ஒரு நபர் தனது சொந்தக் கணக்கில் இருந்து காசோலை மூலம் பணம் எடுக்கச் சென்றால், பியரர் காசோலையில் கூட கையொப்பம் தேவையில்லை.
கடந்த சில ஆண்டுகளாக நம் நிதி பரிவர்த்தனைகளுக்கு பல வசதிகள் உள்ளன. ஏடிஎம், நெட் பேங்கிங் , UPI பரிவர்த்தனை அல்லது காசோலை என்று எதாவது ஒரு முறையின் மூலம் கணக்கில் இருந்து எடுக்கலாம். ஒரு சில வங்கிகளுக்கு நேராக சென்று எடுக்கும் முறையாக இருக்கும். சலான் அல்லது செக் மூலம் எடுக்க நீங்கள் வங்கிகளுக்கு போக வேண்டி இருக்கும்.
நீங்கள் காசோலை மூலம் பணம் செலுத்தும் போதெல்லாம், காசோலையின் பின்புறத்திலும் கையெழுத்திட வாங்கி அலுவலர்கள் கூறுவார்கள். செக்கின் முன்புறம் ஏற்கனவே செக் வழங்கியவர் கையெழுத்து இருக்கும்போது செக்கின் பின்பகுதியில் ஏன் இந்த அடையாளம் வைக்கப்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது.
அதே போல எல்லா காசோலையின் பின்புறமும் கையெழுத்து போடப்படுவதில்லை. எந்த காசோலையின் பின்புறத்தில் கையொப்பமிடுவது அவசியம் என்பது பற்றி பெரிய விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை. அதை பற்றி தான் இப்போது சொல்ல இருக்கிறோம். அதே போல கையெழுத்து போடாமல் விட்டால் என்ன ஆகும் என்பதையும் சொல்கிறோம்.
இதில் முதலில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், Bearer Cheque எனப்படும் காசோலையின் பின்பகுதியில் தான் கையொப்பம் போடப்படுகிறது. அதேசமயம் ஆர்டர் காசோலையின் பின்புறத்தில் கையெழுத்திடுவது கட்டாயமில்லை. பியரர் காசோலை என்பது வங்கிக்கு எடுத்துச் சென்று யார் வேண்டுமானாலும் பணமாகப் பெறக்கூடியது. அதில் பெயர் எழுதப்பட்டவர் அந்த காசோலையின் பணத்தை எடுக்க முடியும் என்று அவசியமில்லை.
ஆர்டர் காசோலையில், அங்கு பெயர் எழுதப்பட்ட நபருக்கு மட்டுமே பணம் வழங்கப்படுகிறது. அந்த நபர் வங்கியில் இருப்பது அவசியம். எனவே ஆர்டர் காசோலையில் கையெழுத்து தேவையில்லை. ஆர்டர் காசோலையில் பணம் கொடுப்பதற்கு முன், வங்கி ஊழியர்கள் அதை கொண்டு வந்தவர் தான் காசோலையில் குறிப்பிட்ட நபரா என்பதை முழு விசாரணை செய்து பின்னர் பணத்தை கொடுக்கிறார்கள்.
பியரர் காசோலையை வழியில் யாராவது கண்டுபிடித்தாலும் அல்லது திருடினாலும் பணம் அவருக்குக் கொடுக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழ்நிலையில், வங்கியில் கேள்விகள் எழலாம். இதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகத் தான், காசோலையின் பின்புறத்தில் கையொப்பமிட சொல்லி அதை அடிப்படையாக வைத்து அவர் பொறுப்பில் பணம் கொடுக்கப்பட்டதாகவும், தவறான நபருக்கு பணம் சென்றாலும் வங்கியின் பொறுப்பு இருக்காது என்பது உறுதி செய்யப்படுகிறது.
ஆனால், 50,000 ரூபாய்க்கு மேல் தொகை இருந்தால், பணம் எடுக்க வரும் நபரிடம் வங்கி கண்டிப்பாக முகவரிச் சான்றிதழைக் கேட்டு, அதன் பின்னரே பணத்தைத் தருகிறது. இது தவிர, காசோலையின் முன்பக்கத்தில் உள்ள கையொப்பம் போலவே பின்னல் போடச்சொல்லும் யுக்தியும் உள்ளது. யாரேனும் கையெழுத்திட மறுத்தால், பணத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை அவரே இணைத்து கொடுக்க வேண்டும்.
நாம் மேலே கூறியது போல் ஆர்டர் காசோலையின் பின்புறத்தில் கையொப்பம் தேவையில்லை. இது தவிர, ஒரு நபர் தனது சொந்தக் கணக்கில் இருந்து காசோலை மூலம் பணம் எடுக்கச் சென்றால், பியரர் காசோலையில் கூட கையொப்பம் தேவையில்லை. மூன்றாம் தரப்பினர் அதாவது மூன்றாம் நபர் வேறொருவரின் கோரிக்கையின் பேரில் பியரர் காசோலையை திரும்பப் பெற வரும்போது மட்டுமே கையெழுத்து தேவைப்படும் .
No comments:
Post a Comment