Monday, November 13, 2023

நம்மையும் பிறர் எடை போடுவார்கள்

ஒரு பெரிய வியாபாரி.வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் லாபம் சம்பாதிப்பவர் அவர் அவ்வப்போது வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வதுண்டு.ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. 

அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.அந்த ஆள் பார்ப்பதற்கே படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார்.பெரிய மீசை.தலை வழுக்கையுடன் ஒற்றைக் கண்ணனாய் இருந்தார்.ஆள் மிக பலசாலியாகவும் உடலில் ஆங்காங்கே காயம் பட்ட வடுக்களுடனும் இருந்தார்.வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் தெரியவில்லை.''பெட்டகக் காப்பாளர் சொன்னார்,''பரவாயில்லை,கொடுங்கள்.நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று.உங்கள் அறைக்கு வந்திருப்பவரும் சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.

''நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.ஏற்றுக் கொள்வதுமில்லை.

No comments:

Post a Comment