Wednesday, December 6, 2023

காலம் உனக்காக காத்திருக்கிறது .... விழித்துக் கொள் ..

 தன் பிள்ளை நன்றாக வாழ்ந்தால் அவன் பிள்ளை செழிப்பாக வாழ்வான் என்று எண்ணும் முதியோர்கள் ......  ஆனால் பெற்றோரின் அருமை  இந்த காலத்தில் தன் பிள்ளைகள் அறிவதில்லை .....

நம்மை போல் செழிப்பான வாழ்வை அவர்கள் எந்த நாளும் வாழ்ந்தது இல்லை .....  

சொகுசு காரில் பயணித்து மிக பெரிய மண்டபங்களில் திருமணம் செய்து .... 

ஆடம்பர ஆர்பாட்டம் செய்யவில்லை .....  

நமக்காக வாழ்ந்தார்கள் .... ஆனால் நாம் பெரியோர்களை இன்று கண்டு கொள்வதில்லை .....  

காலம் வேகமாக செல்கிறது .... அதன் சுனாமியில் நாமும் சிக்கிக்கொள்வோம் என மறந்து வாழ்கிறோம் ..... 

விழா கால செலவினத்தை குறைத்தாலே போதும் .. 

இனி நல் வாழ்வு வாழமுடியும் ..... 

எத்தனை வகை உணவு ... 

யார் எதை சாப்பிட்டார்கள் ..... அத்தனையும் ஒரே நேரத்தில் மனிதன் சாப்பிட முடியுமா .... இந்த கணக்கை யார்தான் இன்று போடுகிறார்கள் ..... பெற்றோர் சேர்த்து வைத்த சொத்தால் ஆட்டம் போடும் மனிதனே .... 

அதில் ஒரு சதவீதத்தை உன் பெற்றோருக்கு கொடு ....  

இதை உன் பிள்ளை உனக்கு செய்தால் நீ காணாமல் போய்விடுவாய்..,.. 

காலம் உனக்காக காத்திருக்கிறது ....  

விழித்துக் கொள் ...

No comments:

Post a Comment