
? "அம்மா! அம்மா ..!" என்று
மனைவி வலியில் துடிக்க
அழத் தெரியாத அவள்
கணவனுக்கும் அழுகை வந்தது.
? "ஆண்டவா என் மனைவியின்
முதல் பிரசவம் இது,
தாய்கும் பிள்ளைக்கும் எந்த
ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது"
என்று உலகின் உள்ள
எல்லா கடவுளிடம் வேண்டினான்.
? நேரம் ஆக ஆக அவனுக்கு
முகமெல்லாம் வேர்த்து கொட்டியது,
பிரசவ வலியில் தன் மனைவி
துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள
இயலவில்லை.
? சற்று நேரத்தில் திடீரென
மனைவியின் குரல் அமைதியானது.
கணவன் என்னாசோ! ஏதாச்சோ! என
மிகவும் பயந்துபோனான்,
? மீண்டும் ஒரு அலரல்...
? அதை கேட்ட கணவன்
ஆண்டவா என் மனைவிக்கு
இவ்வளவு சித்திரவதையா?
என தலையில் கை வைத்தவாறு
இருக்கையில் அமர்ந்து மனைவியை
அவள் தியாகத்தை நினைத்து
கூணி கூறுகிப்போனான்,
? அப்போது ஒரு நர்ஸ் மட்டும்
வெளியே வந்து
உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம்
பயப்படும்படி ஒன்றுமில்லை,
தாராளமாக உள்ளே சென்று
பாருங்கள் என்றார்.
? காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன்
முதலில் தன் மனைவியை பார்க்கிறான்,
அவள் இன்னும் கண் திறக்காமல்
மயக்கத்தில் சோர்ந்து படுத்திருக்க
அடுத்து எங்கே என் குழந்தை என
அவன் கண்கள் ஒரு வழியாக தேடி
தாயின் அருகில் குழந்தை இருப்பதை கண்டு
மெதுவாக நகர்ந்து பூமியின் பாதம் படாத
சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு
முத்தமிட்டு அதன் தலையை மெதுவாக
கோதிவிடுகிறான்.
? தந்தையின் கை விரல் பட்டவுடன்
சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.
?? யார் சொன்னது பெண்கள் மட்டும்தான்
உயிரை சுமக்கின்றனர் என்று.
♥ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும்
ஒவ்வொரு ஆணின் "#இதயத்தை"
தொட்டுப் பாருங்கள்,
அவன் வாழ்நாள் முழுவதும்
அந்த #பெண்ணின் நினைவுகளையும்
#குடும்ப பாரங்களையும் சுமந்தே மடியும்
உன்னதமான படைப்பு தான் #ஆண்..

ஐயப்பனை காண இருமுடி எதற்கு?

இருமுடி பற்றி ஒர் பார்வை.. irumudi

இரண்டு அறைகளாகப் பிரித்து அதில் புனிதமான நெய்யை கொண்டும் ஐய்யப்பன் விக்கிரகத்தின் மீது நெய் அபிஷேகம் செய்யப்படும்.

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் .

முதல் காரணம்:

பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காண செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு…

இதுவே நாம் இருமுடியை எடுத்து செல்லும் காரணம்…. ஸ்வாமியே சரணம் ஐயப்பா…



இருமுடி கட்டுதலும் அதற்கு தேவையான பொருட்களும்

இருமுடி கட்டுதலும் அதற்கு தேவையான பொருட்களும் !!
 ஐயப்பன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே விஷயம் இருமுடி. ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், அய்யனின் திருமேனி அபிஷேகத்துக்கு நெய்யையும், பு+ஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம்.

 வீடுகளில் வைத்து கட்டும் போது சபரிவாசனே அங்கு வாசம் செய்வான் என்று கூறுவார்கள். ஐயப்பனின் அருள் ஒளி வீசும். இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து படத்தின் முன்பு நெய்விளக்கேற்றி வைக்க வேண்டும். இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபு+ஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.

 குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்பன் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள். இருமுடி கட்டும் பக்தர் குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய்நிறைக்க தொடங்கும் போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.

 நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பு+சி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

 அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊது பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கல்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிபருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

 முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்குத் தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

 வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான தின்பண்டங்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள். இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

 தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையை தொடங்க வேண்டும்.

 இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது. கோவில்களில் வைத்தும் இருமுடி கட்டி புறப்படலாம்.

 பள்ளிக்கட்டு சபரிமலைக்கு… யாரைக் காண.. சுவாமியைக் காண… என்ற சரண கோஷத்தோடு மலை ஏறுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

No Claim Bonus

மோசமான ஓட்டுனர்களுக்கு மட்டுமே கார் காப்பீடு அவசியம் என்று மக்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். நன்றாகவும் கவனமாகவும் வாகனம் ஓட்டும் ஒருவர் தங்கள் காப்பீட்டிலிருந்து எதையும் பெறமாட்டார் என்ற எண்ணமும் மக்களிடம் உண்டு. ஆனால், இன்சூரன்ஸ் காப்பீடு வழங்கும் நிறுவனம், வாகனத்திற்கு பாலிசி எடுக்கப்பட்டு இருக்கும் வருடத்தில்,எந்த உரிமை கோரல்களையும் செய்யாமல் இருந்தால், அதற்கு வெகுமதியாக ஒரு தொகையை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கு பெயர் தான் NO CLAIM BONUS.

இது வாகன காப்பீட்டிற்கு மட்டும் இல்லை, மருத்துவ காப்பீடு என்று பல்வேறு வகையான காப்பீட்டு திட்டங்களுக்கும் பொறுத்தும். அதாவது, ஒரு நபர் தன்னுடைய தேவைக்கு என்று மருத்துவ காப்பீட்டை எடுக்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த ஆண்டு முழுவதும், அவர் காப்பீட்டை பயன்படுத்தவே இல்லை என்றால் அதற்கு ஒரு தொகை போனசாக வழங்கப்படும். ஒரு வேலை அவர், அந்த குறிப்பிட்ட ஆண்டு, உடல் நிலை சரி இல்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதற்கு காப்பீட்டை பயன்படுத்தி, பணம் பெற்று, அதை கொண்டு மருத்துவ கட்டணத்தை செலுத்தி இருந்தால், இந்த NO CLAIM BONUS கிடைக்காது.

இந்த NO CLAIM BONUS மூலம் கிடைக்கும் தொகையை அடுத்த வருடம் பிரிமியம் தொகை செலுத்தும் போது, அதில் கழித்து கொள்ளப்படும். இது வாகனத்தை மிக சரியாக பயன்படுத்தியதற்கு, வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும் ஒரு வெகுமதி ஆகும். காப்பீட்டு வழங்கும் நிறுவனங்கள் அதிகபட்சமாக 50 சதவிதம் அளவிற்கு தள்ளுபடை வழங்கும். இது, தொடர்ந்து ஐந்து வருடங்களின் எந்த உரிமைகோரல்களும் இல்லாமல் இருந்தால், 5 ஆண்டுகளின் முடிவில் வழங்கப்படும். 50 சதவிதம் தான் அதிகபட்ச தள்ளுபடியாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே 50 சதவிதம் தள்ளுபடியை பெற்றுவிட்டால், அதன் பின்னர், வேறு எந்த ஒரு ஆண்டிலும், உரிமை கோராமல் விட்டாலும், அதே 50 சதவிதம் தான் நீடிக்கும்.

NO CLAIM BONUS தள்ளுபடி மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியத்திற்கு பொருந்தாது. இது சட்டப்படி கட்டாயமாக இருக்கும் அடிப்படை காப்பீடு என்பதால், அதற்கு பொருந்தாது. பொதுவாக, மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியம் மொத்த பிரீமியம் தொகையில் 20 சதவிதம் வரை இருக்கும்.

NO CLAIM BONUS கணக்கிடுவதில் சில குழப்பங்கள் எழுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக NO CLAIM BONUS என்பது, மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியத்தை கழித்துவிட்டு தான் கணக்கீடு செய்யப்படும். அதாவது, மொத்த பிரிமியம் தொகையில், மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியம் எவ்வளவு என்பதை கழித்த பின்னர், மீதம் இருக்கும் தொகையை கணக்கில் கொண்டு தான் NO CLAIM BONUS கணக்கிடப்படுகிறது. எனவே, செலுத்தும் பிரிமியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை NO CLAIM BONUS ஆக வரும் என்று கணக்கிடும் போது, மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டு பிரீமியத்திற்கு எவ்வளவு கட்டணம் என்பதை கழித்துவிட்டு தான் NO CLAIM BONUS எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கிட வேண்டும்.

Sunday, May 19, 2024

கோங்கிலவு - தினம் ஒரு மூலிகை

*கோங்கிலவு*.  இலவம் பஞ்சு மரவகை சார்ந்தது இந்த மரத்தில் கூம்பு வடிவ முட்கள் உடையது செந்நிற மலர்களையும் வெள்ளை நிற பஞ்சு உடைய வழுவழுப்பான உருண்டை வடிவ காய்கள் உடையது ஆற்றங்கரை காடுகளில் தானே வளரும் இதன் இலை பூ விதை பட்டை பிசின் பஞ்சு வேர் ஆகியவை மருத்துவ பயனுடையது இலை அக அயார்சியை தனிக்கும் பூ சிறுநீர் பெருக்கி மலச்சிக்கல் அகற்றும் விதை குருதிப் போக்கை அடக்கும் காமம் பெருக்கும் பட்டை சிறுநீர் பெருகும் வேர் உடல் பலத்தையும் வெப்பத்தையும் மிகுக்கும் 20 இலைகளை அரைத்து பாலில் கலக்கி வடிகட்டி கொடுக்க வாத கடுப்பு தீரும் 20 கிராம் பூவை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி குடிக்க மலச்சிக்கல் அகழும் சிறுநீர் பெருகும் 4 கிராம் விதை 2 சீரகம் ஒரு கிராம் வால்மிளகு மென்மையாய் அரைத்து 250 மில்லி மோரில் கலைக்கு காலையில் மட்டும் பருகிவர நீர் கடுப்பு நீர் சுருக்கு சிறுநீரில் ரத்தம் சீல் போதல் குணமாகும் 20 கிராம் பட்டையை பால் அல்லது இளநீர் விட்டு அரைத்து பிழிந்து காலை மாலை கொடுத்து வர வெள்ளை ரத்த வெள்ளை சீழ் போதல் குணமாகும்.


நன்றி.

Saturday, May 18, 2024

கொள்ளுக்காய் வேலை - தினம் ஒரு மூலிகை

 **

சிறகு கூட்டில்களையும் உச்சியில் கொத்தான செந்நீல நிற மலர்களையும் தட்டையான வெடிக்க கூடிய காய்களையும் உடைய சிறு செடி சாலையோரங்களில் தரிசி நிலங்களில் தானாக வளரும் செடி வேர் மருத்துவ பயன் உடையது கோழை அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் வீக்கம் கட்டிகளை கரைத்தல் ஆகிய மருத்துவ குணமுடையது வேருடன் சம அளவு மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வர கண்ட மாலை வீக்கம் கரையும் 10 கிராம் வேருடன் 5 கிராம் மிளகு சிதைத்து அரை லிட்டர் நீரில் ட் நூறு மில்லியாக காய்ச்சி 50 மில்லி அளவாக காலை மாலை சாப்பிட்டு வர பித்த நோய்கள் கல்லீரல் மண்ணீரல் சிறுநீரகம் ஆகியவற்றில் உண்டான வீக்கம் வயிற்று வலி சரியா காய்ச்சல் ஆகியவை தீரும் இரண்டு கிராம் வேரை மோரில் அரைத்து கலக்கி வடிகட்டி கொடுத்து வர வீக்கம் பாண்டு முகப்பரு கட்டிகள் ராசப்பறவை ஆகியவை குணமாகும் வேரை நீரில் கொதிக்க வைத்து கொப்பளித்து வர வாய்ப்புண் பல் வலி ஆகியவை தீரும்.


