Tuesday, February 20, 2024

தேடல் ஒன்றே நிரந்தரம்.

 உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

 

சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சு வரைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


"தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலைப் போல திசையறியாது மூழ்கிப் போகும் "


படிப்பை முடித்து விட்டு வெளியே வரும் அனைவரின்  கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே..


அதற்கான தகுதியை நம் கல்வி முறை கற்றுக் கொடுக்கிறதா.? என்றால் அங்கு பெரும் கேள்விக்குறி தான் நம் முன் நிற்கும். 


கல்லூரி என்னும் சிறுகூட்டிலிருந்து வேலை தேடி வரும், அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை பை நிறைய சம்பளம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்.


பெரும்பாலானோர் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர்.


அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை. 


வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசை தான்..


அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை,

பெரும்பாலானோருக்கு அது பல முறை தோல்வியைத் தான் பரிசளித்திருக்கிறது...


கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதை விட மோசம்.. இரண்டு உலகங்கள்., அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனப் பார்க்கும் அனைத்தும் இங்கு புதிதாகத் தான் இருக்கும்..


"இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லிக் கொடுக்காத பாடத்தை ஒரு வருடத் தேடல் கற்றுக் கொடுத்து விடும்....


முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்துக் கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெறக் கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது.


அடுத்தது என்ன, என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது..


உன் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாகக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். 


அப்படிப் புதிதாகக் கற்க முடியவில்லையெனில் தேர்ந்தெடுத்த துறையில் உனக்கு நிகர் யாரும் இல்லையென்று சாதித்துக் காட்ட வேண்டும். 


தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். 


அந்தத் தேடல் மாறிக் கொண்டே  இருக்கும். தேடல் ஒன்றே நிரந்தரம்.


பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻


இரக்க மில்லாதவர்களை நாம் மனிதர்கள் என்று சொல்ல முடியுமா...?

இரக்கமே!, ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது...


மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது. அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் சண்டைகள் ஏது...? சச்சரவுகள் ஏது...?

மனம் மென்மைப்படும் போது இரக்க உணர்வு தானாய் மனத்தில் எழுகிறது. ஆதிமனிதன் நாகரிகம் அடைந்ததன் வெளிப்பாடுதான் அவனது இரக்க உணர்வு...

அது கடுமையான கோடைக்காலம். கொளுத்தும் வெயிலில் ஒரு வழிப்போக்கர் நடந்து கொண்டிருந்தார், வெயிலின் கடுமையை அவரால் தாள முடிய வில்லை...

இறுதியில் தண்ணீர் உள்ள ஒரு கிணறையும் கண்டு பிடித்துவிட்டார். ஆனால்!, தண்ணீர்' கிணற்றின் ஆழத்தில் இருந்தது. அத்துடன் நீரை இறைக்க வாளியோ, கயிறோ எதுவும் இல்லை...

கடைசியில், வேறு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கிணற்றில் இறங்கினார். உள்ளே வெயிலின் கடுமை இல்லை. தண்ணீரும் குளிர்ச்சியாக இருந்தது...

இரு கரங்களால் தண்ணீரை அள்ளி தாகம் தீரக் குடித்தார். அதன் பிறகுதான் அவருக்கு உடலில் வலிமை பிறந்தது. கிணற்றிலிருந்து வெளியே வந்தார்...

கிணற்றின் பக்கத்தில் ஒரு நாய் நின்றிருந்தது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் நாவினைத் தொங்கப் போட்டு மூச்சிரைக்கத் தவித்துக் கொண்டிருந்தது...

கிணற்றைச் சுற்றியிருந்த மணலைக் கால்களால் பிராண்டியது. மணலின் அடிப்பகுதியில் இருந்த ஈரத்தை நக்கியது. தாகம் அடங்காமல் பலவீனமான குரலில் முனகியது...

இந்தக் காட்சியைக் கண்டதும் வழிப்போக்கரின் உள்ளம் இளகிவிட்டது. “அய்யோ பாவம்! வாயில்லாத ஜீவன்! தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் தண்ணீர் கிடைக்கா விட்டால் நாய் உறுதியாக இறந்துவிடும்!” என்று கருதினார்...


நாயை இரக்கத்துடன் பார்த்தார். கிணற்றில் மீண்டும் சிரமத்துடன் இறங்கினார். தண்ணீரை மேலே கொண்டுவருவது எப்படியென்று கொஞ்சம் நேரம் ஆலோசித்தார்...

பின்பு ஒரு திட்டத்துடன் காலில் மாட்டியிருந்த தோலால் ஆன காலுறைகளைக் கழற்றினார். இரண்டு காலுறைகள் நிரம்பத் தண்ணீரை நிரப்பினார்...

அவற்றை வாயில் கவ்விக் கொண்டு கிணற்றிலிருந்து மெதுவாக வெளியே வர ஆரம்பித்தார். அது அவ்வளவு எளிதாக இல்லை...

தண்ணீர் நிரம்பிய காலுறை கனத்தது. வாயும், பல்லும் வலித்தது. பேசாமல் முயற்சியைக் கைவிட்டு விடலாமா...? என ஒரு கணம் தோன்றியது...

ஆனால்!, மனக் கண்ணில் தாகத்தால் தவிக்கும் நாய் தெரிந்தது. பெருமுயற்சி எடுத்து ஒருவாறு ஏறி கிணற்றிலிருந்து வெளியே வந்து விட்டார்...

கிணற்றருகே அமர்ந்து, முதல் காலுறை நீரை நாய்க்குப் புகட்டினார். நாய் மகிழ்ச்சியுடன் தண்ணீரை நக்கி நக்கி குடிக்க ஆரம்பித்தது...

உயிரைக் காத்ததற்கு அடையாளமாக நன்றி உணர்ச்சியுடன் வாலை ஆட்டியது. ஒரு சொட்டுத் தண்ணீரையும் மீதம் வைக்காமல் இரண்டு காலுறை நீரையும் அது குடித்து முடித்தது...

