Thursday, May 2, 2024

தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம்

 


தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம், தயவுசெய்து அவைகளைக் கொல்ல வேண்டாம்.

தேனீக்கள் அதிகதூரம் கூட்டமாக பயணம் செய்பவை, சில நேரம் உணவு கிடைக்காத களைப்பில் சோர்ந்து இம்மாதிரியான நிலையில் ஒய்வு எடுக்கும்... ஆனால் இந்த ஒய்வு 24 மணிநேரத்தை தாண்டாது... வேறு இடங்களுக்கு பறந்து சென்று விடும்... அதனால் அவைகளை தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள்... நீங்கள் ஏதும் தொந்தரவு செய்யாமல் தேனீக்களாக உங்களை காயப்படுத்த மாட்டார்கள்.

நீங்கள் உதவ விரும்பினால், ஒரு தட்டையான தட்டில் சிறிது சர்க்கரை தண்ணீருடன் வைக்கவும்.

தேனீக்கள் சாப்பிட்டு, ஆற்றல் பெற்று பறந்துவிடும். 


புலம்பெயர்ந்த தேனீக்களை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும், அவைகள் நமது மனித உயிர்களின் காப்பீடு ஆகும். 


தேனீக்கள் இல்லாமல் போனால் இப்பூமியில் மனிதர்களும் இருக்க மாட்டார்கள்.



No comments:

Post a Comment