*ஆராக்கீரை*. இதன் தாவரவியல் பெயர்:Marsilia quardrifolia ஆராக்கீரை (அ)ஆலக்கீரை என்று அழைப்பார்கள் இம்மூலிகை ஆற்று ஓரங்களிலும் கால்வாய் ஓரங்களிலும் அதிகமாக காணப்படும் மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும் இது உன்னதமான மருந்து இந்த கீரையை பறித்து நிழலில் மூன்று நாட்கள் காயவைத்து மூன்றாம் நாள் காலை வெயிலில் காயவைத்து இறங்கும் பொழுதில் இடித்து பொடி செய்து கொண்டு ஆறு மாத காலத்திற்கு காலையிலும் மாலையிலும் பாலில் அரை தேக்கரண்டி பொடியை போட்டு சாப்பிட்டு வர மேற்கூறிய நோய்கள் யாவும் தீரும் மற்றும் மன அழுத்த பிரச்சனை இருப்பவர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சனை சரியாகும் மன அழுத்தம் வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுகிறது இந்த கீரை கருத்தடை மூலிகையாக செயல்படுவதால் குழந்தை பேருக்காக காத்திருப்பவர்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும் இந்த கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது நன்றி.
No comments:
Post a Comment