அவ்வளவு தாகம் அதற்கு! வழிப்போக்கரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. நாயின் தாகத்தைத் தீர்த்த மகிழ்ச்சியுடன் அவர் நடக்க ஆரம்பித்தார்...

உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடமும் கருணையாக இருங்கள். ஒருவர் உங்களிடம் கடுமையான ஏதேனும் பேசினால், என்னவாயிற்று, உங்கள் நாள் சரியாக அமையவில்லையா...? என்று கேளுங்கள் நிலைமை அப்படியே மாறி விடும்...!


பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவர்களை நீங்கள் கவனியுங்கள். அவர்கள் மீதும் அக்கறை காட்டுங்கள். நீங்கள் ஏதேனும் கோபப்படும்படியான செயல் நடந்தால், ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டு சில விநாடிகள் பொறுமையாக ஆலோசியுங்கள்...!!


அறியாமையில் உழல்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள், நாளும் ஒரு வாய் சோற்றிற்கு அல்லல் படுபவர்கள், இவர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள், உங்களால் இயன்றவரை அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் மீது சுடு சொல் வேண்டாம். உங்கள் உதடுகளை மூடி, இதயங்களைத் திறந்து வையுங்கள்...!!!


பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻

         

 🙏நன்றி🙏

      வாழ்க வளமுடன்

பெரியவர்களுக்கான சுகாதார குறிப்புகள்

55 வயது முதல் 100 வயது வரை உள்ள  பெரியவர்களுக்கான சுகாதார குறிப்புகள்*


நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:

 ::::::::::::::::::::::::::::::::::

உங்கள் தேநீரில் பால் குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

~~~~~~

பகல் நேரத்தில், அதிக தண்ணீர் குடிக்கவும்; ஆனால் இரவு நேரத்தில், குறைவாக குடிக்கவும்.

~~~~~~

பகலில் 2 கப் காபிக்கு மேல் குடிக்க வேண்டாம், முற்றிலும் நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

~~~~~~

எண்ணெய் உணவுகளை 

குறைவாக சாப்பிடுங்கள்.

~~~~~~

சிறந்த தூக்க நேரங்கள் 

இரவு 10 மணி முதல் 

காலை 6 மணி வரை.

~~~~~~

மாலையில், மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு சிறிது அல்லது எதுவும் சாப்பிடுங்கள்.

~~~~~

குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், 

ஆனால் சூடானவுடன், படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக படுத்துக்கொள்ளாதீர்கள்.

~~~~~~

நீங்கள் மேலும் வயதாகும்போது, குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள், ஆனால் அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே குடிக்கவும்

~~~~~~~~~~~~~~~

ஒரு நாளைக்கு குறைந்தது 

8 மணிநேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.

~~~~~~~~~~~~~~~

மதியம் முதல் மாலை 3 மணி வரை ஒன்றரை மணி நேரம் தூங்குவது, மன அழுத்தத்தைக் குறைக்கவும், இளமையாகவும், எளிதில் வயதாகாமல் இருக்கவும்.

~~~~~~~~~~~~~~~

உங்கள் மொபைல் ஃபோன் பேட்டரியில் ஒரே ஒரு 

பட்டியை விட்டுவிட்டால், 

இனி அழைப்புகளைச் செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

~~~~~~~~~~~~~~~

அழைப்புகளுக்குப் பதிலளிக்க உங்கள் இடது காதைப் பயன்படுத்தவும், வலது காது உங்கள் மூளையை நேரடியாகப் பாதிக்கும்.  அழைப்புகளுக்குப் பதிலளிக்க இயர்போன்களைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.

~~~~~~~~~~~~~~~

*உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்:*

(1) உங்கள் இரத்த அழுத்தம்

(2) உங்கள் இரத்த சர்க்கரை.

~~~~~~~~~~~~~~~

*உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:*

(1) உப்பு

(2) சர்க்கரை

(3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்

(4) குறிப்பாக வறுத்த 

சிவப்பு இறைச்சி

(5) பால் பொருட்கள்

(6) மாவுச்சத்துள்ள பொருட்கள்

~~~~~~~~~~~~~~~

*உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:*

(1) கீரைகள்/காய்கறிகள்

(2) பீன்ஸ்

(3) பழங்கள்

(4) கொட்டைகள்

~~~~~~

*நீங்கள் மறக்க வேண்டிய 

மூன்று விஷயங்கள்:*

(1) உங்கள் வயது 😮

(2) உங்கள் கடந்த காலம் 🤔

(3) உங்கள் கவலைகள்/குறைகள் 👍🏽

~~~~~~

*எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:*

(1) உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்

(2) அக்கறையுள்ள குடும்பம்

(3) நேர்மறை எண்ணங்கள்

(4) ஒரு சூடான வீடு.

~~~~~~

*ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்:*

(1) பாடுதல்

(2) நடனம்

(3) உண்ணாவிரதம்

(4) புன்னகை/சிரித்தல்

(5) மலையேற்றம்/உடற்பயிற்சி

(6) உங்கள் எடையைக் குறைக்கவும்.

~~~~~~

*நீங்கள் செய்ய வேண்டிய* 

*ஆறு விஷயங்கள்:*

(1) நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்

(2) நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்

(3) நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்

(4) நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்

(5) மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை காத்திருக்காதீர்கள், இல்லையெனில் வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

(6) நீங்கள் உங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கு முன் உங்களுக்கு பிரச்சனை வரும் வரை காத்திருக்காதீர்கள்.

 உங்களின் இயல்பான வியாபாரத்தை மேற்கொள்ளும் போது, நீங்கள் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறீர்கள் என்பதை அறிய, எப்பொழுதும் எங்கள் உடலைச் சரிபார்த்துக்கொள்ள மறக்காதீர்கள். ஆரோக்கியமே செல்வம்.

