ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.*
*அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.*
*மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.*
*பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாக சுற்றிக் கொண்டது.*
*விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது.*
*கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.*
*தன் கூட்டத்தில் ஏதாவது உதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டது !!!*
*ஆனாலும் எந்த குரங்கும் அந்த குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.*
*"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு"*
*"இது கொத்துனா உடனே மரணந்தான்"
"குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும்"*
*இவன் தப்பிக்கவே முடியாது"*
—> *என்றெல்லாம் மற்றகுரங்குகள், குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.*
*தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையில் அந்த குட்டிக் கரங்கிற்கு வேதனை சூழ்ந்துகொன்டது !!!*
*எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பைப் பார்க்கப் பார்க்க பயம்தான் அதிகரித்தது !!!*
*மரணபயம் குரங்கின் முகத்துக்கு முன்னால் விசுவரூபமாக காட்சியளித்தது !!!*
*"ஐயோ. புத்தி கெட்டுப் போய்நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே" !!!*
*குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது !!!*
*ஆனாலும் எந்த பயனும் நிகழவில்லை !!!*
*நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.*
*உணவும், நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.*
*கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.*
*அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.*
*குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார்.*
*குரங்கை நெருங்கி வந்தார்.சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில்,*
*தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.*
*அவர் நெருங்கி வந்து சொன்னார், "எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற?*
*அதைக் கீழே போடு" என்றார்.*
*உடனே அந்த குட்டிக் குரங்கு, "ஐயய்யோ, பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்" என்றது.*
*அவர் மீண்டும் சொன்னார், "பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு.*
*அதைக் கீழே போட்டுவிடு".*
*அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.*
*அட !!! நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது.*
*அப்பாடா. குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது.*
*"இனிமேலாவது, இந்த முட்டாள் தனத்தைப் பண்ணாதே" என்றபடி ஞானி கடந்து போனார்.*
*ஆம் !!! சகோதர சகோதரிகளே !!! கிட்டத்தட்ட நாம் அனைவருமே, "மனக்கவலை" என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு ... விடவும் முடியாமல், பிடித்திருக்கவும் முடியாமல் மனதிற்குள் கதறிக் கொண்டிருக்கிறோம்.*
*வெளி வேஷத்திற்கு, மகிழ்ச்சியாக இருப்பது போல், சிரித்தபடி காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் கதரிக் கொண்டிருக்கும் !!!*
*ஆம் !!! நண்பர்களே !!! நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் !!! நடைமுறையில் வாழ்க்கையில் பார்த்தால், கவலை இல்லாத மனிதர் எவருமே இல்லை எனலாம் !!! ஆனால் கவலை என்பதே இல்லை என்று வேதம் கூறுகின்றது !!! கவலை இருக்கிறதே என்று சொல்லுவது எல்லாம் தோற்றம் ஆகும் !!! அப்படியானால் தோற்றம் என்பது என்ன? தோற்றங்கள் யாவும் இருப்பது போலவே தோன்றினாலும் உண்மையில் அது இருக்காது !!!*
*அப்படியானால் ஏன் கவலைகள் எல்லோருக்கும் இருப்பது போல் தோன்றுகின்றது? அதற்குக் காரணம் அறியாமை !!! ஒன்றைப் பற்றிய அரைகுறையான அறிவு அல்லது தவறான அறிவு அறியாமை எனப்படும்.*
*இப்படியானால் கவலைகள் எல்லோரும் இருப்பது போல் தோன்றுகின்ற தோற்றத்திற்கு காரணமான அறியாமை ஏன் எல்லோரிடமும் காணப்படுகின்றன? அதற்குக் காரணம் இடம் உள்ள ஞானமின்மை !!!
*எந்த ஒரு ஞானம் இன்மை நம் அனைத்து கவலைகளுக்கும் காரணமாக உள்ளது என்கிறீர்களா?
*இந்த பிரபஞ்சத்தையே மனிதன் பங்கு போட்டுக் கொள்கிறான். நான் எனது என்கிற உணர்வுகளே அந்த அறியாமை ஆகும் !!!
*அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும் ? எதை புரிந்து கொள்ள வேண்டும் தெரியுமா? இல்லாத கவலையை இருப்பதாக எண்ணிக் கொண்டு நித்தம் நித்தம் நாம் வருந்தி கொண்டிருக்கிறோம் !!!*
*எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களுக்கு தொல்லையை கொடுக்கிறதோ அவற்றை மறக்க முயற்சி செய்யுங்கள் !*
*எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் உங்கள் மனதுக்கு நிம்மதியை தருகிறதோ, அவற்றை அடிக்கடி நினைத்துப் பாருங்கள் !!!*
*"கவலைகள் இருந்து விட்டுப் போகட்டுமே !!!" என்று மட்டும் எண்ணி விடாதீர்கள் !!! ஏனெனில் இவ்வுலகில் ஏற்படுகின்ற எண்ணற்ற தற்கொலைகளுக்கும் பைத்தியங்களுக்கும் இந்த கவலைகள் தான் காரணமாம் !!!*"
*ஆம் எனது அருமை ஆன்மீகத்தையும் தாண்டிய ஆத்ம ஞான பிரியர்களே !!! எந்த ஒரு சிறிய கவலையே ஆயினும் அதையே தொடர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தால் அது பெரும் கவலையாக மாறி உன்னை பைத்தியம் பிடிக்க வைத்து விடும் அல்லது தற்கொலைக்கு தூண்டிவிடும் !!!
*என்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று கண்ணதாசனின் வரிகளுக்கு இணங்க, நீயே உன்னை அறிந்தால் இவ்வுலகில் உள்ள அனைத்து கவலைகளும் தானாக விலகுவதையும் மகிழ்ச்சிகள் தானாக நெருங்குவதை உணர்வீர்கள் !!!*
No comments:
Post a Comment