Wednesday, December 27, 2023

உடல் எடைக்குறைப்பில் பெருஞ்சீரகம்:


இன்றைய வாழ்க்கை முறை மாற்றமும், அதிக கலோரிகள் கொண்ட உணவுகளும் பெரும்பாலான மக்களுக்கு உடல் எடையை அதிகரிப்பதற்கு ஊன்றுகோலாக உள்ளது. ஆனாலும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டோம். நம்முடைய உடல் நலத்திற்கு எப்போது பல பாதிப்புகள் ஏற்படுகிறதோ? அப்பொழுது தான் எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்? என்ற தேடலில் இறங்குவோம். 

அதிகரித்த உடல் எடையால் பல உடல் நலப்பிரச்சனைகளும் நாம் சந்திக்க நேரிடும் என்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இதற்காக கண்ட கண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களது சமையல் அறையில் உள்ள பெருஞ்சீரகம் ஒன்று போதும். இதோ உடல் எடைப்பிற்கு எப்படி  உதவுகிறது? என இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.



 உடல் எடைக்குறைப்பிற்கு உதவும் பெருஞ்சீரக தண்ணீர்!

உணவுகளுக்கு சுவையைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், உடலுக்குத் தேவையான பல ஆற்றல்களையும் பெருஞ்சீரகத்தால் நாம் பெற முடியும்.


உடல் எடைக்குறைப்பில் பெருஞ்சீரகம்:

அனைவரது வீடுகளிலும் உள்ள மசாலாப் பொருள்களில் ஒன்று தான் சோம்பு. உணவுகளுக்கு சுவையைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், உடலுக்கும் பல ஆற்றல்களையும் வழங்குகிறது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு வேளையாவது பெருஞ்சீரக தண்ணீரைக் குடிக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்மில் பலருக்கு சாப்பிட சில மணி நேரத்திலேயே அதிக பசி எடுக்கும். இதனால் கிடைத்த நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதால் நமது உடல் எடை அதிகரிக்கிறது. இதுப்போன்ற நிலையை நீங்களும் சந்தித்தால், இனி சோம்பு தண்ணீரைக் குடிக்கவும். இதற்கு இயற்கையிலேயே பசியை அடக்கும் பண்புகள் உள்ளது.

No comments:

Post a Comment