Wednesday, March 6, 2024

ஆனந்தம் எங்கிருந்து வருகிறது?

துக்கம், கவலை, பயம், கோபம், திகில்... இதெல்லாம்?

சரி, துக்கம் வரும்போது நெஞ்சை அடைப்பது ஏன் 


ஆனால், கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால்

சுத்தமாகப் பசி இல்லாமல் போய்விடுகிறதே... அது எப்படி?


பயத்தில்

சிறுநீர் வருகிறதே... அது எவ்வாறு?


கோபம் வரும்போது உடல்

பலவீனமாக இருப்பவன்கூட அசுர பலத்துடன் ஒரு பாறாங்கல்லைத்

தூக்கிவிடுகிறானே... அது எப்படிச் சாத்தியம்? 


திகில் ஏற்படும்போது

ஒரு கணம் மூச்சு நின்றுவிடுகிறதே... அதற்கென்ன காரணம்? 


ஒரே

மனதில் இருந்து வருவதாக நீங்கள் சொல்கிற மற்ற உணர்ச்சிகள்,

வேறுவேறு உறுப்புகளைப் பாதிக்கின்றனவே.. 


இதற்கான  விளக்கம்?"


ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு

உறுப்பிலிருந்து வருகிறது.


1.கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன்


2.மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை. 


3. நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார்.


4.சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு பயம்.


5.இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை.


அதன்படி துக்கம் 

நுரையீரலிலிருந்து வருகிறது.

அதனால்தான் துக்கப்படும்போது

சுவாசம் தேங்கி 

நெஞ்சை 

அடைக்கிறது!


கவலை, மண்ணீரலிலிருந்து

வருகிறது! பசிக்கும் ஜீரணத்துக்கும்

பொறுப்பாக இருக்கும் மண்ணீரலில் கவலை மையம்

கொள்வதால்தான், அதன் சக்தி முழுவதும் அதற்கே செலவாகி,

ஜீரணம் நின்று போய், பசியும் எடுப்பதில்லை.



பயம், சிறுநீரகத்தில் பிறக்கிறது.

பயப்படும்போது சிறுநீரகங்கள் தன்

கட்டுப்பாட்டை

இழப்பதால்தான்,

சிறுநீர் தானே வெளியேறுகிறது!



கோபம், கல்லீரல் சம்பந்தப்பட்டது!

உடல் உழைப்பின்போது

எந்தப் பகுதிக்கு அதிக இயக்கம் தேவையோ, அந்தப் பகுதிக்கு சக்தி

அளிப்பது கல்லீரலே! ஆகவேதான், கோபவெறியில் எதையாவது

தூக்கி அடிக்கவேண்டும் என்று நினைத்த உடனே கைகளுக்கு

அசாத்திய பலம் பிறந்து, பெரிய பாறையையும் தூக்கிவிட

முடிகிறது.

No comments:

Post a Comment