Tuesday, February 6, 2024

வேங்கை மரம் - தினம் ஒரு மூலிகை

 *


*வேங்கை மரம்*.    பச்சையான அழுத்தமான அகன்ற இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் உடைய பெரு மரம் வேங்கை இலை பட்டை பிசின் ஆகியவை மருத்துவ குணம் உடையது இலை வீக்கம் கரைக்கும் புன் அழுகல் அகற்றும் பட்டை துவர்த்தியாக செயல்படும் பிசின் துவர்பியல் குருதிப் போக்கு அடக்குதல் மலமிளக்குதல் குணம் உடையது வேங்கை பட்டையை உலர்த்தி பொடித்து ஐந்து கிராம் அளவாக சர்க்கரை கலந்து நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர சரியா கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை தீரும் வேங்கை பிசினை உலர்த்தி பொடித்து அரை கிராம் முதல் ஒரு கிராம் அளவாக கொடுக்க வெள்ளை நீர்த்த கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை தீரும் வேங்கை பிசின் பொடியை புண்களில் பூவ அவை விரைந்து ஆறும் இலையை அரைத்து கழியாக கிளறி பூசி வர கட்டிகள் கரையும் அல்லது பழுத்து உடையும் புண்கள் ஆறும் தோல் நோய்கள் தீரும் சிறு குழந்தைகளுக்கு வேங்கை சாந்து வைப்பதின் மூலம் திஷ்டி கழிவதாக ஒரு ஐதீகம் அதன்படி குழந்தைகளுக்கு நெற்றி உள்ளங்கை உள்ளங்கால்களில் வேங்கை சாந்தை வைப்பார்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தர வல்லது நன்றி.

No comments:

Post a Comment