_*...*_
_*எகிப்து மன்னன்*_
_*பாரூக் பட்டம்*_ _*துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த*_ _*போதுதான்*_
_*மனிதாபிமானம்*_ _*என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.*_
_ஆனால் அரண்மனை வாசத்திலே அதனை உணர்ந்து கொண்ட_ _சித்தார்த்தர்_
_கௌதம புத்தர்_
_ஆன வரலாறும்_ _உண்டு._
_*கல்லூரியில் படிக்கும் போது ஒரு இளைஞனுக்கு
எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.*__கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது._
_*இளமைக்காலத்து ஆரவாரம்*_
_*முதுமை அடைய*_ _*அடைய குறைந்து வருகிறது.*_
_ஒவ்வொரு_
_துறையிலும்_ _நிதானம்_ _வருகிறது._
_*இளம்பருவத்தில்*_
_*இறைவனைப்*_ _*பற்றிய சிந்தனை*_ _*அர்த்தமற்றதாகத் தோன்றும்.*_
_வாழ்வில் அடிபட்டு வெந்து நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில்_ _நடைபெறுவது_
_புத்தியில் படும்._
_*பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.*_
_பக்குவம் வர வர_
_ரத்தம் வற்ற வற்ற_
_இந்தத்_ _தத்துவங்கள்_ _எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்._
_*நடைமுறைக்கு ஒத்த சிந்தனை பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.*_
_கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதைகளையும் மர்மக்கதையும் படிப்பதில் அவன் கவனம் செலுத்துவான்._
_*காதலித்து*_ _*தோற்ற பின் தான்*_
_*அவனுக்கு பகவத் கீதையைப்*_ _*படிக்கும் எண்ணம் வரும்.*_
_விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்கு பெயர் போனது._
_எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு அதைவிட உலகமே கிடையாது என்று வாதாடும்._
_*எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.*_
_பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டும் அல்ல அங்கு சிலையில் இருக்கும் அழகு கூடத் தெரியாது._
_*50 வயதில் கோயிலுக்கு போனால் சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.*_
_இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டும் இல்லை பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது._
_*ஏன் உடம்பு கூட 20 வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.*_
_*40க்கு மேலே தான் இது வாய்வு இது பித்தம் என்ற புத்தி வருகிறது.*_
_டென்ஷன் என்ற ஆங்கில_ _வார்த்தைக்கு சரியான தமிழ்_ _வார்த்தை எனக்குப்_ _புரியவில்லை_
_முறுக்கான நிலை_ _என்று _அதைக் கூறலாம்._
_*அந்த நிலையில் எதையும் செய்யலாம்.*_
_*இப்படியும் செய்யலாம்*_ _*என்கிற திமிர் வருகிறது.*_
_அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு இதைத்தான் செய்யலாம்_
_இப்படித்தான் செய்யலாம்_
_என்ற புத்தி வருகிறது._
_*ஞான மார்க்க பக்குவம் அப்படிப்பட்டதுதான்.*_
_உள்ளம் உடலுக்குத் தாவி உடல் ஆன்மாவுக்கு தாவிய நிலையை பக்குவப்பட்ட நிலை._
_*தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை அதையே அழிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சி அடைகிறது. அதற்குப் பிறகு அந்த தேளிற்கு கூட அனுதாபம் காட்டும் ஞானியாக அது மாறிவிடுகிறது.*_
_பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது._
_*ஆரம்பத்தில் இதுதான் சரி என்று ஒன்றை முடிவு*_ _*கட்டிவிட்டு*_
_*பின்னால் இது தவறு என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.*_
_சரியாக கணக்கிட்டால் மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்._
_*முதற்கட்டம் -*_
_ஒன்றுமே புரியாத_ _உணர்ச்சி கூத்து._
_*இரண்டாவது கட்டம் -*_
_ஏதோ இருப்பதாக_ _ஆனால் தெளிவாகத் தெரியாத மயங்கிய நிலை._
_*மூன்றாவது கட்டம் -*_
_பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும் நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை._
_*இந்த மூன்றாவது நிலையை முதற்கட்டத்திலே எழுதியவர்கள் பலர் உண்டு.*_
_சுவாமி விவேகானந்தரைப் போல வளைந்து கொண்டே_
_வளர்ந்த மரங்கள் உண்டு._
_*அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.*_
_மற்றவர்கள் அனுபவத்தின் மூலமாகதானே பக்குவ நிலையை அடைய வேண்டி இருக்கிறது._
_*தூக்கத்திற்கும் விழிப்பிற்கும்*_
_*நடுவே தடுமாறும்*_ _*மனிதர்கள்*_
_*நாட்டிலே மிக அதிகம்.*_
_ஒன்று தூங்குவது என்றால்_
_நிம்மதியாக தூங்கி விட வேண்டும்._
_*விழிப்பதென்றால்*_
_*சுறுசுறுப்பாக*_ _*விழித்துக் கொள்ள வேண்டும்.*_
_தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலன் கிட்டாது._
_விழிப்பின் பலனும் கிட்டாது._
_*மனப்பக்குவம் என்பது*_
_*அனுபவங்கள் முற்றி பழுத்த நிலை.*_ _*அந்த நிலையில்*_
_*எதையுமே இல்லை என்று மறுக்கின்ற எண்ணம் வராது.*_
_இல்லை என்று சொல்பவனுக்கு_
_எந்த புத்தியும்_ _தேவையில்லை_
_எதைக் கேட்டாலும் இல்லை என்று_ _சொல்ல முட்டாளாலும் முடியும்._
_*ஆனால் உண்டு என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலை நாட்ட போதுமான அறிவு தேவைப்படும்.*_
_பூமிக்கு கீழே என்ன இருக்கிறது_
_என்று கேட்டால் எதுவுமே இல்லை_
_என்று குழந்தை கூட_
_பதில் சொல்லி விட முடியும்._
_*"ஆனால் அடியிலே நீர் அதன் கீழே நெருப்பு என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.*_
_பாத்திரம் செய்பவனுக்கு_
_பல நாள் வேலை._
_போட்டு_ _உடைப்பவனுக்கு_
_ஒரு நாள் வேலை._
_*நாத்திகன் எப்போதும் தெளிவாக இருக்க முடியும்.*_ _*காரணம் எதை கேட்டாலும் எந்திரம் போல் இல்லை என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.*_
_ஆனால் ஆத்திகனோ விபூதிக்கு ஒரு காரணம்._
_குங்குமத்திற்கு ஒரு காரணம்._ _சொல்லியாக வேண்டும்._
_*சொல்வது மட்டுமல்ல*_
_*எதிரியையும்*_ _*ஒப்புக்கொள்ள*_
_*வைக்க வேண்டும்.*_
_ஆத்திகன் பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்._
_*ஜனனம் மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.*_
_*அப்படி ஆராய்ந்து இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.*_
_வேதங்களின் முடிவையே_
_விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது._
_*ஆனால் விஞ்ஞானமும் அறியாமல் மெய்ஞானமும் மறையாமல் அஞ்ஞானத்தை கொண்டு உழலும் நாத்திகனுக்கு எல்லாம் இயற்கையாக நடக்கின்றன என்று சொல்லத் தெரிகிறதே தவிர அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.*_
_பக்குவ நிலைக்கும்_
_பக்குவமற்ற_ _நிலைக்கும்_
_வேறுபாடு இதுதான்._
_*கோயிலுக்கு போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்.*_
_*அப்படி கோயிலிலே என்ன இருக்கிறது என்று நாத்திகன் கேட்கிறான்.*_
_அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில்_ _அந்த தேங்காய்க்குள்_
_என்ன இருக்கிறது என்பது_
_அவனுக்குத் தெரியுமா._
_*அதில் வழுக்கையும் இருக்கலாம்.*_
_*காயும் இருக்கலாம்.*_
_ஆகவே உடைத்த பின்பே காயை கண்டுகொள்ளும்_ _மனிதன் உணர்ந்த பின்பு தெய்வத்தை காண முடியும் என்பது உறுதி._
_*கடவுளே இல்லை என்று வாதாடியவன் எவனும் எனக்கு மரணமே இல்லை என்று வாதாட முடியவில்லை.*_
_மரணம் என்று உணரப்படும் போதே சிலருக்கு பக்குவம் வருகிறது._
_*மிகப் பெரிய நாத்திகர் கூட தமது அந்திமக்காலத்தில் யார் கொடுத்த விபூதியையும் பூசிக் கொள்கிறார்கள்.*_
_மரணத்தின் பின் எங்கே போகப்_ _போகிறோம் என்று_
_நிச்சயமாக தெரியும்_ _வரை_
_ஈஸ்வரன் ஒருவன் இருப்பது உறுதி._
_*✒️ ~ கவியரசு கண்ணதாசன்*_
*📚அர்த்தமுள்ள இந்துமதம்*_
No comments:
Post a Comment