Wednesday, January 3, 2024

தினம் ஒரு மூலிகை-சுக்காங்கீரை

 


*சுக்காங்கீரை* தடித்த ஓடியக்கூடிய அரைவட்ட வடிவ இலைகளை உடைய சிறு செடி இனம் புளிப்புச் சுவை உடையது கீரையாக பயிரிடப்படுகிறது இதன் இலை விதை வே ர் ஆகியவை மருத்துவ குணம் உடையது பசி மிகுதல் துவர்ப்பியாய் செயல்படுதல் தாது வெப்பு அகற்றுதல் ஆகிய குணம் உடையது இலைகளை சமைத்து உண்டுவர செரிமான ஆற்றலை மிகுத்து பசிமிகும் சூட்டை தணித்து வாயு நெஞ்சு எரிச்சல் பித்தம் மிகுதியினால் வந்த ஊறல் குருதி கழிச்சல் ஆகியவை குணமாகும் இலையை இடித்து பிழிந்த சாராகவோ ஒரு தேக்கரண்டி அளவாக நாள்தோறும் மூன்று வேளை 50 கிராம் இலையை பொடியாய் அறிந்து அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி வடிகட்டி எடுத்த குடிநீராகவோ 30 மில்லி அளவாக நாள்தோறும் மூன்று வேளை குடித்து வர குருதி தூய்மை அடையும் உடல் தசைகளில் அடங்கியுள்ள மாசுக்கள் அகன்று சொறி சிரங்கு ஆகியவை குணமாகும் வேரை கொண்டு பல் துலக்கி வர ஈறு சிதைவு ஈற்றுப் புண் ஆகியவை குணமாக விதை பொடியை ஒரு கிராம் அளவாக காலை மாலை கொடுத்து வர பசியின்மை சுவை இன்மை ஆகியவை குணமாகும் விதையை வாயிலிட்டு மென்று தின்ன தேள் கடி நஞ்சு நீங்கும் நன்றி.

No comments:

Post a Comment