Thursday, November 23, 2023

படகில் இருந்த ஓட்டை

மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்தார்!

அப்பணியை கண்ணும் கருத்துமாய் , கவனத்துடன் செய்து வரும்போது அப்படகின் அடியில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதைக் கண்ட பெயிண்ட்டர் மிகவும் நேர்த்தியாக அந்த ஓட்டையை அடைத்து சீர் செய்து , பெயிண்ட் வேலையையும் முடித்து, அதன் உரிமையாளரிடம் காண்ட்ராக்ட் பேசியபடி தன் தொகையை வாங்கிக்கொண்டு , மிக அழகாக பெயிண்ட் செய்துள்ளதற்காக பாராட்டையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார் !

மறுநாள் , அந்தப்படகின் உரிமையாளர் பெயிண்டரை தேடி அவரிடத்திற்கு ஒரு பெரிய தொகை மற்றும் பரிசுடன் வந்தார்.
"நேற்றே எனக்கு சேர வேண்டியதை தந்து விட்டீர்களே ஐயா" என்றார் பணிவாய்!

அதற்கு அவர் "இது நீங்கள் செய்த பெயிண்ட்டிங்காக அல்ல ! நீங்கள் அடைத்த படகின் ஓட்டைக்காக !"

" அது ஒரு சிறிய வேலை !அதற்குப்போய் ஏன் இதெல்லாம் " என்றார் பெயிண்ட்டர் !

அதற்கு அந்த படகின் உரிமையாளர் சொன்னார்.
"நண்பரே ! உங்களுக்குத் தெரியாது என்ன நடந்தது என்று !
நான் உங்களை பெயிண்ட் செய்ய சொன்னபோது அதிலிருந்த ஓட்டையை முற்றிலும் மறந்திருந்தேன் !

பெயிண்ட் காய்ந்தபின் என் குழந்தைகள் அந்த படகை எடுத்துக்கொண்டு விளையாட்டாய் மீன் பிடிக்க போய்விட்டனர் !
அவர்களுக்கும் படகில் ஓட்டை இருந்தது தெரியாது !

அவர்கள் படகை எடுக்கும் போது நானும் வீட்டில் இல்லை !
வீட்டிற்கு திரும்பி வந்தபோது படகை எடுத்துக்கொண்டு குழந்தைகள் மீன்பிடி விளையாட போய் உள்ளதாக கேள்விப்பட்ட போதுதான் படகில் இருந்த ஓட்டை ஞாபகம் வந்தது !

மிகவும் பதறிப்போய் அவர்களைத் தேடி ஓடினேன் , என்ன ஆயிற்றோ என்று !
அவர்கள் மகிழ்ச்சியாய் குதூகலத்துடன் திரும்பி வந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் நெகிழ்ந்துபோனேன் !
ஓடிப்போய் அந்த ஓட்டையை தேடினேன் !
வெகு கவனமாய் , அக்கறையோடு சரிசெய்யப்பட்டிருந்த்தை கண்டவுடன் மிகவும் ஆச்சர்யமான உங்கள் செயலை பாராட்ட ஓடி வந்தேன்.

இந்த சிறிய செயல்தான் மகத்தாய் சில உயிர்களை காப்பாற்றியுள்ளது" என்றார் !

நாமும் நம் வாழ்வில் கடமையே என காரியமாற்றாமல் , எதையும் பிரியமாய் , கவனமாய் , அக்கறையாய்,பொறுப்பாய் செய்வோம் !

No comments:

Post a Comment