Saturday, May 11, 2024

நிச்சயமாக சரியான ஒரு விடை கிடைக்கும்

 ஒருவன் தன்னுடைய தொழிலில்

படுதோல்வியடைந்த நிலையில் 

சலித்தவாறே நடந்து வந்தான்.

தெரு முனையில் போவோர், 

வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

அப்போது எதிரில் உள்ள  குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார்.

சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைதொட்டியில் தனக்கு தேவையான  பாட்டில்களை நிரப்பி எடுத்து சென்றார்.

மீண்டும் ஒருவர் தனக்கு தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். 

அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றது.

கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கி கொண்டது.

இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த 

அந்த நபர் புத்துணர்ச்சி பெற்றார்.

ஒரு சிறிய குப்பை தொட்டி மூலம் இத்தனை பேர் வாழ வாய்ப்பு கிடைக்கிறதெனில்,இந்த பரந்து  விரிந்து கிடக்கும் இவ்வுலகில் எத்தனையெத்தனையோ வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தி நாம் அனைவரும் எப்படியெப்படியெல்லாமோ  பிழைத்து வாழலாம் என்று தன் மனதை திடப்படுத்திக்கொண்டு, மனதில்

ஒரு சங்கற்பம் செய்து கொண்டார்.

இனி தனக்கு தோல்வியே கிடையாது,

இனி வரும் காலங்கள் பொற்காலமே,

எனக்கு இனி மிக பெரிய வெற்றியே 

என  தன்னம்பிக்கையுடன் 

தன் பழைய தொழிலில் எங்கே 

தவறு என ஆராய்ந்து மீண்டும்

தொடங்கச்  சென்றார்.

இந்த பரந்து விரிந்துள்ள உலகில் 

நாம் அனைவரும் "ஜெயிக்கப்  பிறந்தவர்களே!

எப்பொழுது எல்லாம் நாம்

சிரமப்படுகிறோமோ, அப்போது

அதற்காக யாரையும் குறை

சொல்வதை தவிர்க்கலாம்.

waste of energy.

அதற்கு பதிலாக அந்த 

பிரச்னையை எல்லா 

கோணங்களிலும் 

அலசி ஆராய்லாம்.

அதை தன்னார்வத்துடன் 

ஒரு களமாக, சவாலாக 

மாற்றி பாருங்கள்.

என்ன நிகழும்?

நிச்சயமாக சரியான 

ஒரு விடை கிடைக்கும்.

No comments:

Post a Comment