Monday, August 26, 2024

வேலிப்பருத்தி

 *தினம் ஒரு மூலிகை* *வேலிப்பருத்தி*

இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி முட்டை வடிவ விதைகளில் பட்டு போன்ற பஞ்சு இழைகள் காணப்படும் இதனை உத்தாமணி என்றும்

Sunday, August 25, 2024

 


*தினம் ஒரு மூலிகை* வெள்ளை பூண்டு கடுமையான மனம் உடைய குமிழ் வடிவ கிழங்கையும் தட்டையான இலைகளை உடைய சிறு செடி கிழங்குகளே மருத்துவ பயன் உடையது அதாவது வெள்ளை பூண்டு பசி தூண்டுதல் செரிமானம் மிகுதல் வயிற்று வாய்வு அகற்றல் சிறுநீர் பெருக்குதல் குடற்புழு கொள்ளுதல் கோழை அகற்றுதல் உடல் தேற்றுதல் வியர்வை பெருக்குதல் நோவு தணித்தல் காய்ச்சல் தணித்தல் என்புருக்கி தனித்தல் காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து கடைந்து சாப்பிட வாயு தெரியாமை சளி ஆகியவை தீரும் குடல் புழுக்கள் மடியும் பூண்டை இழைத்து பருகட்டிகளில் பூச அவை உடைந்து கொள்ளும் வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவாசாரத்தை குறைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிற மாதிரி இயல்பு நிறமாகும் 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை 50 மில்லி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் விட்டு வர காது வலி காது மந்தம் ஆகியவை தீரும் வண்டு குளவி பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்து கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும் நன்றி...

Saturday, August 24, 2024

 உன்னதமான #வாழ்க்கையை வாழலாம் வாருங்கள். 

முடிந்த அளவாவது உதவுபவர்களுக்கு முதன்மையான வாழ்க்கை...

நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம் ..!

நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா? 

எதுக்கு இன்னொருத்தருக்கு உதவி பண்ணணும்?

பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்? 

நாமும் நம்ம குடும்பமும் நன்றாக இருந்தால் போதாதா

என்றே பலரும் நினைக்கின்றனர்..!

மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார்

`சமுதாயமும் தனி மனிதனும்` என்ற புத்தகத்தில் 

அவரது எண்ணங்களின் சாரம் இது:

"தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி வாழும் தன்மை உடையது தான்.

பிற மனிதர்கள் பயிராக்கிய தானியங்களையே நாம் உட்கொள்கிறோம், பிறர் நெய்த ஆடைகளையே நாம் உடுத்துகிறோம், பிறர் கட்டிய வீடுகளிலேயே நாம் வசிக்கிறோம். நாம் வாழ்வதற்கான அன்றாட அறிவும் தகவல்களும் நமது நம்பிக்கைகளும், பெரும்பாலும் பிற மனிதர்கள் மூலமே நம்முள் வியாபித்துள்ளன.

சமுதாயம் என்ற சத்தான விளை நிலம் இல்லாமல் எப்படி தனிமனிதனால் வளர்ச்சியடைய முடியாதோ, அதே போன்று, சிந்தனைத் திறன்மிக்க தனிமனிதர்கள் இல்லையென்றால், சமுதாயத்தால் முன்னேற முடியாது" என்பதை அவர் அதில் சொல்லி இருக்கிறார்

"உதவி"

ஒரு நாள் ஒரு எறும்பு ஒரு குளத்தில் தவறி விழுந்து விட்டது. தண்ணீரில் இருந்து கரைக்கு வர முடியாமல் அது தத்தளித்தது. இதை அக் குளக்கரையில் இருந்த மரத்திலிருந்த ஒரு புறா கவனித்தது அது எறும்புக்கு உதவி செய்ய எண்ணி மரத்திலிருந்து ஒரு இலையைப் பிடுங்கி எறும்பின் அருகில் போட்டது.

இலை தண்ணீரில் மிதந்தது. அந்த இலையின் மேல் ஏறி எறும்பும் கரை சேர்ந்து உயிர் பிழைத்தது தன்னைக் காப்பாற்றிய புறாவிற்கு மனதினுள் நன்றி சொல்லிக் கொண்டது.

பின்னர் ஒரு நாள் அந்தப் புறா மரத்தில் இருக்கும் போது ஒரு வேடன் அதைக் கண்டான். பசியால் உணவு தேடிக் கொண்டிருந்த அவ் வேடன் அதைக் கொல்ல எண்ணி, தன் அம்புவில்லை எடுத்துக் குறி பார்த்தான். வேடன் குறி பார்ப்பதை அந்தப் புறா கவனிக்கவில்லை.

இதை எறும்பு கண்டது. தன்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றிய புறாதான் அது என்பதை அந்த எறும்பு உணர்ந்தது. உடனே வேகமாக ஓடிப்போய் வேடனின் காலில் கடித்தது. வேடன் அலறியபடி காலைக் குனிந்து பார்த்தான். இந்தச் சத்தத்தைக் கேட்டுப் புறா திரும்பிப் பார்த்தது.

தன்னைக் கொல்ல முயன்ற வேடனைக் கண்டது. உடனடியாக மரத்தை விட்டுப் பறந்தது. பறக்கும் போது அவனைக் கடித்த எறும்பைக் கண்டது. தான் முன்னர் காப்பாற்றிய எறும்பு தன்னை இப்போது காப்பாற்றியதை நினைத்து மகிழ்ச்சியால் நெகிழ்ந்தது.

ஓரறிவு உள்ள எறும்பு புறாவுக்கே அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது, ஆரறிவு படைத்த மனிதனுக்கு இது அவசியம் இருக்க வேண்டுமல்லவா?

மரம் உதவுகிறது நிழல் தந்து ..

புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து ..

ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட ...

நாம் சற்று கவனித்தோமானால் எல்லாமே உதவுகின்றன என்று தோன்றும்!

ஆகவே முடிந்த அளவு கண்டிப்பாக பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.

அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்.

நீங்கள் செய்கிற உதவியைப் பெறுபவர் அவர் மனசார வாழ்த்துகிறார்ப்போல் அது இருக்கட்டும்...

அது உதட்டால் அல்ல ..!

நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் பிரபஞ்ச விதி ..!

முடிந்த மட்டும் உதவுவோம் ..!

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.

நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.

எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்!

நாம் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம். ஓர் உன்னத வாழ்வை வாழ்வோம்...

