Sunday, December 29, 2024

கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட

 *கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட .,*


*கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும்......*


*வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எப்படி வலிக்கும் என்று.,*


*எல்லா வலிகளையும் வார்த்தைகளில்

சொல்லி விட முடியாது.*


*ஓசையின்றி அழுகின்ற ஓராயிரம் வலிகள் எல்லோர்

இதயத்திலும் உண்டு.,*


*ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு பாடத்தைத் தருகிறது...*


*ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு மாற்றத்தை தருகிறது.,*


*யாரிடமிருந்தும் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.,*


*ஏனென்றால், எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிடில் அதிக வலியைக் கொடுக்கும்..*


*எதையும், யாரையும் எப்போதும் இகழ்வாய் எண்ணி விடாதீர்கள்.,*


*காய்ந்து உதிர்ந்த இலை  தான், ஆனால்.,  அது நீரில் தத்தளிக்கும் எறும்பின் உயிரைக் காக்கும்...*


*வாழ்க்கையின் சிறந்த நாட்களை அடைய, சில மோசமான நாட்களோடு போராடியே ஆக வேண்டும்...*


*சின்ன புறக்கணிப்பு தான் மனதை எவ்வளவு வருத்துகிறது...*


*சின்ன நெளிவு தான் எவ்வளவு மரியாதை தருகிறது.,*


*சின்ன புன்னகை தான்  எவ்வளவு பகையை  உடைக்கிறது..*


*சின்னச் சின்னது தான், எவ்வளவு பெரிதாக இருக்கிறது...*


*வெற்றி என்பது உன் நிழல் போல.,*


*நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை.,*


*நீ வெளிச்சத்தை நோக்கி  நடக்கும் போது உன்னுடன் தொடர்ந்து வரும்...*


*எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ.,*

*அது தான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும்.,*


*வாழ்க்கையில் என்ன  நடக்கும் என்று பயத்துடனே வாழாதே.,*


*அடுத்தது என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்  என்று துணிந்து நில்...*


*இனிய   வணக்கங்களுடன்.*

No comments:

Post a Comment