Tuesday, May 7, 2024

உங்களுக்கு என்ன நடந்துள்ளது , என்ன நடக்கிறது

என்ன நடக்கப்போகிறது .

என்பதற்கு நீங்கள் தான் பொறுப்பாளி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் .


முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டதுமே நீங்கள் முதிர்ச்சி பெற்றுவிடுவீர்கள் . 


கடவுளின் தூதரைத் தேடுவதை நிறுத்திவிடுவீர்கள் .


என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது . 


அற்புதங்கள் ( Miracles) எப்போதுமே நிகழ்வதில்லை . 


இயற்கை தன் விதிகளை மாற்றுவதே இல்லை .


நீங்கள் இயேசு , மோசஸ் , கிருஷ்ணர் , புத்தர் போன்ற யாராய் இருந்தாலும் இயற்கை அதைப் பொருட்படுத்தாது .


நீங்கள் யார் என்று அறிந்து கொண்டு அது பாரபட்சம் காட்டுவதில்லை . 


அது தன் விதி முறையைக் கடைப்பிடிக்கிறது . 


இந்த விதிமுறையைத் தான் நான் தம்மா , தாவோ , லோகோஸ் என்கிறேன் . 


உண்மையாக ஆன்மவயப்பட்ட ஒருவன் இயற்கையின் விதிமுறையைப் பின்பற்றுவான் .


நான் நரகத்தைப் பற்றியோ , சொர்க்தைப் பற்றியோ , தண்டனை பற்றியோ , பரிசு பற்றியோ எதையும் சொல்வதில்லை .


கடந்த காலத்தை உங்கள் தலைமேல் சுமக்காமல் இருங்கள்


இன்னும் வந்து வாய்க்காத எதிர்காலத்திலும் வாழாதீர்கள் . 


இங்கு இப்போது உங்கள் முழு சக்தியையும் குவித்தபடி வாழுங்கள் .


உங்களால் முடிந்த அளவுக்கு ஆழ்ந்து அதைத் தீவிரமாக , முழுதுமாக இத்தருணத்தில் கொட்டிக் குவியுங்கள் .


அத்தகைய தருணத்தில் தான் வாழ்வை உணர முடியும் ........


.#ஓஷோ#

No comments:

Post a Comment