வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதனும் இல்லை...
தவறே செய்யாதவன் மனிதனும் இல்லை...
ஆனால் தவறு என்று தெரிந்தும் மீண்டும் அதனை செய்பவன்
மனிதனே அல்ல.!!
யாரையும் நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்...
தொடக்கத்தில் நான் இருக்கேன் என்பார்கள்...
முடிவில் நான் அப்பவே சொன்னேன்
என்பார்கள்.!!
மறைத்துப் பேசுபவர்களை நல்லவராகவும்...
மனதில் பட்டதை பேசுபவர்களை கெட்டவராகவும்...
சித்தரிக்கப்படுகிறார்கள் இவ்வுலகில்.!!!
உறவுனு சொல்லிக்க ஆயிரம் பேர் இருக்கலாம்...
ஆனால் நம் உணர்வை புரிந்து கொள்ள ஒருத்தராவது இருக்கனும்...
அப்போது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.!
இவ்வுலகில் நல்லவன் கெட்டவன் என்ற கணக்கெல்லாம்
அன்பு,பாசம் போன்ற குணத்தை வைத்து இல்லை...
தேவைப்படும் வரை நாம் நல்லவன்...
தேவை முடிந்தால் நாம் கெட்டவன்.!!
நம்மால் முடியும் என்று நம்மை ஊக்கப்படுத்தும்
மனிதர்களுடன் தான் பழக வேண்டும்.
ஏனெனில் அவர்கள் தான் நாம் விழும்போதெல்லாம்
நம்மை தாங்கி முன்னேற்றி செல்வார்கள்.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖕
No comments:
Post a Comment