Friday, February 2, 2024

வாலுழுவை-தினம் ஒரு மூலிகை

 


*வாலுழுவை* மலைக் காடுகளில் வளரும் ஒரு கொடி வகை கனத்த கொடியாக வளரும் பல்லுள்ள நீள் வட்ட இலைகளையும் கொத்து கொத்தான காய்களையும் உடையது இலை விதை மருத்துவ குணம் உடையது விதைகள் வாலுழுவை அரிசி என்ற பெயரில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் உடல் தேற்றுதல் வியர்வை பெருக்குதல் உடல் வெப்பத்தையும் நாடி நடையையும் மிகுதல் காமம் மிகுதல் நரம்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நினைவாற்றலையும் அறிவுத்திறனையும் மிகுக்கும் விதை பொடித்து அரை கிராம் அளவாக சர்க்கரையில் கலந்து நாள்தோறும் மூன்று வேளை சாப்பிடலாம் அல்லது இரண்டு கிராம் வாலுழுவை அரிசியை பாலில் அரைத்து பாலில் கலந்து வடிகட்டி நாள்தோறும் ஒருவேளை குடித்து வர வயிற்றுக் கடுப்பு குருதி கழிச்சல் பெரும்பாடு பித்தம் இருமல் மலச்சிக்கல் ஆகியவை தீர்ந்து உடல் பல பலப்பாகும் விதை பொடியை களியாக்கி கிளறி நாள் பட்ட புண்களில் வைத்துக் கட்ட அவை விரைந்து ஆறும் வாலுழுவை அரிசி மரமஞ்சள் கடுகு ரோகிணி அதிவீடயம் கொடிவேலி பட்டை வட்டத்திற்கு ஆகியவற்றை சம எடையாக பொடித்து ஒரு கிராம் அளவாக சர்க்கரை கலந்து நாள்தோறும் இரண்டு வேளை சாப்பிட்டு வர இரைப்பை தொடர்பான பல நோய்கள் தீரும்.

No comments:

Post a Comment