(25-ஏப்)
🐝 ஒவ்வொரு ஆண்டும் உலக மலேரியா தினம் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
🐝 மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். ஆண்டுதோறும் மலேரியா நோயினால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
🐝 உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைபிடித்து வருகிறது.
🐝 மலேரியாவை கட்டுப்படுத்துவதும், நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
*உலக பென்குயின் தினம்.*
🐧 ஒவ்வொரு ஆண்டும் உலக பென்குயின் தினம் ஏப்ரல் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
🐧 பென்குயின் என்ற இறகுகள் கொண்ட பறக்க இயலாத பறவைகளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
🐧 உலகில் அழிந்துவரும் பல வகைப்பட்ட பென்குயின்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
*முக்கிய நிகழ்வுகள்..*
👉 தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மறைந்தார்.
No comments:
Post a Comment