Wednesday, January 3, 2024

தினம் ஒரு மூலிகை-சீமையத்தி



 *சீமையத்தி* அத்தியில் நாட்டு அத்தி வெள்ளை அத்தி பேயத்தி சீமையத்தி என பல வகை உண்டு அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து காலை மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும் அந்த வகையில் சீமையத்தி பார்ப்போம் அகன்ற இலைகளை உடைய சிறு மரவகைச் சார்ந்த நாட்டு அத்திப்பழத்தை விட சற்று பெரியதாகவும் செந்நிறம் பொருந்தியதாகவும் இருக்கும் பதப்படுத்தப்பட்ட பழங்கள் கடைகளில் கிடைக்கும் இதன் பழங்களே மருத்துவ பயன் உடையவை அக வெப்பம் தணித்தல் வறட்சி அகற்றுதல் உடல் பலம் மிகுத்தல் மலமிளக்குதல் ஆகிய குணங்களை உடையது மூன்று அல்லது நான்கு பழங்களை மாலை வேளையில் நாள்தோறும் சாப்பிட்டு வர சுத்தமான ரத்தம் பெருகும் மலச்சிக்கல் அருண் தொண்டை மார்பு இவற்றில் உண்டாகும் வறட்சி நீங்கி இருமல் தீரும் 100 கிராம் சீமை அத்தி பழம் சோம்பு 100 கிராம் ரோசா மொட்டு 200 கிராம் ஆகியவற்றை ஐந்து லிட்டர் குடிநீரில் இட்டு ஒருநாள் ஊறிய பின் 3 லிட்டர் ஆகுமாறு சுண்டக்காய்ச்சி பிசைந்து வடிகட்டி அதில் இரண்டரை கிலோ சீனி சேர்த்து தேன் பதமாக காய்ச்சி அதாவது சீமை அத்தி மணப்பாகு வைத்துக் கொண்டு 40 மில்லி பாகில் நீர் சேர்த்து அருந்தலம்

No comments:

Post a Comment