Sunday, December 10, 2023

ஒரு வழி மூடப்படும்! இன்னொரு வழி திறக்கப்படும்!

சதுரங்க விளையாட்டுக்கு பயன்படுத்தும் காய்களில் சக்தி வாய்ந்தவர்கள் ராணியா? அல்லது சிப்பாயா? சதுரங்க விளையாட்டில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவரும் அறிவார்கள். ராணி எவ்வளவு முக்கியம்? அல்லது எவ்வளவு சக்திவாய்ந்தது? என்று. ஏனென்றால், அந்த ராணி சதுரங்க விளையாட்டில் எந்த திசையிலும் எல்லா சதுரத்திலும் நகர முடியும் என்பதை ஒவ்வொரு வீரரும் அறிந்திருப்பார்கள்ஆகையால் இந்த ராணியை எந்த நிலையிலும் காப்பாற்றத்தான் முயற்சிப்பார்கள்.இந்த விளையாட்டில் ஈடுபடும் பல வீரர்கள் ராணியை மட்டும் நம்புவது இல்லை.ஏன்எனில் தங்களிடமுள்ள சிப்பாய்களை வைத்து சரியாக விளையாடினால் ராணியை உருவாக்கி கொண்டுவர முடியும். எனவே சதுரங்க விளையாட்டில் சிப்பாய்களை சரியாக உபயோகித்து ஓன்றல்ல எட்டு ராணிக்களை உருவாக்கமுடியும்.அந்த வித்தையை சதுரங்க வீரர்கள் அறிவார்கள்.
எனவே யார் இங்கே சக்தி வாய்ந்தவர்கள்? என்பது முக்கியமல்ல! விளையாடும் வீரர்களின் திறத்தைப் பொருத்தே அதை தீர்மானிக்க முடியும். ஒன்றை வைத்து ஒன்றை உருவாக்க முடியும் என்றால்,
விளையாடும் வீரர்களுக்குத்
தேவை புத்திசாலித்
தனம்,வலிமை மற்றும் அனுகுமுறை ஆகியவைதான்.யார் ஒருவர் தான் செய்து கொண்டிருக்கும் வேலையை முடிப்பதற்கு கிடைத்த ஒருவழி அடைக்கப் பட்டாலும், திறமை யுள்ளோர் சற்றும் தயங்காமல் வேறு வழியில் பயணித்து தங்களின் வேலையை முடித்து விடுவார்கள்.
எனவே ஒரு வழி அடைக்கப்பட்டது என்று சோம்பி விடாமல்,
இன்னொரு வழி திறக்கப்படும் என்ற நம்பிக்கையோடு தான் வாழ்க்கையிலும் வாழ வேண்டும், விளையாட்டிலும் வெல்ல வேண்டும்.



No comments:

Post a Comment