Sunday, April 21, 2024

நற்செயல் நன்மையே தரும்.

நற்செயல்

நன்மையே தரும்.

செய்த நற்செயல்கள், நற்பலனை 

தரும். உறுதியாக நம்புங்கள்.

நற்செயல் செய்ய செய்ய நம் கர்மவினைகள் குறைய குறைய, 

நாம் நினைப்பது செயலாக மாறும் அற்புதத்தை காணலாம்.

அருட்தந்தை கூறுவார் :

ஒரு கட்டத்தில் நீங்கள் என்ன நற்செயல் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை மற்றவர்கள் மனமுவந்து தானாகவே செய்வார்கள் என்பார்.

அறிவுத் திருக்கோயில் கட்ட வேண்டும், சமுதாயம் நன்மை அடைய வேண்டும் என்ற அவரின் தூய எண்ணம், பலரை ஈர்த்து செயலாக மாற்றியது.

நாம் இப்பொழுது செய்யும் நற்செயல்கள் நம் காலத்திற்குள் நாம் பலனை அனுபவிக்க விட்டாலும், நம் சந்ததியர் கண்டிப்பாக நன்மை பெறுவர். 

No doubt at all.

நானே பல முறை இதை அனுபவமாக 

என் வாழ்வில் உணர்ந்துள்ளேன்.

சிக்கலான சமயங்களில் எதிர்பாராமல் யாராவது வந்து சிக்கலை தீர்ப்பார்கள்.

நல்ல எண்ணங்கள், நற்செயல்கள் 

என்றும் வளமை தரும். சந்தேகமே வேண்டாம்.

No comments:

Post a Comment