தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 3 கப்
வெள்ள ரவை - முக்கால் கப்
நாட்டுச்சக்கரை - நாலு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
நாட்டு வாழைப்பழம் - இரண்டு
சுக்குத்தூள் - கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதுல கோதுமை மாவு, ரவை சுக்குப்பொடி சேர்த்து நல்ல கலந்துக்கணும்.
அதோட கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியான மாவாக பிசைந்து கொண்டு பின்பு அதில் நாட்டுச்சக்கரை தேங்காய் துருவல் வாழைப்பழம் சேர்த்து பிசைய வேண்டும்.
நாட்டுச்சக்கரை கொஞ்சம் தண்ணீர் விடும் பார்த்து பிசைய வேண்டும்
அதன் பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு பனியார மாவை ஒரு 30 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள்.
ஊற வைத்த பின் கால் டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் .பின்பு கடாயை அடைப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக வைக்கவும்.
எண்ணெய் சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்
வெந்தவுடன் தானே எழும்பி மேலே வந்துவிடும்.
திருப்பி விட்டு நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.இதே மாதிரி எல்லா மாவையும் சுட்டு எடுத்தால் சூப்பரான சூப்பரான மிருதுவான பணியாரம் ரெடி.
https://youtu.be/z4UdD-FGJYg?si=IWU6F5MEuBfxTmx1
No comments:
Post a Comment