வெள்ளறுகு



தினம் ஒரு மூலிகை* *வெள்ளறுகு*.   வெளியே இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வெண்மையான பூக்களை கொண்ட சிறு செடி கசப்பு சுவை உடையது சமூகத்தை உலர்த்தி பாதுகாப்பாக வைத்திருக்க பல ஆண்டுகள் கூட கெடாமல் நின்று பயன் தரக்கூடியது வெள்ளருகு இதில் இரும்பு சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம் குளோரைடு சல்பேட் பாஸ்பேட் மற்றும் வைட்டமின் சி மற்றும் பி ஆகியன அடங்கி உள்ளன நோய் நீக்கி உடல் தேற்றவும் பசி மிகுக்கவும் தாது பலம் மிகுக்கவும் மருந்தாக பயன்படுகிறது சமூகச் சாறு 25 மில்லி கொடுத்து இலையை அரைத்து கடிவாயில் கட்ட வாந்தி பேதியாகி பாம்பு நஞ்சு தீரும் ஓரிரு முறை கொடுக்க வேண்டும் உப்பில்லா பத்தியம் தேவையான சமுலம் மையாய் அரைத்து வெந்நீரில் குழைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர சொறி சிரங்கு தினவு மேகத் தடிப்பு ஊழல் ஆகியவை தீரும் மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் சமூகத்தை எலுமிச்சை அளவு அரைத்து குடிக்க கர்ப்பப்பை மாதவிடாய் கோளாறு தீரும் சமூலம் ஒருபிடி 10 மிளகு ஒரு துண்டு சுக்கு ஒரு தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக காய்ச்சி காலை மாலை குடித்து வர குடல் வாதம் வாத ரோகங்கள் தீரும்.

 *தினம் ஒரு மூலிகை* நேற்றைய தொடர்ச்சி *வில்வம்*



 இலையை உலர்த்தி பொடித்து அரை தேக்கரண்டி தேனில் குழைத்து காலை மாலை கொடுக்க நீர்கோவை தலைவலி மண்டை குடைக்கல் சீதள இருமல் தொண்டை கட்டு காசம் தீரும் இலை சூரணம் அரை தேக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய்யில் காலை மாலை உட்கொள்ள எரிச்சல் பித்தம் வயிற்று வலி குன்ம எரிச்சல் வயிற்றுப்புண் மலச்சிக்கல் பசியின்மை நீர்த்தாரை எரிச்சல் வெள்ளை வெட்டை தீரும் ஒரு தேக்கரண்டி சூரணத்துடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணி சாறு கலந்து கொடுக்க மஞ்சள் காமாலை விரைவில் தீரும் பிஞ்சை அரைத்து தயிரில் கொடுக்க குழந்தைகளுக்கு காணும் வயிற்றுக் கடுப்பு சீதபேதி புண் ஆகியவை தீரும் பழச் சதையை உலர்த்தி புடித்து அதில் ஒரு கிராமில் சிறிது சர்க்கரை கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வர பேதி சீதபேதி பசியின்மை ஆகியவை தீரும் நன்றி.

Wednesday, August 21, 2024

தடைகளை வெல்வது எப்படி...

 *


இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிற வர்கள் அநேகம்.


இதற்கெல்லாம் காரணம்  அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது தான்.


நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வது உண்டு..


அதாவது, யார் ஒருவர் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறாரோ, அவரே தனக்குத் தானே நண்பராகிறார்.


யார் ஒருவர் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறாரோ அவர் அவருக்கே எதிரியாகிறார் என்று அர்த்தம்.,


பெரும்பாலான நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்து இருக்கிறது என்பது புரியும்.


அது போன்று தான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம்.


செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது.

உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும்.

ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும்

இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்..


 தடைகளை வெல்வது எப்படிங்க? என்று நீங்கள் கேட்கலாம்.


இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர்

எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.


ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்து விட்டு திடீரென்று நின்று விட்டது.


மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.


பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது.

எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.


துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்


*மிகச் சிறிய    எறும்பின்* *தன்னம்பிக்கை* 

 *நமக்கு* *இருந்தால்* *கூடப்* *போதும்*. *எந்தத்* *தடையையும்* *வெல்ல* *முடியும். கவலையும்* *காணாமல்* *போய்* *விடும்* .


 எத்தனை தடைகள்* *குறுக்கிட்டாலும்* , *உள்ளத்தில்* *நம்பிக்கை* *மட்டும்* *இருந்து* *விட்டால்* *உங்களின்* *வெற்றியை* *யாராலும்* *தடுக்க* *முடியாது* .  


 *தன்னம்பிக்கை* *கொள்வோம்* ..! *தடைகளை* *கடந்து*  *வெற்றியை* *சுவைப்போம்* ..

Sunday, August 18, 2024

18 08 2024 செய்தித்துளிகள்

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செயல்படுத்தி வருகிறது என்றும் தொழில்நுட்ப கல்வி

Wednesday, August 14, 2024

 *இதய வலி Vs வாயுப்பிடிப்பு இவற்றை எப்படி கண்டுபிடிப்பது?*

லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம், மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று பார்க்கலாம்.வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம். மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவை பரவும். உதாரணமாகத் தோள்பட்டை, கை, முதுகுத் தண்டுவடம், கழுத்து, பற்கள், வாயின் தாடைப் பகுதிக்கு வலி பரவும். குறிப்பிட்ட ஒரே பகுதியில் மட்டும் தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும். வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அப்படியல்ல. வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது. வாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம். நெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். 

அதேபோல நெஞ்செரிச்சல்,அ சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும். இவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்டாக் (Panic Attack) எனப்படும். நெஞ்சுப்பகுதியின் நடுப்பகுதியில் வரக்கூடிய வலி இதயத்தில் ஏற்படும் வலியாக இருக்கும். இடது பக்கம் வரக்கூடிய வலி பெரும்பாலும் வாயுப்பிடிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால் இதயத்துக்கும், இரைப்பைக்கும் இடையில் டயாப்ரம் என்ற ஒரு சவ்வு தான் இருக்கும். இது நாம் இரவு நேரம் கடந்து சாப்பிடும் போதோ அல்லது நிறையை தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது வயிறு நிறைய சாப்பிடும் போதோ இந்தமாதிரி வாயுப்பிடிப்பு ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாத போது கூட வாயுப்பிடிப்பு ஏற்படும். இதற்கு சிறந்த வழி என்னவென்றால் ஆரோக்கியமான சாப்பாடு, அளவான தண்ணீர் தான். இந்த வாயுப்பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுவும் இரவு சாப்பாடு 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதுவும் அளவான தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், வயுறு முட்ட நீர் அருந்தக்கூடாது. இவ்வாறு செய்தால் மட்டுமே வாயுப்பிடிப்பை தவிர்க்க முடியும்.

