இன்று நிறைய நபர்கள் நீரிழிவு வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். கணையத்தில் இரண்டு செல்கள் உள்ளன. ஆல்பா செல், பீட்டா செல், பீட்டா செல்தான் இன்சுலினை சுரக்கிறது.
இந்த முத்திரை இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
*செய்முறை*
நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். படத்தில் உள்ளது போல் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.
*பலன்கள்*
சுமணமுத்திரை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
பான்க்ரியாஸை நன்றாக செயல்படவைக்கும்.
கணையத்தில் இன்சுலின் நன்றாக சுரக்கும்.
நரம்புத்தளர்ச்சியைப் போக்கி உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
நரம்புமண்டலம் சிறப்பாக செயல்படுவதால் கண் நரம்புகள் வலுவாகும்.
கால்களில் புண்கள் வராமல் பாதுகாக்கும்.
சிறுநீர்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது.
செரிமானம் நன்றாக இருக்கும்.
தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது.
உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது.
சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
*குறிப்பு*
48 நாட்களாவது (ஒரு மண்டலம்) தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் பலனை அனுபவிக்க முடியும். இங்கிலீஷ் மருந்துகள் எடுத்துக் கொண்டே முத்திரைப் பயிற்சியும் செய்யலாம். முத்திரை செய்வதினால் எந்த பின்விளைவும் ஏற்படாது. கீழே உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கால்கள் தரையில் படும்படி பயிற்சி செய்யலாம்.
No comments:
Post a Comment