*மருத்துவத் தகுதி*

           உயர் இரத்த அழுத்தம்

          ----------

120/80 -- இயல்பானது

130/85 --இயல்பான (கட்டுப்பாடு)

140/90 -- உயர்

150/95 -- வி.ஹை

----------------------------

           பல்ஸ்

          ----------

நிமிடத்திற்கு 72 (தரநிலை)

60 --- 80 p.m. (சாதாரண)

40 -- 180 p.m.(அசாதாரண)

----------------------------

          வெப்ப நிலை

          -------------------

98.4 F (சாதாரண)

99.0 F மேலே (காய்ச்சல்)

*உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்....*

*மாரடைப்பு* : - வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது

இது மிகவும் நல்ல கட்டுரை. சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைப் பற்றி மட்டுமல்ல, ஹார்ட் அட்டாக் பற்றியும். சீனர்களும் ஜப்பானியர்களும் அவர்களுடன் சூடான தேநீர் அருந்துகின்றனர்

சாப்பாடு, குளிர்ந்த நீர் அல்ல, சாப்பிடும் போது அவர்கள் குடிக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். குளிர்ந்த நீர் அருந்த விரும்புவோருக்கு, இந்தக் கட்டுரை உங்களுக்குப் பொருந்தும். உணவின் போது குளிர்ந்த பானம்/தண்ணீர் குடிப்பது மிகவும் தீங்கானது. ஏனெனில், குளிர்ந்த நீர் நீங்கள் இப்போது உட்கொண்ட எண்ணெய் பொருட்களை திடப்படுத்தும். இது செரிமானத்தை மெதுவாக்கும். இந்த 'கசடு' அமிலத்துடன் வினைபுரிந்தவுடன், அது உடைந்து, திட உணவை விட வேகமாக குடலால் உறிஞ்சப்படும். இது குடலை வரிசைப்படுத்தும். மிக விரைவில், இது கொழுப்பாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்ட பிறகு சூடான சூப் அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது.

பிரஞ்சு பொரியல் மற்றும் பர்கர்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. அதன் பிறகு ஒரு கோக் இந்த அரக்கனுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறது. உங்கள் இதயம் மற்றும் ஆரோக்கியத்திற்காக அவற்றைத் தவிர்க்கவும்.

மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இரவில் இரத்தம் உறைவதைத் தவிர்க்க நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்.


*கட்டாயம் படிக்க வேண்டும்*

*வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும்*


*படித்ததில் பிடித்தது*

குப்பைமேனி - தினம் ஒரு மூலிகை

 *


*குப்பைமேனி (அ) பூனை வணங்கி*.  தாவரவியல் பெயர்:Acalypa indica குப்பையாக இருக்கும் நமது மேனியை புது மேனியாக மாற்றுவதே இந்த குப்பைமேனி விஷக்கடிகளுக்கு இதை நன்றாக அரைத்து உடம்பு முழுவதும் நன்கு தேய்த்து காய வைக்க வேண்டும் காய வைக்கும் பொழுது உடலில் அதிக எரிச்சல் ஏற்படும் அப்பொழுது வெந்நீரில் நன்கு குளித்து விட வேண்டும் இதுபோல் 48 நாட்கள் செய்ய விஷக்கடி சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் இக்காலத்தில் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது மேலும் பல நோய்களை இது போக்கும் தீப்புங்களை ஆற்றும் சிறுசிறு விஷங்களை போக்கும் வயிற்று வலிக்கு குப்பைமேனியையும் உப்பையும் சேர்த்து கொடுக்க உடனே தீரும் ரத்த மூலத்தை போக்கும் வாத ரோகத்தை போக்கும் சளி இருமல்களை நீக்கும் ரத்தத்தை சுத்தம் செய்யும் குப்பை மேனியில் உப்புச்சத்து அதிகமாக உள்ளது நன்றி

Monday, February 19, 2024

மிளகு ரசம்

தேவையான பொருட்கள்

மிளகு - 2 ஸ்பூன்

சீரகம் -1 ஸ்பூன்

வரக்கொத்தமல்லி - அரை ஸ்பூன்

பூண்டு - 4 பல்

சின்னவெங்காயம் - 1

புளி - நெல்லிக்காய் அளவு

பழுத்த தக்காளி - இரண்டு

தாளிக்க - கடுகு ,சீரகம், வெந்தயம் - சிறிதளவு

என்னை - 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்

கருவேப்பிலை ,மல்லி இலை- சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் கொத்தமல்லி போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் ,சிறிது கறிவேப்பிலை போட்டு மீண்டும் ஒரு தடவை அரைத்துக் கொள்ளவும்.

தக்காளியை கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு ,சீரகம் ,வெந்தயம் ,காய்ந்த மிளகாய் ,பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள ரசப்பொடி ,புளித்தண்ணீர்,மசித்த தக்காளி ஒரு டம்ளர் தண்ணீர் தேவையான அளவுக்கு ,உப்பு நன்கு கலந்து விடவும்.

இந்த ரசம் வந்து கொதி வரக்கூடாது கொதித்தால் நன்றாக இருக்காது.

கொதிக்கு முன்பு நன்கு நுரைத்து வரும்போது மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான கம கமன்னு மணக்கிற மிளகு ரசம் ரெடி.

ரசப் பொடியை மிக்ஸியில் அரைக்காமல் இடிக்கிற கல்லில் இடித்து வைத்தால் இன்னும் டேஸ்ட் பிரமாதமா இருக்கும்.

