Wednesday, December 27, 2023

எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்

துறவி ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண்......
" என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார்...அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது...எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா?".
அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி...
"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்...எது வேண்டும் ...கேள்?" என்றார்.

அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...
" அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்..அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே? இதுவா வேண்டும்?" இது துறவி..
"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது.." என்றாள்..

புன்னகைத்த துறவி சொன்னார்:" வாழ்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது"

No comments:

Post a Comment