.

வல்லாரை - தினம் ஒரு மூலிகை

 * *வல்லாரை*

வட்டமாகவும் அரைவட்ட வெட்டுப்பற்களுடன் கை வடிவ நரம்பு அமைப்புடனும் நீண்ட காம்புடைய ஆழமான இதய வடிவ இலைகளைக் கொண்ட கணுக்களில் வேர் விட்டு தரையோடு படரும் சிறு கொடி இனம் இலையே மருத்துவ பயன்

Tuesday, August 13, 2024

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(13-ஆக)

*டி.கே.மூர்த்தி.*


🎶 தமிழ்நாட்டின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ்ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர்.


🎶 சிறுவயதிலிருந்தே இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். இவரது முதலாவது கச்சேரி இவர் 10 வயதாக இருக்கும்போது நடைபெற்றது.


🎶 இவரின் திறமையைப் பார்த்து தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார்.


🎶 மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


*பிடல் காஸ்ட்ரோ.*


👨‍💼 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடல் காஸ்ட்ரோ பிறந்தார்.


👨‍💼 கியூபாவில் 1959ஆம் ஆண்டு தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிடல் காஸ்ட்ரோ 1959ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராகவும், 1976ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.


👨‍💼 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட பிடல் காஸ்ட்ரோ 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். பிடல் காஸ்ட்ரோ உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் ஆவார்.


👨‍💼 பன்னாட்டளவில் பிடல் காஸ்ட்ரோ 1979ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை மற்றும் 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்துள்ள இவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் ஆண்டு மறைந்தார்.


*ஃபிரெட்ரிக் சேங்கர்.*.


👨‍🔬 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்சுலினின் கட்டமைப்பு மற்றும் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடரை கண்டுபிடித்த ஃபிரெட்ரிக் சேங்கர் இங்கிலாந்தில் பிறந்தார்.


👨‍🔬 இவர் நியுக்ளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக 1980ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக வேதியியலுக்கான நோபல் பரிசை வால்டர் கில்பெர்க் என்பவருடன் இணைந்து வென்றார்.


👨‍🔬 இதன்மூலம் இவர் 2 முறை நோபல் பரிசை வென்ற 4வது நபராகவும், வேதியலுக்காக 2 முறை நோபல் பரிசை வென்ற ஒரே விஞ்ஞானி என்ற பெருமையையும் பெற்றார்.


👨‍🔬 இவர் ஒற்றை இழை வார்ப்புருக்களிலிருந்து புதிய டிஎன்ஏ போக்குகளை (strands) உருவாக்க கதிரியக்க நியூக்ளியோடைட்களை அறிமுகம் செய்தார்.


👨‍🔬 காப்ளே பதக்கம் பெற்ற ஃபிரெட்ரிக் சேங்கர் 2013ஆம் ஆண்டு தனது 95வது வயதில் மறைந்தார்.

 பிரச்னையைகளை நான் எனக்கு தெரிந்த அறிவில் எதிர்கொள்கிறேன் என்றே பயணித்து !! 

ஓர் கட்டத்தில் ..

பிரச்னையை தீர்க்கிறேன் என்ற பெயரில் இன்னும் பிரச்னையை வலுப்படுத்தவே செய்தோம் என்று உணர்ந்த மனமே, இறையருளை கொண்டு எதிர்கொள்வது எப்படி என்ற அடிப்படை சிந்தனைக்கே வரும் ..

முதலில் பிரச்சனையை அடிப்படையாக உருவாக்கியதே நீங்கள் தான்

 _*களவாடப்பட்ட திருச்செந்தூர் முருகன் சிலை திரும்பி வந்த அதிசயக் கதை தெரியுமா?*_

கடலில் மூழ்கியிருந்த முருகன் சிலையும், நடராஜர் சிலையும் எங்கிருக்கிறது என்பதை தெரியப்படுத்த முருகப்பெருமானே கனவில் வந்து தெரியப்படுத்திய கதை தெரியுமா? சக்தி வாய்ந்த திருச்செந்தூர்

 *தினம் ஒரு மூலிகை* *வசம்பு அல்லது சுடுவான்*H

பிள்ளை வளர்த்தி பல பெயர்கள் உண்டு குழந்தைகளின் பாதுகாவலன் மனம் உடைய கிழங்கு உள்ள சிறு செடி கிழங்கே மருத்துவ பயன் உடையது உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் உடல் தேற்றுதல்

Monday, August 12, 2024

 *


தினம் ஒரு மூலிகை*

 *கீரை* இதில் இரண்டு வகை உண்டு தண்டு பச்சை நிறம் மற்றும் சிகப்பு நிற தண்டுடைய கீரை இலை கோணங்களில் முள்ளுள்ள கீரை செடி இலைகள் சற்று நீண்ட வடிவமுடைய இலைகளையும் நுனியில் பூங்கோத்திணை உடையது சாலை ஓரங்களில் தானே வளரக்கூடிய செடி செடி முழுமையும் மருத்துவ பயன் உடையவை பசியை மிகுத்து தாதுக்களின் எரிச்சலை தனித்து அவற்றை துவலைச் செய்யும் தன்மை உடையது முள்ளி செடி வேர் 40 கிராம் ஓமம் 10 கிராம் வெள்ளை பூண்டு இரண்டு கிராம் ஆகியவற்றை அரைத்து பத்து அல்லது 15 கிராம் அளவாக நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வர வயிற்று வலி தீரும் இலையும் வேரும் சம அளவாக 100 கிராம் 750 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 30 மில்லியாக மூன்று வேளை கொடுத்து வர கட்டுப்பட்ட சிறுநீர் வெளியேறும் வேர் சாம்பலை சோறு வடித்த கஞ்சியில் குலைத்து பற்று போட கட்டிகள் விரைவில் உடைந்து கொள்ளும் இலைகளை கீரையாக சமைத்து உண்டுவர பசிமிகும் பேதி கட்டுப்படும் முள்ளி வேர் பிரண்டை வேர் கற்றாழை வேர் கடுக்காய் வெள்ளைப் பூண்டு சுக்கு மிளகு வகைக்கு 3 கிராம் அரைத்து புளித்த மோரில் கலைக்கு கொடுத்து வர உள்மூலம் தீரும் நன்றி

*அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்

 *இன்றைய திருக்கோவில்*

,*


தலைஞாயிறு, 


(திருக்கருப்பறியலூர்), 


நாகப்பட்டினம் மாவட்டம்.


காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


மூலவர்  –    குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர்)


அம்மன்  –    கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை)


தல விருட்சம்  –    கொடி முல்லை


தீர்த்தம்  –    சூரிய

Sunday, August 11, 2024

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(11-ஆக)

*வீ.துரைசுவாமி.*


🎻 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி கர்நாடக இசை வீணை வித்துவான் மைசூர் வீ.துரைசுவாமி பிறந்தார்.


🎻 இவரது முதலாவது இசைக்கச்சேரி பெங்களூர் காயன சமாஜத்தில் 1943ஆம் ஆண்டு நடைபெற்றது.


🎻 சென்னையில் முதன்முதலாக 1944ஆம் ஆண்டு ரசிக ரஞ்சனி சபா ஏற்பாடு செய்த இசைக்கச்சேரியில் வீணை வாசித்தார்.


🎻 சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகாமணி விருது, பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாதமி விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சிறப்பித்தது.


🎻 சிறிது காலம் கல்லீரல் அழற்சியால் (Hepatitis) பாதிக்கப்பட்டிருந்த துரைசுவாமி பெங்களூருவில் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மறைந்தார்.


*ஸ்டீவ் ஓனியாக்.*.


💻 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆப்பிள் கணினி நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஓனியாக் அமெரிக்காவில் பிறந்தார்.


💻 அமெரிக்கவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார்.


💻 இவர் 1976ஆம் ஆண்டு ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார்.


💻 1970ஆம் ஆண்டு ஆப்பிள்-1 மற்றும் ஆப்பிள்-2 ஆகிய கணினிகளை சிறு குழுவின் உதவியுடன் உருவாக்கினார்.


*எனிட் பிளைட்டன்.*


✍ குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் (Enid Blyton) 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.


✍ இவருக்கு சிறுவயதிலிருந்தே எழுத்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நாஷ் என்ற இதழில் அவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது.


✍ இவரது கவிதைகள், கதைகள் 1921ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் பிரசுரமாகின. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்களும் இடம்பெற்றன.


✍ 'மாடர்ன் டீச்சிங்', 'விஷ்ஷிங் சேர்' தொடர், 'தி ஃபேமஸ் ஃபைவ்', 'சீக்ரட் செவன்', 'லிட்டில் நூடி சீரிஸ்' ஆகிய புத்தகங்கள் இவருக்குப் புகழை பெற்றுத் தந்தன.


✍ தனக்கென்ற புதிய படைப்புலக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய எனிட் பிளைட்டன் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.


*ரஞ்சன் ராய் டேனியல்.*


👉 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்திய இயற்பியலாளர் ரஞ்சன் ராய் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார்.


👉 இவர் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணிபுரிந்தார்.


👉 மேலும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பர்மாண்டன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்.


👉 1976ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் 2005ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி மறைந்தார்.

 *இன்றைய நாள்..*

(11-ஆக)

*தேசிய மகன் மற்றும் மகள் தினம்.*


🧒👧ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தேசிய மகன் மற்றும் மகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


🧒👧பெற்றோர்களுக்கும் அவர்களது மகன்கள் மற்றும் மகள்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குடும்பத்தின் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் மகன் மற்றும் மகள்களை கொண்டாடும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 _*உங்கள் ஸ்மார்ட்போனே உங்கள் எதிரி... ஜாக்கிரதை!*_



*ஸ்மார்ட்போன்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், உலகத்துடன் இணைந்திருக்கவும் நமக்கு வசதி அளிக்கின்றன. ஆனால், இந்த வசதிகள் நம்மை ஆக்கிரமித்துவிட்டனவா? ஸ்மார்ட் போன்கள் நம் நலனுக்கான கருவிகளாக இருப்பதற்கு பதிலாக, நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் எதிரிகளாக மாறிவிட்டனவா? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்கப்போகிறது இந்தப் பதிவு.*


இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி உள்ளன. நாம் எழுந்தவுடன் அதை கையில் எடுத்தால்தான் நிம்மதியாக இருக்கிறது. தூங்குவதற்கு முன் அதிக நேரம் தொலைபேசி பார்ப்பது பலருக்கு பழக்கமாகிவிட்டது. தொலைபேசி மூலம் நமக்கு கிடைக்கும் தகவல்கள் மிக அதிகம். சமூக ஊடகங்கள், செய்திகள், பொழுதுபோக்குகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நாம் தொலைபேசியின் மூலம் எளிதாகப் பெறலாம். ஆனால், இந்த அதிகப்படியான தகவல்கள் நம் மனதை குழப்பி கவனத்தை சிதறடிக்கின்றன.


ஸ்மார்ட்போன் அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பல ஆய்வுகள் நம்மை எச்சரிக்கின்றன. ஸ்மார்ட்போனின் ஒளியானது தூக்கத்தை பாதித்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் கழுத்து, தோள் மற்றும் முதுகு வலி ஏற்படலாம். மேலும், இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மூளை செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 


ஸ்மார்ட்போன்கள் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கின்றன. நம் நண்பர்கள் குடும்பத்தினருடன் நேரில் உரையாடுவதற்கு பதிலாக தொலைபேசியில் சமூக ஊடகங்களில் உரையாடுவதற்கு அதிக நேரத்தை செலவிடுகிறோம். இது நம்முடைய சமூக உறவுகளை பாதித்து மனச்சோர்வு, தனிமை உணர்வை ஏற்படுத்துகிறது.


நாம் வேலை செய்யும்போது அல்லது படிக்கும் போது, அதிகமாக ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்துவதால் நம்முடைய வேலையில் கவனம் குறைகிறது. இதன் விளைவாக நாம் செய்யும் வேலைகள் தாமதமாகி, அதன் தரம் குறைகிறது. மேலும், இவை நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பற்றதாக்குகின்றன. சோசியல் மீடியா மற்றும் பிற ஆபத்தான இணையதளங்கள் மூலம் நம்முடைய தகவல்கள் திருடப்படலாம். இது நம்முடைய நிதி பாதுகாப்பு, புகழ் ஆகியவற்றை பாதிக்கக்கூடும். 


