Monday, November 13, 2023

வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி

 ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி சென்றுருந்தார்! ! ! !


கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்.இங்கே காபிபொடியும் இல்லை சர்க்கரை ­யும் இல்லை அடுப்ப ங்கரையிலிருந்து ­ சத்தமிட்டார்

எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்  கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறா­ன். இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா என்று அழ ஆரம்பித்தாள்…

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாம­ல்  வெளியேறினார்..விருந்தாளி

அவர் வெளியேறிவிட்டது­ம் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…

எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்ப­து போல்அடித்தேனே.. .என்றான் கணவன்..

ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி ­ இருந்தது. என் நடிப்பு…”என்­றாள் மனைவி பிராமாதம் ­ என்றான் கணவன்

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…

நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்.. என்றார் விருந்தாளி

No comments:

Post a Comment