ஆராக்கீரை - தினம் ஒரு மூலிகை

 


*ஆராக்கீரை*.  இதன் தாவரவியல் பெயர்:Marsilia quardrifolia ஆராக்கீரை (அ)ஆலக்கீரை என்று அழைப்பார்கள் இம்மூலிகை ஆற்று ஓரங்களிலும் கால்வாய் ஓரங்களிலும் அதிகமாக காணப்படும் மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும் இது உன்னதமான மருந்து இந்த கீரையை பறித்து நிழலில் மூன்று நாட்கள் காயவைத்து மூன்றாம் நாள் காலை வெயிலில் காயவைத்து இறங்கும் பொழுதில் இடித்து பொடி செய்து கொண்டு ஆறு மாத காலத்திற்கு காலையிலும் மாலையிலும் பாலில் அரை தேக்கரண்டி பொடியை போட்டு சாப்பிட்டு வர மேற்கூறிய நோய்கள் யாவும் தீரும் மற்றும் மன அழுத்த பிரச்சனை இருப்பவர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சனை சரியாகும் மன அழுத்தம் வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுகிறது இந்த கீரை கருத்தடை மூலிகையாக செயல்படுவதால் குழந்தை பேருக்காக காத்திருப்பவர்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும் இந்த கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது நன்றி.

Sunday, February 18, 2024

காளான் மசாலா

தேவையான பொருட்கள்

காளான் - 200 கிராம் / Mushrooms 200 grams

பொடியாக நறுக்கிய - 4 பல் பூண்டு / 4 cloves of garlic, finely chopped

பெரிய வெங்காயம் - 1 / big onion - 1

பச்சை மிளகாய் - 2 / Green chillies - 2

சாட் மசாலா - அரை ஸ்பூன் / chaat masala - 1/2 spoon

சமையல் எண்ணெய் - 5 ஸ்பூன் / Cooking oil - 5 spoon

உப்பு தேவையான அளவு / Salt as needed

மசாலா அரைக்க தேவையான பொருட்கள் / Ingredients for masala grinding

காய்ந்த மிளகாய் - 5 / dried chillies - 5

காஷ்மீரி மிளகாய் - 5 / Kashmiri Chilli - 5

பூண்டு - 6 பல் / garlic - Six cloves

இஞ்சி - சின்ன துண்டு / ginger - small piece

செய்முறை

காய்ந்த மிளகாய், காஷ்மீர் மிளகாய் இரண்டையும் 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்.

ஊறவைத்த காய்ந்த மிளகாய் ,இஞ்சி, பூண்டு ,சிறிதளவு உப்பு சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

காளானை நல்ல மண் போக கழுவி இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் .

கடாயில் எண்ணெய் உற்றி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் ,பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய காளான் சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின்பு கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து நன்கு கிளறி கிரேவி கெட்டியானவுடன் வெங்காயத்தாள் தூவி இறக்கினால் காளான் மசாலா ரெடி.

இந்த காளான் மசாலா  செய்றது ரொம்ப ஈஸி டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.

சப்பாத்திக்கு தொட்டுக்க, ஃபிரைடு ரைஸ் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கும்.

சுக்கு மல்லி காபி

தேவையான பொருட்கள்

வர கொத்தமல்லி - 15 ஸ்பூன்

மிளகு - ஒரு ஸ்பூன்

சுக்கு - 5 துண்டு

ஏலக்காய் - 15

நாட்டுச்சக்கரை - தேவைக்கு

செய்முறை;

முதலில் சுக்கு துண்டை இடிக்கிற கல்லில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பொடித்த சுக்கு , கொத்தமல்லி , ஏலக்காய் மிளகு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

ரொம்ப நைசா அரைக்க தேவையில்லை.கொஞ்சம் கொரகொரப்பாக இருந்தால் போதும் .

இந்தப் பொடியை மூடி போட்டா டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.

தேவைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் சுக்கு மல்லி பொடி ,நாட்டு சக்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் மழை நேரத்தில் வரக்கூடிய சளி ,இருமல் தொண்டை வலி எல்லாம் சரியாகிவிடும்.

தினமும் சாயங்காலம் சுக்குமல்லி டீ குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

நார்த்தங்காய் வெல்லம் இஞ்சி பச்சடி

தேவையான பொருட்கள்

நார்த்தங்காய் - 2

இஞ்சி - விரல் நீளத் துண்டு

பச்சைமிளகாய் - 2

வெல்லம் - 150 கிராம்

புளி - நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் - குழிக்கரண்டி அளவு

மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்

தனி மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்

கடுகு ,வெந்தயம் - தாளிப்பதற்கு சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

நார்த்தங்காயை இரண்டாக நறுக்கி உள்ளே இருக்கக்கூடிய விதை எல்லாம் எடுத்துட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி ,பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய இஞ்சி பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

சிறிது வதங்கியவுடன் நறுக்கிய நாத்தங்காய் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .

ஓரளவுக்கு வதங்கி கலர் மாறியவுடன் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு கரைத்த புளித்தண்ணீர் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நார்த்தங்காய் நன்கு வெந்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.

இதன் நார்த்தங்காய், வெல்லம் பச்சடிசாம்பார் சாதம் தயிர் சாதத்துக்கு சூப்பரா இருக்கும்.

2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால்

 2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா?

இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது. குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இப்படி இரத்த குழாய்களினுள் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, பல்வேறு உணவுகளும், பானங்களும் உதவுகின்றன. மருந்து மாத்திரைகள் கூட சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆனால் இயற்கை பானங்களும், உணவுகளும் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

இப்போது நாம் இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் இயற்கை பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெந்தயம்

இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கும் கொழுப்புக்களின் தேக்கத்தைக் கரைக்க வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆய்வுகள்

பல்வேறு ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள ஏராளமான நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாகவும் மற்றும் இந்த கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டள்ளது.

வெந்தயத்தின் இதர நன்மைகள்

வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து உண்ணும் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்வதோடு, பித்தநீரின் உற்பத்தியைச் சீர்செய்யும். மேலும் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றச் செய்யும்.

வெந்தய நீர் தயாரிப்பு முறை #1

ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து தினமும் இருமுறை குடிக்க வேண்டும்.


