சிறந்த மனிதர்களாக யாரும் பிறப்பதில்லை... அவரவர் நடவடிக்கைகளே அவர்களை சிறந்தவர்களாக்குகிறது.*_
_*எப்போதும் நிமிர்ந்து நிற்பவர்கள் மீது தான் அடி விழுகிறது.*_
_*வளைந்துக் கொடுப்பவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.*_
_*நாளைக்கு எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைக்கிறது நம்பிக்கை.*_
_*மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை.*_
_*படித்தவர்களிடம் பேசுவதை விட. ஒன்றுமே படிக்காதவரிடம் பேசிப் பாருங்கள்... நிச்சயமாக நிறைய கற்றுக் கொள்வீர்கள்....*_
எப்பொழுது உணவை நீங்கள்
ரசித்து
சுவைத்து உண்கிறீர்களோ
எப்பொழுது நீங்கள் பிரச்னை வரும் போது பதட்டப்படாமல்
ஆழ்ந்து யோசிக்கிறீர்களோ
எப்பொழுது நீங்கள் எவரேனும் துன்பத்தில் இருக்கும்போது மனம் வருந்துகிறீர்களோ
எப்பொழுது நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளோரோடு மனித நேயத்துடன் நடந்து கொள்கிறீர்களோ
எப்பொழுது நீங்கள் இயற்கையை மனதார ரசித்து
ஆனந்தமடைகிறீர்களோ
அப்போதே நீங்கள் புரிந்து கொள்ளலலாம்
உள்ளிருக்கும் இறையோடு
நீங்கள்
கைகுலுக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று.
_*யாரிடமும் கடன் வாங்காதே வாங்கிய கடனை திரும்ப அடைக்காவிடில் கடனை செலுத்த மறுபடியும் பிறக்க வேண்டும், அது போல் நம் கடமைகளை செய்யாவிடில் மீண்டும் பிறப்பு உண்டு.*_
_*உண்மை உள்ளங்களை வேதனைப்படுத்தினால் உனக்கு கடுகளவு நிம்மதியும் கூட கிடைக்காது.*_
_*கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை ஆயிரம் பொய்களை விட மோசமானதாகும்.*_
_*உண்மையை நீருக்கடியில்*_ _*புதைத்தாலும் நிச்சயம் ஒரு நாள்*_
_*அலையாய் வெளிவந்தே தீரும்.*_
_*உண்மைகள் சில நேரங்களில்,*_
_*தொலைந்து தான் போகுமே தவிர ஒரு போதும் தோற்றுப் போகாது.*_
No comments:
Post a Comment