*இன்றைய நாளில் பிறந்தவர்.*
(14-செப்)
*வில்லியம் பெண்டிங் பிரபு.*
♚ பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
♚ இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1803ஆம் ஆண்டு சென்னையின்
ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார்.♚ இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை.
♚ வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வில்லியம் பெண்டிங் பிரபு 1839ஆம் ஆண்டு பிரான்சில் மறைந்தார்.
No comments:
Post a Comment