 

வெந்தய நீர் தயாரிப்பு முறை #2

வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை 1-2 மாதங்கள் தினமும் குடித்து வந்தால், நிச்சயம் இரத்தக் குழாய்கள் சுத்தமாகி, இதயம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கீழே இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மனதில் கொண்டு பின்பற்றினால், இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.

டிப்ஸ் #1

எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

டிப்ஸ் #2

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.

டிப்ஸ் #3

பிரகாசமான நிறங்களைக் கொண்ட பழங்களான தர்பூசணி, மாம்பழம், ஆரஞ்சு மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.

டிப்ஸ் #4

தினமும் காலை மற்றும் மாலையில் 1 கப் க்ரீன் டீ குடித்து வருவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.

டிப்ஸ் #5

அன்றாட சமையலில் சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சமைத்து வர, இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவது தடுக்கப்படும்.

டிப்ஸ் #6

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரான்பெர்ரி ஜூஸ் கிடைக்கும் போது, தவறாமல் வாங்கிப் பருகுங்கள். ஏனெனில் இது கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் படிவதைத் தடுக்கலாம்.

ஓரிதழ் தாமரை - தினம் ஒரு மூலிகை


 *ஓரிதழ் தாமரை* (அ)ரத்தினபுருஷ் தாவரவியல் பெயர்.Oldenlandia umbellata   மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் ரோஸ் நிறம் உடைய ஒரே இதழ் உடைய மலரையும் ஒத்தைக் கல் மூக்குத்தி போன்ற காய் உடைய குறுஞ்செடி எல்லா இடங்களிலும் தானே வளரும் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் உடையது அகற்றி ஆகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும் மலட்டுத்தன்மை நீக்கியாகவும் பயன்படுகிறது இலையை வெறும் வயிற்றில் சிறிதளவு மென்று தின்ன பால் அருந்தி வர ஒரு மண்டலம் தாது இழப்பு அதிமூத்திரம் வெள்ளை வெட்டச்சூடு நீர் எரிச்சல் சிற்றின்ப பலவீனம் ஆகியவை தீரும் ஓரிதழ் தாமரை இலை கீழாநெல்லி இலை ஆணை நெருஞ்சில் இலை மூன்றையும் ஒரு பிடி அளவு அரைத்து 200 மில்லி எருமை தயிரில் 10 நாட்கள் சாப்பிட நீர் தரை ரணம் வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும் இழந்த பலத்தை மீண்டும் பெற ஊறுதல் தாமரை செடியிழை நீரில் அலசி அதை அப்படியே மென்று தின்னே பால் அருந்த 40 நாட்கள் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம் ஆண் மலடு பெண் மலடு தீர்க்கும் சக்தி இதற்கு உண்டு இரும்பு சத்தும் செம்புச் சத்தும் அதிகமாக ஓரிதழ் தாமரையில் உண்டு 

‘ஒரு மலரில் பல இதழ்கள்’ எனும் பன்மை பொதுவானது. ஆனால் ‘ஒரு மலரில் ஒரே ஒரு இதழ்’ எனும் ஒருமை சிறப்பானதன்றோ! அந்தச் சிறப்பு ஓரிதழ்தாமரை மலருக்குச் சொந்தம். உள்ளடுக்கு, வெளியடுக்கு போன்ற பிரிவுகளோடு பல மலர்களை ரசித்தவர்களுக்கு, ஒரே இதழை மட்டும் கொண்ட மலரைப் பார்க்கும்போது ஆச்சர்யம் உண்டாவது இயல்பே!

பெயர்க் காரணம்: ரத்தனபுருஷ், ரத்னாயுரஷரி ஆகிய வேறுபெயர்கள் இதற்கு உண்டு. ஒரே இதழ் கொண்ட மலர் என்பதால், ‘ஓரிதழ்’ தாமரை எனும் பெயர். தாமரைப் பூவின் நிறத்தில் (வெளிர் சிவப்பு) இதன் மலர் காட்சி தருவதால், ஓரிதழ்தாமரை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் தொடர்பு கிடையாது.


அடையாளம்: தாமரைபோல இது நீர்த்தாவரம் அல்ல. நிலத்தில் வளரும் மிகச் சிறிய செடி வகையினம். ஓரளவுக்கு ஈரப்பதம் மிக்க இடங்களில் ஒற்றை மலரைச் சுமந்துகொண்டு, மெளனமாகக் காட்சிதரும். நீளமான இலைகளை உடையது. இதன் இலைகளை நீரிலிட, குழகுழப்புத்தன்மை உண்டாகும்.

வாயிலிட்டுச் சுவைக்க, இதன் குழகுழப்புத் தன்மையை உணர முடியும். ஓரிதழ் தாமரைக்கு, ‘ஐயனிடியம் சஃப்ருடிகோசம்’ (Ionidium suffruticosum) என்ற தாவரவியல் பெயர். ‘வையொலேசியே’ (Violaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. டிரைடெர்பினாய்ட்கள் (Triterpenoids), ஃப்ளேவனாய்டுகள் (Flavonoids), ஆல்கலாய்டுகள் (Alkaloids) போன்ற தாவர வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.


உணவாக: ‘தாதுவை உண்டாக்கும் தனிமேகத்தைத் தொலைக்கும்…’ என்ற ஓரிதழ் தாமரைக்குச் சொந்தமான மருத்துவப் பாடல், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கவும் இது சிறந்த மருந்து என்று குறிப்பிடுகிறது. ஓரிதழ் தாமரையை (முழுத் தாவரத்தையும்) தினமும் காலையில் உணவு முறைக்குள் சேர்த்து வர, உடலுக்குப் பலமுண்டாகும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட ஓரிதழ் தாமரை, யானை நெருஞ்சில், அம்மான் பச்சரிசி போன்ற மூலிகைகளை ஒன்றாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் குணமாகும். ஓரிதழ் தாமரையை உலர்த்திப் பொடிசெய்து, பனைவெல்லம் கலந்து அரை தேக்கரண்டி வீதம் பாலில் இருவேளை சாப்பிட்டுவர, தாது விருத்தியாகும்.


