Saturday, August 24, 2024

 *தினம் ஒரு மூலிகை* நேற்றைய தொடர்ச்சி *வில்வம்*



 இலையை உலர்த்தி பொடித்து அரை தேக்கரண்டி தேனில் குழைத்து காலை மாலை கொடுக்க நீர்கோவை தலைவலி மண்டை குடைக்கல் சீதள இருமல் தொண்டை கட்டு காசம் தீரும் இலை சூரணம் அரை தேக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய்யில் காலை மாலை உட்கொள்ள எரிச்சல் பித்தம் வயிற்று வலி குன்ம எரிச்சல் வயிற்றுப்புண் மலச்சிக்கல் பசியின்மை நீர்த்தாரை எரிச்சல் வெள்ளை வெட்டை தீரும் ஒரு தேக்கரண்டி சூரணத்துடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணி சாறு கலந்து கொடுக்க மஞ்சள் காமாலை விரைவில் தீரும் பிஞ்சை அரைத்து தயிரில் கொடுக்க குழந்தைகளுக்கு காணும் வயிற்றுக் கடுப்பு சீதபேதி புண் ஆகியவை தீரும் பழச் சதையை உலர்த்தி புடித்து அதில் ஒரு கிராமில் சிறிது சர்க்கரை கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வர பேதி சீதபேதி பசியின்மை ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment