Friday, July 5, 2024

பாவட்டை - தினம் ஒரு மூலிகை

 ** **

மெல்லிய காம்புள்ள இலைகளை எதிர் அடுக்கில் கொண்ட குறும் செடி குத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது புதர்காடுகளிலும் பெரும் காடுகளிலும் தானே வளர்கிறது இலை காய் வேர் மருத்துவ பயன் உடையவை இலை சிறுநீர் பெருக்கி

மலமிளக்கும் காய் தாதுகளுக்கு பலம் கொடுக்கும் மலமிளக்கும் வேர் அல்லது இலை கொன்றை சிற்றாமுட்டி வேலிப்பருத்தி இவற்றின் வேர் மிளகு ஓமம் வகைக்கு 10 கிராம் இடித்து நாலு லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராக காய்ச்சி வடித்து வேலைக்கு 30 மில்லியாக தினம் மூன்று வேளை கொடுத்து வர வாத ஜுரம் போகும் பாவட்டை வேர் பூலாப்பூ சம அளவு அரைத்து கனமாக பூச அரையாப்பு கட்டிகள் கரையும் பாவட்டை காயை சுண்டக்காய் போல குழம்புகளில் சேர்த்து உண்டு வர வாத கப நோய்கள் விரைவில் குணமாகும் இலையை வதைக்கி வீக்கம் வலி ஆகியவற்றிற்கு இளம் சூட்டில் வைத்துக் கட்ட அந்த நோய்கள் குணமாகும் மூல நோய் வலி தீரும் வேர் பொடியுடன் சுக்குத்தூள் சமநளவு கலந்து நேரில் கொடுத்து வர மகோதர வீக்கம் குறையும் நன்றி.

No comments:

Post a Comment