மருந்தாக: கொழுப்பு மிகுந்த ஊட்டத்தை எலிகளுக்குக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், ஓரிதழ் தாமரையிலிருக்கும் ‘கொமரின்’ (Coumarin) எனும் பொருள், அதிகரித்த கொழுப்புச் சத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

விந்தணுக்களின் உருவ அமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவற்றின் செயல்திறனைச் சிறப்பாக்க ஓரிதழ் தாமரை உதவுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்களில் ஏற்படும் நுண்சிரை பாதிப்புகளைத் தடுக்க, இது பெருமளவில் பயன் தருகிறது.


வீட்டு மருந்தாக: மன அழுத்தத்தைக் குறைக்க, ஓரிதழ் தாமரை மற்றும் நீர்ப்பிரம்மியை அரைத்துத் தலையில் பூசும் முறை பின்பற்றப்படுகிறது. விரைவில் விந்து முந்தும் நிலையைக் குணமாக்க, ஓரிதழ் தாமரைச் சூரணம் சிறந்த மருந்து. சிறுநீர் எரிச்சலைக் குறைக்க, ஓரிதழ் தாமரையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் காய்ச்சிக் குடிக்கலாம்.

சுரத்தைக் குறைக்கும் கஷாய வகைகளில் ஓரிதழ் தாமரையையும் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. பொடுதலை, செம்பரத்தை, மருதாணி இலைகளோடு இதன் இலைகளை அரைத்து நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி, முடித் தைலமாக பயன்படுத்த, கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன், பொடுகுத் தொந்தரவின் தீவிரமும் குறையும். உடல் பருமனைக் குறைக்க இதை முயன்று பார்க்கலாம் எனும் சித்த மருத்துவக் குறிப்பு ஆய்வுக்குரியது.

ஓரிதழ் தாமரை, கோரோசனை, பச்சைக் கற்பூரத்துடன் பசு நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘மை’ வகை மருந்தை, பாலியல் நோய்களில் ஏற்படும் புண்களுக்கு வெளிப்பிரயோகமாகத் தடவலாம்.

ஆயிரம் தாமரை மொட்டுக்கள் மட்டுமல்ல, ஓரிதழ் தாமரையின் இந்த ஓரிதழும் ஆனந்தக் கும்மிகள் கொட்டும்!...


கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com


வயிற்று உப்புசம் தீர

தே.பொருட்கள்..

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

திப்பிலி – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

ஓமம் – 50 கிராம்

கருஞ்சீரகம் – 50 கிராம்

இந்துப்பு – 25 கிராம்

கடுக்காய் – 50 கிராம்

உலர்ந்த கொத்தமல்லி இலை – ¼ கிலோ

உலர்ந்த கறிவேப்பிலை இலை – ¼ கிலோ


     இவையனைத்தையும் கலந்து தூளாக்கவும். இதில் காலை, மதியம் இரவு மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவில் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும். நுரையீரல் பலம்படும். வயிற்று உப்புசம் தீரும்.

பூண்டு தொக்கு

 

தேவையான பொருட்கள்

பூண்டு  - 200 கிராம்

சின்ன வெங்காயம்  - 15

தக்காளி  - 2

தேங்காய் துருவல் -  3 ஸ்பூன்

பெரிய வெங்காயம்  - 1

மல்லித்தூள்  - ஒன்றரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன்

சீரகத்தூள்  - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்

புளி  - நெல்லிக்காய் அளவு

கடுகு  - அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்  -  சின்ன குழி கரண்டி அளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை

100 கிராம் பூண்டை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி  100 கிராம் பூண்டு ,சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கி தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி தனியாக ஆற வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வாசனை  வரும்வரை  வறுத்துக் கொள்ளவும்.

வதக்கி வைத்த தக்காளி ,பூண்டு, சின்ன வெங்காயம் ,வறுத்த தேங்காய் துருவல்  கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

மீதி எண்ணெயை கடாயில் ஊற்றி கடுகு போட்டு தாளித்து நறுக்கிய ,பெரிய வெங்காயம் தட்டி வைத்த பூண்டு போட்டு  கோல்டன் பிரவுன் கலர் ஆகும் வரை வதக்கவும்.

பின்பு அதனுடன் மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் ,மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .

பின்பு அதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து  இரண்டு நிமிடம் வதக்கி அதில் ஒரு டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து  ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

மிகவும் சுவையான பூண்டு தொக்கு ரெடி

பூண்டு தொக்கு   மூன்று நான்கு நாட்கள் இருந்தாலும் கெட்டுப்போகாது .

சூடான சாதத்தில்   போட்டு பிசைந்து   சாப்பிட சூப்பராக இருக்கும் .

இட்லி ,தோசைக்கு  தொட்டுக்க ரொம்ப சூப்பரா இருக்கு இருக்கும் .

கோதுமை மாவு இனிப்பு அப்பம்

 தேவையான பொருட்கள்

கோதுமை மாவு -  3  கப்

வெள்ள ரவை - முக்கால் கப்

நாட்டுச்சக்கரை  - நாலு கப்

தேங்காய் துருவல் - ஒரு கப்

நாட்டு வாழைப்பழம்  - இரண்டு

சுக்குத்தூள்  - கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதுல கோதுமை மாவு,  ரவை  சுக்குப்பொடி சேர்த்து நல்ல கலந்துக்கணும்.

அதோட கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொஞ்சம்  கெட்டியான மாவாக பிசைந்து கொண்டு பின்பு அதில் நாட்டுச்சக்கரை தேங்காய் துருவல்  வாழைப்பழம் சேர்த்து  பிசைய வேண்டும்.