நன்றி.

இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

**

வாதம் தானே வயிற்றில் இருந்து தோன்றி பலவீனமான இடங்களில் திரிந்து வலியை உண்டு பண்ணும்.. தனக்கு வரும் நோய்களை இது குணமாகாது இது முற்றிவிடும் என கற்பனை தானே நாட்பட்ட நோய்களாக மாற்றிவிடுகிறது.. எனது தனித்துவமான நோய்க்கு தனித்தன்மையான மருந்து மருத்துவம் என தேடி தேடியே நோய் முற்றி விடுகிறது பலருக்கு.. எளிமையான மருந்துகளையும் வாழ்வியல் முறைகளையும் மக்கள் கண்டு கொள்வதில்லை..

நாள்பட்ட இடுப்பு வலியால் அவதிப்பட்ட இந்த பெண்மணிக்கு சொன்ன வீட்டு வைத்தியம் 


 🔹 *விளக்கெண்ணெய்- 10மி*

 🔹 *வெள்ளைப் பூண்டு- 1பல்  நசுக்கியது*

🔹 *வறுத்த பெருங்காயம்- ½சிட்டிகை*


 இதை ஒன்றாக கலந்து இரவு எட்டு மணிக்கு தயார் செய்து வைத்து விட வேண்டும்.. 


காலை எழுந்தவுடன் 7:00 மணிக்குள் இதை குடிக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான சுடுநீர் குடித்துக் கொள்ளவும்.. அந்த நாள் இரண்டு மூன்று தடவை மலம் போகும்..( அன்றைய தினம் அசைவ உணவு எண்ணெயில் பொரித்த உணவு பேக்கரி உணவு தவிர்க்க வேண்டும்) கூடவே திரிந்த காற்று வாதம் எல்லாம் வெளியேறி உடல் வலி இடுப்பு வலி குணமாகும்...

Friday, May 17, 2024

திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்பது ஏன்?

*
திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் சில பரிகாரங்கள்...!


கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.

அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.

புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.

உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.

அதுசரி…. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.

யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.

கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.

வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை.

எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியிட்டான்.

சரி கேள்… என்ன வரம் வேண்டும்?

நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.

இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?

பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கையால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.

சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.

அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.

கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.

#பூசனிக்காய_உடைக்கும்

#முறைகள்


1. கோயில் வழிபாடுகள் கும்பாபிஷேகங்கள், வீடுகிரகப்பிரவேஷம் கம்பெனி மற்றும் கடைகள் ஆரமித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு பூசனிக்காய சுற்றி உடைக்கும் பொழுது பூசனிக்காயை சுற்றுவதற்க்கு முன் பின்னபடுத்தாமல் சுற்றிய பிறகு உடைத்து அதாவது நீங்கள் உடைக்கும் பூசனிக்காயைய பறைவைகள்,மாடுகள்,குரங்கு,மற்றும் பலவிளங்கினங்கள் அதை உன்னும் என்பதால் தயவுசெய்து அதில் குங்குமம் காசு போடாமல் பீட்ரூட்டை சீவி அதை உடைத்த பூசனிக்காயில் தடவி சிவந்த நிரமாக மாற்றி போடவும் ஏன்தெரியுமா? எல்லாஉயிர்களும் இன்புற்று வாழவேண்டும் முடிந்த அளவு நாம் செய்வதில் பிற உயிர்களுக்கு நன்மை இருந்தால் அதுவே நமக்கு பண்மடங்கு நன்மை உண்டாகும்.


2.அடுத்து பூசணிக்காயை உடைத்ததும் அதை எடுத்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக தூக்கி போடுவதுதான் மனிதத்தன்மை. எப்பொழுதும் நம்மால் அடுத்தவர்களுக்கு தீஙாகுவராமல் எதை செய்தாலும் செய்ய வேண்டும்.

