Monday, January 8, 2024

தினம் ஒரு மூலிகை-செம்பருத்தி

 


*செம்பருத்தி* இனத்தைச் சேர்ந்த செந்நிற பூக்களை உடைய சிறு மரம் அழகு மரமாக வளர்க்கப்படுகிறது இதன் இலை பூ காய் பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது சிறுநீர் பெருக்குதல் குளிர்ச்சி உண்டாக்குதல் துவர்ப்பியாக செயல்படுதல் உள்ளழல்ஆற்றுதல் மலம் விளக்குதல் சளி அகற்றுதல் காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது 10 கிராம் பூவிதழ்களை அரைத்து பாலில் கலந்து காலை மாலை ஐந்தில் இருந்து ஆறு நாட்கள் பருகிவர குருதி பிரமோகம் வெள்ளை குருதி வாந்தி உள் கொதிப்பு ஆகியவை தீரும் 10 கிராம் இலையை அரைத்து பாலில் கலக்கி காலை மாலை மூன்று நாள் குடித்து வர சீழ் பிரமேகம் குருதிபிரமேகம் உள் கொதிப்பு ஆகியவை தீரும் செம்பருத்தி பிஞ்சை அரைத்து 10 கிராம் அளவாக மோரில் கலக்கி காலை மாலை மூன்று நாள் கொடுத்து வர சீத கழிச்சல் குருதி கழிச்சல் ஆகியவை தீரும் வேரை பூலாக நறுக்கி நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர நாள் பட்ட காய்ச்சல் தீரும் நன்றி.

No comments:

Post a Comment