நாட்டுச்சக்கரை கொஞ்சம் தண்ணீர் விடும் பார்த்து பிசைய வேண்டும்

அதன் பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர்   சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு   பனியார மாவை ஒரு 30 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள்.

 ஊற வைத்த பின் கால் டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் .பின்பு கடாயை அடைப்பில் வைத்து  தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக வைக்கவும்.

எண்ணெய் சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்

வெந்தவுடன் தானே எழும்பி மேலே வந்துவிடும்.

திருப்பி விட்டு நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.இதே மாதிரி எல்லா மாவையும்  சுட்டு எடுத்தால் சூப்பரான  சூப்பரான மிருதுவான பணியாரம் ரெடி. 

 https://youtu.be/z4UdD-FGJYg?si=IWU6F5MEuBfxTmx1

தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜுஸ்

 Coconut Milk Curry Leaves Juice


தேவையான பொருட்கள்


தேங்காய் – 1 மூடி

கறிவேப்பிலை – 20 இலைகள்


செய்முறை


1. தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.


2. பின் ஒரு வெள்ளைத் துணியில் அல்லது பெரிய அரிப்பில் வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

அரைத்த தேங்காய் கறிவேப்பிலை விழுதை மீண்டும் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நன்கு கலந்து பரிமாறவும்.

பரிமாறும் போது சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். 


இந்த ஜூஸ் மற்றும் 5 ஊறவைத்த பாதாம்பருப்பை காலை உணவாக உட்கொள்ளும் போது அந்த நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். குறிப்பாக யோகா செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு இந்த கறிவேப்பிலை தேங்காய்ப்பால் ஜுஸ் அருந்தினால், உடற்பயிற்சிகள் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.

தக்காளி குருமா

 * - Tomato Kurma*

*சப்பாத்தி, பூரி, தோசைக்கு  தக்காளி குருமா.*


தேவையான பொருட்கள்


சின்ன வெங்காயம் - 10 - 15, நீளமாக நறுக்கியது

தக்காளி - 3, பொடியாக நறுக்கியது

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

தனியாதூள் - 1 டீஸ்பூன்

கரம்மசாலாதூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

பட்டை - 2 சிறிய துண்டு

கிராம்பு - 3

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


அரைக்க


தேங்காய்த்துருவல் - 1/2 கப்

கசகசா - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்


இவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 


செய்முறை


1. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 


2. வெங்காயம் லேசாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். 


3. தக்காளி பாதி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியாதூள் சேர்த்து வதக்கவும். பின் கரம்மசாலாதூள் சேர்த்து கலந்து கொள்ளவும். 


4. இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி அதோடு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 


5. பின் குருமாக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மேலும் 1 கப் தண்ணீர் கலந்து மூடி வைத்து மிதமான சூட்டில் 1 விசில் வந்ததும் இறக்கவும். 


6. குக்கரில் இருக்கும் ஆவி அடங்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து மெதுவாக கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். தோசை, சப்பாத்தி, பூரிக்கு தக்காளி குருமாவை நீங்களும் செய்து பாருங்கள்.

எண்ணெய்க் குளியல்... எது சரி... யார், எப்படி எடுக்கலாம்?




``சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” அதாவது, நான்கு நாள்களுக்கு ஒருமுறை எண்ணெய்க் குளியல் அவசியம் என்கிறது சித்த மருத்துவம். கோடைக்காலம் என்றால் வாரம் இருமுறை, மழைக்காலம் என்றால் வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும்.

ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது. ஆனால், காலமாற்றத்தால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.




அதிலும் தீபாவளிக்குத் தீபாவளி மட்டுமே நம்மில் பலர் எண்ணெய்க் குளியல் எடுக்கிறோம். பழக்கமே இல்லாமல் திடீரென்று தீபாவளிக்கு எண்ணெய்க் குளியலை எடுக்கையில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளும் சிலருக்கு வந்துவிடுகின்றன.

அதனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தீபாவளியன்று எண்ணெய்க் குளியலை எடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார். எண்ணெய்க் குளியல் குறித்து அவர்தரும் மிக முக்கியத் தகவல்கள் இதோ உங்களுக்காக...

எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் எது?

நல்லெண்ணெய் எண்ணெய்க் குளியலுக்கு மிகவும் உகந்தது. அதேபோல தேங்காய் எண்ணெய்’, விளக்கெண்ணெய் போன்றவற்றையும் எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து முக்கூட்டு எண்ணெய்யாகவும் பயன்படுத்தலாம்.


தீபாவளியன்று காலையில் எத்தனை மணிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது?

காலையில் 5 மணிவாக்கில் எண்ணெய்க் குளியல் எடுப்பது சிறந்தது. ஆனால், எண்ணெய் தேய்த்துக் குளித்து எனக்குப் பழக்கமில்லை. அதனால் சீக்கிரம் குளித்தால் சளி பிடித்துவிடுமோ என்ற கவலை இருப்பின் தீபாவளியன்று சூரியன் லேசாக எட்டிப் பார்க்கும் பொழுதில் அதாவது, காலையில் 5.30 மணி அளவில் குளிக்கலாம்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எண்ணெய் தடவி (சொதசொதவென எண்ணெய் தடவத் தேவையில்லை. உடல் முழுக்க எண்ணெய் ஒட்டியிருக்கும் அளவுக்குத் தடவினால் போதும்). அரை மணிநேரம் வெயிலில் இருந்துவிட்டு பின்னர் குளிப்பதே முறையான எண்ணெய்க் குளியல் ஆகும்.

தீபாவளியன்று இந்த முறையையே பின்பற்றுங்கள். ஆனால், நடைமுறையில் எனக்கு இது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால் உச்சந்தலை, உள்ளங்கால், உள்ளங்கை, தொப்புள், முதுகின் பின்புறம், கழுத்தின் பின்புறம், தோள்பட்டை, முட்டி போன்ற உடலின் மூட்டு இணைப்புகளில் எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் முதல் அரை மணிநேரம் ஊறவிட்டுப் பின்னர் குளிக்கலாம்.