ஸ்மார்ட் போன்கள் நம் வாழ்வில் பல வசதிகளை வழங்கினாலும், அதிகப்படியான பயன்பாடு நம் உடல் நலம், மனநலம், சமூக உறவுகள், உற்பத்தி திறன் ஆகியவற்றை பாதிக்கும். எனவே, இதை நம் வாழ்வில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்த்து நம்முடைய வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதில் அனைவரும் கவனம் செலுத்துங்கள். 


🌹🌹🌹

 *தினம் ஒரு மூலிகை* *முத்தக்காசு(அ) கோரை கிழங்கு*



 கோரை இன சிறு புள் முட்டை வடிவ மனமுடைய சிறு கிழங்குகள் பெற்றிருக்கும் இதை முத்தக்காசு எனப்படும் கிழங்கு மருத்துவ பயன் உடையது செய்தல் உடல் மனம் ஊக்கியாக செயல்படுதல் சிறுநீர் வியர்வை பெருக்கல் மாதவிலக்கு தூண்டுதல் குடல் பலம் மிகுதல் நுண் புழு கொல்லுதல் சிறுநீரக கற்கரைத்தல் ஆகிய குணம் உடையது ஒரு கிராம் கிழங்கு பொடியை காலை மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை தாது பெருக்கம் பசி மிகுத்தல் உடற்பொலிவு ஆகியவை உண்டாகும் முத்தக்காசு சந்தனம் வெட்டிவேர் பொற்பாடகம் பேய்மிரட்டி சுக்கு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து ஒன்று இரண்டாய் இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி சம அளவாக காலை மாலை குடித்து வர ஜுரம் நீர்விடாய் ஆகியவை தீரும் கிழங்கை பொடித்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி பாலுடன் சேர்த்து காய்ச்சி மோராக்கி அதை உணவுடன் கொள்ள குழந்தைகளுக்கு காணும் பசியின்மை தெரியாமை வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும் தோல் நீக்கிய கோரைக்கிழங்கு இஞ்சி சம அளவாக அரைத்து சுண்டக்காய் அளவு தேனில் குழைத்து கொடுக்க சீதபேதி குணமாகும் நன்றி

 முருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள்


தயாரிக்கும் முறை:


1 கப் முருங்கை இலை

மிளகு 10

சீரகம் 2 ஸ்பூன்

பூண்டு 5

கருவேப்பிலை தேவையான அளவு

தண்ணீர் 500ml

உப்பு தேவையான அளவு


500 ml தண்ணீர் நன்கு கொதிக்கவிட்டு முருங்கை இலையை போட்டு கொதிக்க வைக்கவும் நன்கு கொதித்த பிறகு மிளகு சீரகம் பூண்டு ஆகியவற்றை அரைத்து சேர்ந்து சுண்ட வைக்கவும் பிறகு கருவேப்பிலை வேர்த்து 200ml அளவு சுண்டும் வரை கொதிக்கவிடவும் பிறகு உப்பு சேர்த்து அப்படியே பருகலாம் 


உணவுக்கு பின் அல்லது மாலை நேரம் எடுத்து கொள்ளுங்கள் நல்லது தினமும் ஒரு முறை குடிப்பது நல்லது


மேலும் பலன்கள் என்ன என்ன???

முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. தினமும் ஒரு கப் முருங்கை இலை டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.


முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. அதுபோல் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், பி6, சி மற்றும் மெக்னீசியம், பீட்டா கரோட்டீன் ஆகியவையும் இருக்கிறது. தினமும் ஒரு கப் மோரிங்கா டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.


முருங்கை கீரையில் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மைகொண்டவை. முருங்கைக்கீரையில் இருக்கும் புரதம் தலை மற்றும் கூந்தலுக்கு நீர் சத்தினை தருகிறது.


ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஐசோதியோசயனேட்டுகள் இதில் அதிகமாக உள்ளன. இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை பருகலாம்.


மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினை களுக்கு ஆளாகுபவர்களுக்கு மோரிங்கா டீ நன்மை பயக்கும். அது மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.


முருங்கை இலை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது. பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை திறம்பட எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். காலையிலோ அல்லது மாலையிலோ ஒருவேளையாவது மோரிங்கோ டீ பருகலாம்.

 *தினம் ஒரு மூலிகை*

 *முதியார் கூந்தல்* மாற்றடுக்கில் அமைந்த சிறு முழு இலைகளையும் இளம் மஞ்சள் நிற சிறு மலர்களையும் உடைய சிறு கொடி தரிசிகளில் தானே வளர்கிறது ஜவுரிக்குடி குதிரைவாலி அம்மையார் கூந்தல் என்றும் அழைப்பார்கள் கொடி முழுமையும் மருத்துவ குணம் உடையது முதியார் கூந்தல் மாம்பட்டை அதிவிரைவு சுக்கு கோரைக்கிழங்கு வகைக்கு 10 கிராம் சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 3 பங்காக்கி 5 கிராம் இலவம் பிசின் சூரணத்துடன் தினம் மூன்று வேளை கொடுத்து வர வயிற்றுப்போக்குடன் கூடிய காய்ச்சல் தீரும் இரண்டு கிலோ சவுரி கொடியை இடித்து நாளில் லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராக மற்ற காய்ச்சி வடிகட்டி நல்லெண்ணெய் ஒரு லிட்டரில் கலந்து மரமஞ்சள் கருஞ்சீரகம் அதிவிரைவு வகைக்கு 10 கிராம் பாலில் அரைத்து போட்டு காய்ச்சி அதாவது சவுரி தைலம் வடித்து உடல் முழுவதும் தடவி குளித்து வர தொழுநோய் வாத கரப்பான் கழலை கண்ட வீக்கம் ஆகியவை தீரும் நன்றி.

 *விழிப்புணர்வுபதிவு..!!*

*தெரியாத_விவரம்...மொபைல் சிம் பற்றி...*


'மனிதர்களின் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு, மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதே போதுமானதாக இருக்கிறது' என்பது ட்விட்டர் மொழி.


 பிரியமானவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும், பிடிக்காதவர்களிடம் இருந்து விலகியிருக்கவும் தற்போதெல்லாம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனே நமக்குப் போதுமானதாக இருக்கிறது. போனில் வரும் சில அழைப்புகள் நம்மை மகிழ்ச்சியுறச் செய்யும்; சில அழைப்புகள் ஆத்திரமூட்டும்; சில அழைப்புகள் அன்பை பரிமாறும்; சில அழைப்புகள் பயத்தை உண்டாக்கும். 


இப்படி இத்தனைவிதமான உணர்ச்சிகளை செல்போனுக்குள் இருந்து, நமக்கு கடத்தும் சிம் கார்டுகள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?


Subscriber Identification Module (SIM) என்பதன் சுருக்கம் தான் சிம். சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு என சிம் கார்டுக்கு தமிழ் அகராதி அர்த்தம் சொல்கிறது. தற்போது மினி, மைக்ரோ, நானோ என்றெல்லாம் பல சைஸ்களில் மொபைல் போனில் உள்ள சிம் ஸ்லாட்டுக்கு ஏற்ப இவை பயன்படுத்தப்படுகின்றன. 


1991-ம் ஆண்டில் முனிச் நகரில் இயங்கும் Giesecke & Devrient என்ற நிறுவனம்தான் முதன்முதலாக சிம் கார்டை உருவாக்கியது. அப்போது கிரெடிட் கார்டு போன்று இருந்த சிம் கார்டின் அளவு, அதன்பின் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது விரல் நுனி அளவுக்கு சுருங்கிவிட்டது. இதனால் மற்ற உதிரிபாகங்களுக்கான இடவசதியும் ஏற்பட்டது.


உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம் போன்களுக்குத்தான் பொதுவாக சிம்கள் தேவைப்படுகின்றன. சர்வதேச கார்டு உற்பத்தியாளர்கள் அமைப்பின் தகவலின்படி, இன்றைய தேதியில் 700 கோடிக்கும் அதிகமான டிவைஸ்கள், செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளன.


 2016-ம் ஆண்டு மட்டும் சுமார் 540 கோடி சிம்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

சிம் கார்டின் பின்புறம் சிறிய சிப் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். இந்த சிப்பில் தான் நெட்வொர்க் தொடர்பான தகவலும், சந்தாதாரரின் விவரங்களும் சேமிக்கப்படும். சிம் கார்டு இல்லாமல் ஜி.எஸ்.எம் போனால் மொபைல் நெட்வொர்க்குடன் தொடர்பு கொள்ளமுடியாது. மனிதனின் கைரேகை போல இந்த சர்வதேச தனித்தன்மை வாய்ந்த எண்ணானது ஒவ்வொரு சிம் கார்டுக்கும் வேறுபடும். 


இதன்மூலம், ஒவ்வொரு சிம் கார்டையும் உலகின் எந்த மூலையிலும் தனியாக இனம் காண முடியும். அதேபோல, ஒவ்வொரு சிம் கார்டிலும் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய வகையில், Authentication Key, கார்டு லாக் ஆனால் அதை அன்லாக் செய்யக்கூடிய PUK எண் போன்ற விவரங்கள் இருக்கும். இவை தவிர்த்து, உள்ளூர் நெட்வொர்க் பற்றிய தற்காலிகத் தகவல், குறுஞ்செய்திகள் மற்றும் தொடர்பு எண்களையும் கூட சேமித்துக்கொள்ளும் வகையில் தற்போது சிம் கார்டுகள் கிடைக்கின்றன.


சிம் கார்டை மொபைல் போனில் செலுத்தியதும், அதில் உள்ள சர்வதேச தனித்தன்மை வாய்ந்த எண்ணையும் (IMSI), Authentication Key-யையும் மொபைல் போன், நெட்வொர்க்கை அக்சஸ் செய்வதற்காக அருகே உள்ள டவருக்கு ரெக்வெஸ்ட் ஒன்றை அனுப்பும். இரண்டையும் நெட்வொர்க் பரிசோதித்து, என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவலை சிம் கார்டுக்கு சரிபார்க்க அனுப்பும். 


இத்தகவலை சிம் கார்டு சரியாக டிகிரிப்ட் செய்த பின்னர்தான் நெட்வொர்க்கிடமிருந்து வயர்லெஸ் சிக்னல் கிடைக்கும். பொதுவாக புதிதாக சிம் கார்டை மொபைல் போனில் செலுத்தியதும், இதனால்தான் சிக்னல் கிடைக்க சிறிது தாமதமாகிறது (சிக்னல் கிடைக்க எப்போதுமே கொஞ்சம் காத்திருக்கனும் பாஸ்!). 


ஒரு மொபைலிலிருந்து மற்றொரு மொபைலுக்கு மாற்றும்போதும், இதே வேலைதான் நடைபெறுகிறது. e-Sim (Embedded SIM) என்றழைக்கப்படும் SIM-கள் தான் எதிர்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. டிவைஸிலேயே பொருத்தப்பட்டு வரும் இதை, சிம் கார்டைப்போல மாற்றமுடியாது. ஆனால், மொபைல் மேலும் மெலிதாக மாற இந்த முறை உதவும் எனக்கூறப்படுகிறது.


*கம்மி விலைக்கு... ஏன் சிலநேரத்துல இலவசமாகவே கிடைக்குற சிம் கார்டுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கு பாஸ்!*

 _*ஏன் கேரளாவை God's own country என்று சொல்கிறோம் தெரியுமா??*_


🍁🍁🍁


கேரளாவில் இயற்கை அழகிற்கு பஞ்சமே இல்லை. இயற்கை நிரம்பி வழியும் அந்த இடத்தை சொர்க்கம் என்றே கூறலாம். சிலர் அதனால், இது கடவுளின் சொந்த பூமி என்று கூறுவார்கள். ஆனால், இதற்கும் ஒரு கதை உள்ளது.


நாம் சற்றுப் பின்னோக்கி  மகாபாரத காலத்திற்குச் செல்வோம். பீஷ்மர், கர்ணன் போன்றவர்களின் குருவும், விஷுனுவின் அவதாரமும் ஆன பரசுராமர் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல் இவர் வாழ்வின் குறிக்கோள் பற்றி அறியாதவர்கள் இல்லை. சத்ரியர்கள் மீதிருந்த அதீத கோபம் காரணமாக அவர்களை கொல்வதையே குறிக்கோளாக வைத்திருந்தவர் பரசுராமர். கோபம் கொண்டால் பூமி தாங்காது என்ற வசனம் அவருக்கே செல்லும்.


