Tuesday, February 20, 2024

தேடல் ஒன்றே நிரந்தரம்.

 உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

 

சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சு வரைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


"தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலைப் போல திசையறியாது மூழ்கிப் போகும் "


படிப்பை முடித்து விட்டு வெளியே வரும் அனைவரின்  கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே..


அதற்கான தகுதியை நம் கல்வி முறை கற்றுக் கொடுக்கிறதா.? என்றால் அங்கு பெரும் கேள்விக்குறி தான் நம் முன் நிற்கும். 


கல்லூரி என்னும் சிறுகூட்டிலிருந்து வேலை தேடி வரும், அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை பை நிறைய சம்பளம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்.


பெரும்பாலானோர் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர்.


அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை. 


வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசை தான்..


அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை,

பெரும்பாலானோருக்கு அது பல முறை தோல்வியைத் தான் பரிசளித்திருக்கிறது...


கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதை விட மோசம்.. இரண்டு உலகங்கள்., அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனப் பார்க்கும் அனைத்தும் இங்கு புதிதாகத் தான் இருக்கும்..


"இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லிக் கொடுக்காத பாடத்தை ஒரு வருடத் தேடல் கற்றுக் கொடுத்து விடும்....


முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்துக் கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெறக் கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது.


அடுத்தது என்ன, என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது..


உன் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாகக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். 


அப்படிப் புதிதாகக் கற்க முடியவில்லையெனில் தேர்ந்தெடுத்த துறையில் உனக்கு நிகர் யாரும் இல்லையென்று சாதித்துக் காட்ட வேண்டும். 


தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். 


அந்தத் தேடல் மாறிக் கொண்டே  இருக்கும். தேடல் ஒன்றே நிரந்தரம்.


பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻


No comments:

Post a Comment