3. வியாபார ஸ்தலங்களுக்கும் நமது வீட்டுக்கும் ஸ்பெஷல் பரிகாரம்:-

அதாவது அமாவாசை முன்னால் இரவு பூசனிக்காயை ஓட்டைப்போட்டு அதில் வேரேதுவும் போடாமல் நவதாணியங்களை மட்டுமே போட்டு வீட்டிலோ அல்லது வியாபாரகூடங்களிலோ ஒரு மூளையில் வைத்துவிட வேண்டும் மறுநாள் சரியாக பகல் 12-மனிக்கு அமாவாசைஇருக்கவேண்டும் அந்த நேரத்தில் சுற்றி உடைத்து அதை எடுத்து ஓடும் நீரில் அல்லது கடலில் வீசவேண்டும் 1000 மடங்கு நன்மை உண்டாகும் தீமைகள் விலகும் நம்மை சுற்றி உள்ளவன் சரியில்லை என்றாலும் நம்மை விட்டு தானாக விலகிவிடுவான்

கேரளா ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி

 **

தேவையான பொருள்கள்


முக்கிய பொருட்கள்


750 கிராம் தேவையான அளவு கோழி


பிரதான உணவு


4 Numbers நறுக்கிய வெங்காயம்


4 தேக்கரண்டி தேவையான அளவு

 மிளகாய் செதில்


1 கப் தேவையான அளவு கறிவேப்பிலை


1 தேக்கரண்டி தேவையான அளவு வினிகர்


3 தேக்கரண்டி தேவையான அளவு இஞ்சி


3 தேக்கரண்டி தேவையான அளவு பூடு


5 தேக்கரண்டி தேவையான அளவு 

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


செய்முறை


🍔ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்க்கவும்.


🍔எண்ணெய் சூடானதும் அதில், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.


🍔2 நிமிடம் கழித்து வினிகர், பூண்டு, இஞ்சி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.


🍔பின்பு இதில் சிக்கன், மிளகாய் விதைகள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கிளறவும்.


🍔இதனை 8-10 நிமிடங்கள் சிக்கன் மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.


🍔இந்த சிக்கன் வறுவல் இன்னும் சுவையாகவும், மென்மையாகவும் இருக்க, இதில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கலாம்.


🍔10 நிமிடம் கழுத்து சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.


🍔வீடே மணக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் சிக்கன் வறுவல் ரெசிபி தயாராகிவிட்டது.


🍔இதை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரொட்டி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.

நெய் புலாவ் செய்வது எப்படி???

 **

தேவையானவை:


  பாசுமதி அரிசி - 2 கப், 


பெரிய வெங்காயம் - 3, 


பச்சை மிளகாய் - 4, 


உப்பு - தேவையான அளவு,


 புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி.


தாளிக்க:  


நெய் - 4 டேபிள்ஸ்பூன், 


பிரிஞ்சி இலை - 1.


அரைக்க: 


பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2 (தனியாக அரைக்க வேண்டும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல் (தனியாக அரைக்க வேண்டும்).


செய்முறை:


✌ பாசுமதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், புதினா, மல்லித்தழையை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், நெய்யைக் காயவைத்து, பிரிஞ்சி இலை சேர்த்து, அரைத்த பட்டை-லவங்க விழுது மற்றும் இஞ்சி-பூண்டு விழுதுகளை சேர்த்துக் கிளறுங்கள். வதங்கியதும் வெங்காயம், சிட்டிகை உப்பு, புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள். 


✌பிறகு, வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். இந்த ‘நெய் புலவு’க்கு தொட்டுக்கொள்ள தயிர்பச்சடியை விட, குருமா மிகவும் நன்றாக இருக்கும்.

பெப்பர் இட்லி செய்வது எப்படி?

 **

நெய் மணக்கும் மிளகு இட்லி செய்வது எப்படி?

தேவையானவை:  


இட்லி மாவு - 2 கப்,


 மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்.


தாளிக்க: 


 கடுகு - அரை டீஸ்பூன், 


நெய் - 2 டேபிள்ஸ்பூன், 


கறிவேப்பிலை - சிறிதளவு.


செய்முறை:


🔥  இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள்.


🔥 மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள். 


🔥மிளகு மணமும் காரமும் சேர்ந்து, சுவை தரும் இட்லி இது.