அந்தவகையில் அவர் தனது வாழ்வில் ஏராளமான சத்ரியர்களை கொன்றார். கிட்டத்தட்ட 21 சத்ரிய சந்ததிகளைக் கொன்று, ஐந்து ஆறுகளில் அவர்களின் ரத்தத்தை கரைத்திருக்கிறார்.


உயிர்களைக் கொன்ற பாவத்திலிருந்து விடுபட பரசுராமர், பல துறவிகளையும், முனிவர்களையும் சந்தித்தார். அப்போதுதான் ஒரு முனிவர், ஒரு தனி இடத்தை பிராமணர்களுக்காக நிறுவினால் மட்டுமே உன்னுடைய பாவம் நீங்கும் என்று சொல்லியிருக்கிறார்.



பரசுராமர் நேராக கர்நாடகாவில் உள்ள கோகர்னாவிற்கு சென்று தவம் செய்திருக்கிறார். வருண தேவரையும், பூமி தேவியும் அழைத்து பல நாட்கள் தவம் புரிந்தார். அவர்கள் இருவரும் தோன்றி ஒரு கோடாரியை வழங்கினர். பரசுராமர் அந்தக் கோடாரியை அரபி கடலில் தூக்கி எறிந்திருக்கிறார்.


அப்போது கடல் விலகி நிலப்பரப்பாக மாறியிருக்கிறது. அதாவது கோகர்னாவிற்கும் கன்னியாகுமரிக்கும் இடையே ஒரு நிலம் உருவாகியிருக்கிறது. பின்னர், வட பாரதத்திலிருந்து பிராமணர்களை வரவழைத்து அங்கு குடிப்பெயரவைத்தார். அந்த இடம்தான் கேரளா. ஒரு கடவுளே அந்த இடத்தை உருவாக்கியதால்தான் அது கடவுளின் இடமாக இருந்து வருகிறது.



இப்படித்தான் கேரளா உருவானது. பூமி தேவியும் வருண தேவரும் அளித்த அந்த கோடாரிதான், கேரளா பசுமையாகவும், நீர்நிலைகள் நிரம்பியதாகவும் இருக்கிறது.


It is God’s own country….

Thursday, August 8, 2024

 முதல்ல  இத படிங்க!


பழங்காலத்தில் தீப்பெட்டி இல்லை எனவேதான் பழந்தமிழகத்தில் சட்டியில் நெருப்பை காக்கப் படாத பாடு பட்டனர் (QUEST FOR FIRE ஆங்கில படம் பாருங்க)


ஒரு வகுப்பாரின் கடமையாக வீட்டில் அக்கினி வளர்ப்பது ஆக்கப்பட்டது இதற்க்குத்தான்.

காலையில் வயற்காடு சென்று மாலையில் வீடு திரும்புவோர் வீட்டில் அக்கினியை பாதுகாக்க இயலாது 


எனவே எப்போதும் வீட்டில் ஆள் இருக்கும் வகுப்பாக பார்த்து அந்த வகுப்பாரின் கடைமையாக அக்கினியை வளர்ப்பது ஒப்படைக்கப்பட்டது 


அந்த வகுப்பாரின் பெயரே 'அந்தணர்'

'அந்தணர்' என்பதில் 'தணல்' உள்ளது பாருங்கள் 

'தணல்' வளர்த்தோர் 'தணர்' 


இதிலிருந்து தமிழகத்து அந்தணர் யாவரும் தமிழரே என்று தெளியலாம் வெளி மாநில வெளிநாட்டு மக்கள் அல்ல அவர்கள் 


நெருப்பை பார்த்துகொள்வதால் 'பார்பார்' என்றும் 

அதுவே 'பார்பனர்' என்று ஆகியது 


'பிராமணர்' என்பதற்கும் அதே பொருள்தான் 


பிரமம் = நெருப்பு 


பிரமதாயம் - நெருப்பை வளர்தலுக்கு அரசன் தந்த மானியம் 


பிரம மூகூர்த்தம் = காலையில் ஒளி வரும் நேரம் 


பிரம கூர்ச்சம் = நெருப்பை வளர்க்க பயன்படும் தருப்பை முடிச்சு 


பிரம தேஜஸ் = நெருப்பின் ஒளி 


இவற்றால் 'பிரமம்' என்பதற்கு 'நெருப்பு' என்று பொருள் என்பது புலனாகிறது 


எனவே 'அந்தணர்,பிராமணர்,பார்ப்பார், ஆகிய மூன்று சொற்களுமே 'தீ வளர்ப்போர்' என்ற ஒரே பொருளில் தான் ஆதி தமிழர்களால் வழங்கப்பட்டு வந்தது 


ஆதாரம் புறநானூறு.......

செய்தித்துளிகள்

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*


8.08.2024(வியாழக்கிழமை)

*சிந்தனை துளிகள்*


 யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பர்கள் தான் எல்லோராலும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.!


பணத்தினால் வரும் பாசம் பணம் இருக்கும் வரை...

அழகினால் வரும் பாசம் இளமை இருக்கும் வரை...

ஆனால் குணத்தினால் வரும் பாசம் மட்டுமே உயிர் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்.!!


ஒருவருடைய மனதில் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் ஒருபோதும் அடுத்தவர்களால் உணர முடியாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏


*


 

🍒🍒போக்சோ சட்டம் பற்றிய காணொலிகளை பள்ளிகளில் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

🍒🍒டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.

🍒🍒 “அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிடுக” - தினகரன்

🍒🍒ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் - நீதிமன்றத்தில் பெறப்படும் தீர்ப்பாணைகளுக்கு, நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணைகள் வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

🍒🍒09.08.2024 அன்று விசாரணைக்கு வர இருந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 14.08.2024க்கு விசாரணைக்கு வர உள்ளது.

🍒🍒பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 க்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியீடு.

🍒🍒நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான வினாத்தாள் வெளியாகவில்லை டெலிகிராம் வலைதளத்தில் முதுகலை நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள்  70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக   வெளியான தகவல் பொய்யானது என்று தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.

🍒🍒தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25ம் ஆண்டுக்கான தரவரிசை நேற்று வெளியானது.

இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகள், கோழி இன தொழில்நுட்பம் மற்றும் பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் வெளியானது.

