Monday, April 1, 2024

ஆமணக்கு (அ) முத்து கொட்டை - தினம் ஒரு மூலிகை

 *ஆமணக்கு (அ) முத்து கொட்டை.* இதன் இலை எண்ணெய் மருத்துவ பயன் இலை வீக்கம் கட்டி ஆகியவற்றை கரைக்கக் கூடியது ஆமணக்கு நெய் மலம் மிளக்கும் தாது வெப்பு அகற்றும் இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்து கட்டி வர பால் சுரப்பு மிகும் இலையை பொடியாய் அறிந்து ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து கட்டி வர மூலக்கடுப்பு கீல்வாதம் வாத வீக்கம் ஆகியவை தீரும் இலையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து மை போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்கு சாப்பிட காமாலை குணமாகும் கண் வலியின் பொழுது கண்ணில் மண் தூசி விழுந்தால் ஓரிரு துளி ஆமணக்கு எண்ணெய் விட வலி நீங்கும் 30 மில்லி ஆமணக்கு எண்ணெய்யுடன் சிறிது பசும் பால் இஞ்சி சாறு கலந்து கொடுக்க நான்கு ஐந்து முறை பேதியாகும் பசியின்மை வயிற்று வலி சிறுநீர் பாதை அழற்சி வெட்டை நீர்க்கடுப்பு மாதவிடாய் கோளாறுகள் இரைப்பிருமல் பாண்டு ஆறாத கட்டிகள் தொண்டை அழற்சி மூட்டு வலி ஆகியவை தீரும் தோல் நீக்கிய விதையை மை போல் அரைத்து பூசி வர ஆறாத புண்கள் ஆறும் கட்டிகள் பழுத்து உடையும் மூட்டு வலி கணு சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

No comments:

Post a Comment