Monday, November 13, 2023

கொடுத்த முறை தான் பிடிக்கவில்லை

 ஒரு வியாபாரி நாய் ஒன்றை அன்புடன் வளர்த்தார். ஒரு சமயம் நாயின் உடல்நிலை சரியில்லாமல் போனது அதை சோதித்த கால்நடை மருத்துவர் அதற்கு மீன் எண்ணெய் கொடுக்கச் சொன்னார். உடனே பெரிய புட்டி நிறைய மீன் எண்ணெய் வேலையாட்களை நாயை வாங்கி கொண்டுவருமாறு பணித்தார் வியாபாரி. நாயை மடியில் வைத்து எண்ணெயை கெண்டி வழியாக ஊற்ற நினைத்தார். பலவந்தமாக எதோ செய்யப் போகிறார்கள் என்று நினைத்த நாய் திமிறிக் கொண்டு தப்பியோடியது. ஓடும் பொழுது எண்ணெய் புட்டி கீழே விழுந்து உடைந்தது


வேலையாட்கள் உடைந்த புட்டியையும் சிந்திய எண்ணெயையும் அப்புறப்படுத்த முறத்துடன் வந்தார். என்ன ஆச்சரியம்! சிந்திய மீன் எண்ணெயை நாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தது அதற்கு அது பிடித்தும் இருந்தது. கொடுத்த முறை தான் பிடிக்கவில்லை என்று அனைவரும் புரிந்து கொண்டார்

No comments:

Post a Comment