🍒🍒இளங்கலை மருத்துவப் படிப்புகள் (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க இன்று 8-ஆம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நிா்வாகம் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து சென்டாக் நிா்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுா்வேதம்), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஜூலை 28 -ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், விண்ணப்பிக்க கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 6) இறுதி நாளாக சென்டாக் அறிவித்திருந்தது.

மேலும், 1,300-க்கும் மேற்பட்டோா் வருவாய் சான்றிதழை சமா்ப்பிக்காமலும் உள்ளனா்.ஆகவே, அவா்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில்,இன்று 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு, ரூ. 500, இதர பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிா்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.1,000, இதர பிரிவினா், பிற மாநில மாணவா்களுக்கு ரூ.2,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆா்.ஐ., பிரிவினருக்கு ரூ. 5,000 விண்ணப்பக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி குடியுரிமையுள்ள மாணவா்கள் ரூ.20 க்கான இ.ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

அந்த படிவத்தில் முதல் வாதியாக பெற்றோா் பெயரும், இரண்டாம் வாதியாக (பாா்ட்டி) கன்வீனா், சென்டாக் இடம் பெற வேண்டும். அதில் பெற்றோரும், மாணவரும் கையொப்பமிட வேண்டும்.

உறுதிமொழி படிவத்தில், எக்ஸிகியூட்டி மாஜிஸ்திரேட், நோட்டரி கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.அத்துடன் மாணவா் சோ்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு சென்டாக் மின்னஞ்சல் முகவரியிலும்,

 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

🍒🍒நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியில், மண்ணில் புதையும் வீடுகள்

வீடுகள் மண்ணில் புதைவதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுநர்கள் நேரில் ஆய்வு

இந்திய புவியல் மூத்த வல்லுநர் யுன்யெலோ டெப் தலைமையில்  ஆய்வு

அதிநவீன கருவிகள் மூலம் நேற்று முதல் 20 நாட்கள் ஆய்வு நடைபெற உள்ளது

நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னோட்டமா, புதிய கட்டடங்கள் கட்டப்படுவதால் பாதிப்பா என ஆய்வு.

🍒🍒வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்று நாடு திரும்பிய

மனு பாக்கருக்கு  ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

10 மீ. தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர்

🍒🍒முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம்

வரும் 17ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை கலைவாணர் அரங்கில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ள இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

🍒🍒சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

🍒🍒தமிழகத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலகிருஷ்ணனுக்கு டெல்லியில் தேசிய கைத்தறி விருது வழங்கப்பட்டது.

மத்திய ஜவுளித் துறை சார்பில் டெல்லியில் நடந்த விழாவில் விருதை துணை குடியரசுத் தலைவர் வழங்கினார். விருதுடன் சேர்ந்து ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையையும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கினார்

🍒🍒அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL, அதன் SALES பிரிவில் இருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இந்த முடிவு என விளக்கம் அளித்துள்ளது. கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL பணிநீக்கம் செய்திருந்தது.                                           🍒🍒வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமில்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கம் உறுதி அளித்துள்ளது.

100 கிராம் எடைக்காக அனுமதித்தால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டிவரும். போட்டிக்கான விதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது தான் என்று சர்வதேச மல்யுத்த சங்கம் கூறியுள்ளது.

🍒🍒SSLV என்ற சிறு செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட் மூலம் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று EOS-08 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட உள்ள செயற்கைக் கோளில் 3 முக்கிய கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

🍒🍒வினேஷ் போகத்.. 

நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். இந்தியாவின் பெருமை, ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். உங்களுடைய இந்த பின்னடைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. என்னுடைய வருத்தத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் உங்கள் இயல்பு. இதிலிருந்து மீண்டு வலிமையாக வாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்”

பிரதமர் மோடி ஆறுதல்

🍒🍒இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை அளித்துள்ளார்.

🍒🍒வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

🍒🍒உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

595 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. உடல் உறுப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு 178 உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சாதனை படைத்தது. இந்தியாவில் அதிகளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி கூடுகிறது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

🍒🍒பங்களாதேஷில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். 

இந்துக்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோக்களை நம்பவேண்டாம்

இங்க நடப்பது இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புக்கான போராட்டம்.

மத கலவரம் அல்ல

வங்கதேசம் இந்து அமைப்பு

🍒🍒சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,330க்கும், ஒரு சவரன் ரூ.50,640க்கும் விற்பனை

🍒🍒நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் ஒத்திவைப்பு

🍒🍒இரவு 10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

👉இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது.

👉தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது.

👉ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது.

👉இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.

மிளகரணை- தினம் ஒரு மூலிகை

மிளகரணை

சிறிய நீள் வடிவ காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வளைந்த முட்களை மிகுதியாக உள்ள ஏழு கொடி இலைகள் கசப்பு சுவை உடையவை இலை காய் வேர்பட்டை மருத்துவ குணம் உடையவை குதல் முறை நோய் நீக்கல் கோழை

Monday, August 5, 2024

மாசிக்காய் -தினமும் ஒரு மூலிகை


*தினம் ஒரு மூலிகை* **

 மாசிக்காய் மற்ற மரங்களின் காயை போல் பூவிலிருந்து காய்க்காது குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒருவகை குடம்பிகள் சுரக்கும் திரவம் உறைந்து திரண்டு உருண்டையாக கெட்டிப்படும் இதுவே மாசிக்காய் ஆகும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திசுக்களை இறுகச் செய்தல் முறை நோய் அகற்றுதல் குருதிப் போக்கு அடக்குதல் உடல் உரமாக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது மாசிக்காய் கருகாமல் வறுத்து பொடித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேன் அல்லது நெய்யில் உட்கொள்ள பெரும்பாடு நீர்த்த கழிச்சல் ரத்த கழிச்சல் மிகு வியர்வை ஆகியவை தீரும் மாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதில் உள்ள வெடிப்பு புண் ஆகியவை ஆறும் தேமல் படைகளுக்கு தடவி வர நீங்கும் மாசிக்காயை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்க பல் நோய் தீர்ந்து ஈறு பலப்படும் நன்றி.

Saturday, August 3, 2024

செய்தித் துளிகள் 03 08 2024

⛑️⛑️100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு நாளை 4.08.2024(ஞாயிற்றுக்கிழமை)  பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


இவ்விழாவில் சர்வதேச/ தேசிய/ மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு