Saturday, April 6, 2024

ஒருமுறையாவது புத்தகங்களை திறந்து பார்க்க வேண்டும்

கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான்*.


*அதில் அவன்...*

"**நீ என்னை காதலிப்பதாக இருந்தால் நாளை நீ* *கல்லூரி வரும்போது சிவப்பு நிற ஆடை அணிந்து* *வரவேண்டும்" என்று எழுதியிருந்தான்*.


*மறுநாள் அவள் மஞ்சள் நிற ஆடையணிந்து கல்லூரிக்கு வந்து அவன் கொடுத்த புத்தகத்தை திருப்பிக் கொடுத்து விட்டு சென்றாள்*


*இதைப் பார்த்தவுடன் மிகவும் அவமானமடைந்த அவன் அதன் பின் அவளை பார்ப்பதை, நினைப்பதைக் கூட மறந்து போனான்*.


*வருடங்கள் உருண்டோடின*.

*அந்தப் பெண்ணிற்கும் திருமணம் ஆனது*.


*ஒரு நாள் அலமாரியை சுத்தம் செய்யும்போது அந்தப் பெண் திருப்பிக் கொடுத்த அந்த புத்தகம் கீழே விழ அதில் இருந்து ஒரு துண்டுச் சீட்டு*.


*அதில் இருந்த செய்தி*


*நானும் உங்களை காதலிக்கிறேன்* ❤....

*ஆனால் என்னிடம் சிவப்பு நிற ஆடை இல்லை*... *Sorry*!!


*நீதி: மாணவர்கள் கொஞ்ச காலத்திற்கு ஒருமுறையாவது புத்தகங்களை திறந்து பார்க்க வேண்டும்*.


*பின்குறிப்பு*: 


*உடனே உங்களுடைய பழைய புத்தகங்கள் அனைத்தையும் கலைத்து தேடாதீர்கள்*.


*உங்கள் காலம் முடிந்தது*.


 *நீங்கள் இப்போது தாத்தா ஆகிவிட்டீர்கள்*🤫😳🫢🤓😂🤩🤪

No comments:

Post a Comment