Sunday, September 1, 2024

 *இன்றைய நாள்.*

(01-செப்)

*உலக கடித தினம்.*


📝 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையைjí பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.


📝 உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்


*முக்கிய நிகழ்வுகள்..*.


✍ 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழறிஞர், கல்வியாளரான சேவியர் தனிநாயகம் அடிகளார் மறைந்தார்.


✍ 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி விடுதலை போராட்ட வீரர் மறை.திருநாவுக்கரசு மறைந்தார்.

No comments:

Post a Comment