Sunday, February 4, 2024

செம்பருத்தி பூ


செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.


மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும்.


செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க  உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.


செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு,  பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

 

உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.


செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.

 

செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி  குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

 

செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த  நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

 

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.


எத்னோஃபார்மகாலஜி பத்திரிகையில் வெளியிடப்பட்ட கருத்துப்படி செம்பருத்தி பூ டீயை தொடர்ந்து 12 நாட்கள் குடித்து வந்தால் சிஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 11.2% வரை குறைகிறது. டயஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 10.7% வரை குறைகிறது. உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் செம்பருத்தி டீயை குடித்து வரலாம்.


உயர் இரத்த சர்க்கரை உங்கள் நரம்புகள், கண்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், இது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே செம்பருத்தி சாற்றை 21 நாட்கள் குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.


இரத்த குழாயை அடைக்கும் கொழுப்பால் இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகம். இந் பூவின் சாற்றை பிழிந்து வாய்வழியாக எடுத்துக் கொண்டு வரும் போது இரத்த கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை 22% வரை குறைக்கிறது.


இது நல்ல கொலஸ்ட்ரால் (எச். டி.எல்) அளவை அதிகரிக்கிறது. இந்த பூவில் உள்ள சபோனின் உடம்பானது கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கிறது.


செம்பருத்தி பூ இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ்ட்கள் அந்தக் காலத்தில் இருந்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடியை பலப்படுத்துகிறது. எனவே செம்பருத்தி பூவைக் கொண்டு சாம்பு தயாரிப்பது உங்க கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக அமையும்.


செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.


கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கரு உருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்யாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.


செம்பருத்திப் பூ இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். 


சிறுநீர் எரிச்சல் குணமாக 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். அல்லது 4 செம்பருத்தி பூ மொட்டுகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மேலே குறிப்பிட்ட முறையில் குடிக்க வேண்டும்.


மாதவிடாய் சரியாக வருவதற்கு நான்கு புதிய செம்பருத்தி பூக்களை அரைத்து, பசையாக அரைத்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இந்தப் பசையை உட் கொள்ள வேண்டும். 7 நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும். அல்லது செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும், மாலையிலும் 7 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.


செம்பருத்தி பூ இதழ்கள் 15, ஆடாதோடை தளிர் இலைகள் 3, இரண்டையும் நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ½ தேக்கரண்டி அளவு தேன் கலந்து தொடர்ந்து குடித்து வர வேண்டும். தினமும் காலை மாலை வேளைகளில் 3 நாட்களுக்கு குடித்து வந்தால்  இருமல் தீரும்.


செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறைய தொடங்கும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.


செம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் சத்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தலைமுடி கறுப்பாகவும், நீண்டு வளர காலம் காலமாக செம்பருத்தி இலைகள் தான் உபயோகப்படுத்துகின்றோம்.


செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் இதய உறுதியாக இருக்கும்.


செம்பருத்தி பூத்தூளுடன் சம அளவு மருதம் பட்டைத் தூளை கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை குறைய தொடங்கும்.


செம்பருத்தி டீ

தேவையான பொருட்கள்

செம்பருத்தி பூக்கள் - 5

தண்ணீர் - 1 கப்

செய்முறை

ஒரு கப் கொதிக்கும் நீரில் 5 செம்பருத்தி பூக்களை சேர்க்கவும்.

2 நிமிடங்கள் கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

இதனை வடிகட்டி, சூடு தணிந்த பின் குடிக்கலாம்.


தலைமுடிக்கு செம்பருத்தி ஹேர் ரின்ஸ்

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 1 கப்

செம்பருத்தி பூக்கள் - 10

செய்முறை

முதலில் செம்பருத்தி பூக்களை 2 கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் கைகளால் பூக்களை நன்கு பிழியவும்.

இதனை வடிகட்டி உங்கள் தலைமுடிக்கு தடவலாம்.

தேவைப்பட்டால் ஷவர் கேப்பை கொண்டு தலைமுடியை மூடி வைக்கலாம்.

20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலசவும்.


தலைமுடிக்கு செம்பருத்தி எண்ணெய்

தேவையான பொருட்கள்

செம்பருத்தி இலைகள் - 12,

செம்பருத்தி பூக்கள் - 5,

தேங்காய் எண்ணெய் - 1 கப்

செய்முறை

முதலில் செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை அரைத்து பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும்.

இதனை சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலக்கவும்.

இதில் உள்ள நீர் வற்றும் வரை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்.

இதை 48 மணி நேரம் வரை அப்படியே விட்டுவிடுங்கள்.

பிறகு இதனை வடிகட்டி சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.


இரத்த சோகைக்கு செம்பருத்தி


தேவையான பொருட்கள்

செம்பருத்தி மொட்டுகள் 20-30

தேன் - ½ டீஸ்பூன்


செய்முறை

செம்பருத்தி மொட்டுகளை நிழலில் உலர்த்தி நன்கு பொடித்துக் கொள்ளவும்.

இந்த பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க 1/2 டீஸ்பூன் தேனுடன் சிறிதளவு செம்பருத்தி பொடி கலந்து சாப்பிடலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.


செம்பருத்தி செடியின் இலை மற்றும் பூக்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதிலும் அதனுடைய பெரிய வண்ணமயமான பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இது ஒரு அழகான அலங்கார பூ மட்டுமல்ல, இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அத்தியாவசிய சேர்மங்களும் உள்ளன.


செம்பருத்திப் பூக்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையதாக இருக்கும். இது குளிர்ச்சி தன்மை உடையது. செம்பருத்தி செடிகளில் பல வகை உண்டு, இவை மூலிகை மருந்துகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.


செம்பருத்திப் பூக்களில் பித்தத்தை குறைக்கும் பண்புகளும், இரத்த கசிவு எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை பின்வரும் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்


ஒற்றைத் தலைவலி

முகப்பருக்கள்

அசிடிட்டி

அல்சர்

இரத்தக் கசிவு பிரச்சனைகள் (ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு)

இவை இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சோகை, மூலம், தூக்கமின்மை, சிறுநீர் பாதை தொற்று(UTI) மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு மட்டுமின்றி சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனை களையும் நீக்குகின்றன.


சர்க்கரை நோய், நரைமுடி, முடி உதிர்தல், கொலஸ்ட்ரால், மாதவிடாய் வலி, அசிடிட்டி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதர பித்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு செம்பருத்தி டீ பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தியை டீ வடிவில் எடுத்துக் கொள்வதே சிறந்தது.


செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ பயன்கள்...!


செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.
மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.


செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.


செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

No comments:

Post a Comment