என்ன நடக்கப்போகிறது .
என்பதற்கு நீங்கள் தான் பொறுப்பாளி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் .
முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டதுமே நீங்கள் முதிர்ச்சி பெற்றுவிடுவீர்கள் .
கடவுளின் தூதரைத் தேடுவதை நிறுத்திவிடுவீர்கள் .
என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது .
அற்புதங்கள் ( Miracles) எப்போதுமே நிகழ்வதில்லை .
இயற்கை தன் விதிகளை மாற்றுவதே இல்லை .
நீங்கள் இயேசு , மோசஸ் , கிருஷ்ணர் , புத்தர் போன்ற யாராய் இருந்தாலும் இயற்கை அதைப் பொருட்படுத்தாது .
நீங்கள் யார் என்று அறிந்து கொண்டு அது பாரபட்சம் காட்டுவதில்லை .
அது தன் விதி முறையைக் கடைப்பிடிக்கிறது .
இந்த விதிமுறையைத் தான் நான் தம்மா , தாவோ , லோகோஸ் என்கிறேன் .
உண்மையாக ஆன்மவயப்பட்ட ஒருவன் இயற்கையின் விதிமுறையைப் பின்பற்றுவான் .
நான் நரகத்தைப் பற்றியோ , சொர்க்தைப் பற்றியோ , தண்டனை பற்றியோ , பரிசு பற்றியோ எதையும் சொல்வதில்லை .
கடந்த காலத்தை உங்கள் தலைமேல் சுமக்காமல் இருங்கள்
இன்னும் வந்து வாய்க்காத எதிர்காலத்திலும் வாழாதீர்கள் .
இங்கு இப்போது உங்கள் முழு சக்தியையும் குவித்தபடி வாழுங்கள் .
உங்களால் முடிந்த அளவுக்கு ஆழ்ந்து அதைத் தீவிரமாக , முழுதுமாக இத்தருணத்தில் கொட்டிக் குவியுங்கள் .
அத்தகைய தருணத்தில் தான் வாழ்வை உணர முடியும் ........
.#ஓஷோ#
No comments:
Post a Comment