Sunday, April 28, 2024

சிந்தனைத் துளிகள் 28/04/24


மனிதனும் வாழைமரமும் ஒன்று தான்...

தேவைப்படும் வரை  வைத்து இருப்பார்கள்

தேவை முடிந்ததும் வெட்டி வீசி விடுவார்கள்.!


ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை சொல்லக்கூடாது. பிடிக்கவில்லை என்றால் அவரை விட்டு விலகி விட வேண்டும்.

அதைவிடுத்து குறை சொன்னோம் ஆனால்

அது உறவுக்கும் அழகில்லை,

நட்புக்கும் இலக்கிணமில்லை.!!


மனதில் பட்டதை  

சொல்லும்போது சில இடங்களில் பிரச்சனை முடிவுக்கு வருகிறது.

சில இடங்களில் பிரச்சனை ஆரம்பமாகிறது.!!!


தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் 

எவ்வளவுக்கு எவ்வளவு 

குறைத்துக் கொள்கிறோமோ...

அவ்வளவுக்கு அவ்வளவு 

மன அமைதியும்,நிம்மதியும் கிடைக்கும்.!


இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது மிகவும் சுலபம்...

ஆனால் இழந்து துடிப்பவர்களுக்குத்தான் தெரியும்...

அது எவ்வளவு பெரிய

வலி என்று.!!


கெட்டவனை நம்புங்கள்.

அவன் என்றாவது ஒருநாள் நல்லவனாக 

வாய்ப்பு உண்டு.

ஆனால் நல்லவன் போல் நடிக்கும் கெட்டவனை ஒருபோதும் நம்பாதீர்கள்.

ஏனென்றால் அவன் இந்த ஜென்மத்தில் திருந்தவேமாட்டான்.!!!

 

No comments:

Post a Comment