இது ஓரளவுக்குப் பலன் கொடுக்கும் என்றாலும் உடல் முழுக்க எண்ணெய் தடவிக் குளிப்பதே சிறந்தது.


அதேபோல சிலர் எண்ணெய் தேய்த்துக்கொண்டு பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார்கள். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, எப்போது எண்ணெய் தேய்த்துக்கொண்டாலும் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். ``எண்ணெய் பெறின், வெந்நீரில் குளிப்போம்” என்பதைத்தான் சித்த மருத்துவமும் வலியுறுத்துகிறது.

சிலர் எண்ணெய் நன்றாக ஊற வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்நாள் இரவே தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு தூங்கிவிட்டு மறுநாள் குளிப்பார்கள். இப்படிச் செய்தால் காய்ச்சல் வருவதோடு, குளிர்ச்சி அதிகமாவதால் சில நேரங்களில் வலிப்பும் வந்துவிடும் என்பதால் இச்செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அன்று மட்டும் உடல் சற்று சோர்வாக இருப்பதுபோலத் தெரியும்.


சளி பிடிக்காமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள்:

தீபாவளி அன்றுதான் நான் புதிதாக எண்ணெய்க் குளியல் எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்பவர்கள் சளி பிடிப்பதைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கை விஷயங்களை மேற்கொள்ளலாம்.

அதாவது, எண்ணெயில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை சுக்குத்தூள், ஒரு பூண்டுப் பல், ஒரு மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து லேசாகச் சூடாக்கி பின்னர் அதைத் தேய்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் சிறிது மிளகுத்தூளை உச்சந்தலையில் தேய்த்து பின்னர் அதன்மேல் எண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது எண்ணெயைத் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், உடலுக்குத் தேய்க்கும் எண்ணெய் என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்துவைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பொதுவாகத் தலையில் அழுக்கு இருக்கும் என்பதால் தலையில் தேய்த்த எண்ணெயையே மற்ற உடல் பாகங்களுக்கும் தேய்த்தால் தலையில் உள்ள அழுக்கு மற்ற உடல்பாகங்களுக்குப் போய்விட வாய்ப்பிருக்கிறது.


சீயக்காயே சிறந்தது!

ஷாம்பூ போன்றவை எண்ணெய்யின் பிசிபிசுப்பை முற்றிலும் நீக்காது என்பதால் எப்போது எண்ணெய் தேய்த்துக்கொண்டாலும் தலைக்கு சீயக்காய் போட்டே குளியுங்கள். உடலில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பை எடுக்கவும்கூட சீயக்காய் மற்றும் கடலைமாவுக் கலவையைப் பயன்படுத்துங்கள். அல்லது உடலில் நலங்கு மாவு தேய்த்தும் குளிக்கலாம். இதுபோன்ற பொடிகளைத் தேய்த்துக் குளிக்கும்போது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பு, அழுக்குகள் போன்றவை நீங்குவதோடு சருமத்துக்கு பொலிவும் கிடைக்கும்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் வளர்ந்த குழந்தைகள் ஆகியோருக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இத்தனை நாள்கள் இல்லையென்றால் தீபாவளியன்று புதிதாக இந்தப் பழக்கத்தை ஆரம்பிப்பதைத் தவிர்க்கலாம்.

ஏனென்றால் இது மழைக்காலம் என்பதால் புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அது சட்டென்று சிலருக்கு சளி அல்லது காய்ச்சலை உண்டாகிவிடும். எனவே, உச்சந்தலையில் மட்டும் சிறிது எண்ணெயை வைத்துக் குளிப்பது நல்லது. வெயில் காலம் வந்த பிறகு, முழுமையான எண்ணெய்க் குளியலை கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு, தலைக்கு சாம்பிராணி புகை போடுவது மிகவும் நல்லது. தலையில் சேர்ந்திருக்கும் நீரை சாம்பிராணிப் புகை எடுத்துவிடும். ஆனால், இப்போது கடைகளில் சுத்தமான சாம்பிராணி கிடைப்பது அரிதாகிவிட்டதால் மூலிகை தூபப்பொடியை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

தும்பைப்பூ இலை, துளசி இலை, அரச இலை போன்றவற்றைச் சேகரித்து காயவைத்துப் பொடியாக்கிக்கொள்ளுங்கள். பின்னர் சிறிதளவு கட்டிச் சாம்பிராணியுடன் இந்த மூலிகை தூபப்பொடியைச் சேர்த்துப் புகை போட்டுத் தலைக்குக் காட்டலாம். ஆனால், வீசிங் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நலம்.

புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அன்று மட்டும் உடல் சற்று சோர்வாக இருப்பதுபோலத் தெரியும். எண்ணெய்க் குளியலைத் தொடரத் தொடர இந்தச் சோர்வு நீங்கிவிடும். உடல் குளுமையாவதோடு, புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்பதால் நீங்கள் இந்தப் பழக்கத்தை அதன்பின்னர் நிறுத்தவே மாட்டீர்கள்.

எனவே, இத்தனை நாள்கள் நீங்கள் எண்ணெய்க் குளியலை எடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இந்தத் தீபாவளியை ஒரு சாக்காக வைத்து இதைத் தொடங்குங்கள். குறிப்பாக, வீட்டின் பெரியவர்கள் உங்களோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த நல்ல பழக்கத்தைக் கொண்டு சேருங்கள்.


எண்ணெய்க் குளியல் எடுத்தால் என்ன சாப்பிடலாம்?

தீபாவளி என்றில்லை, எப்போது எண்ணெய் தேய்த்துக் குளித்தாலும் அன்று குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிட வேண்டாம். எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடம்பு குளிர்ந்திருக்கும் என்பதால் செரிமானத்தைத் தாமதமாக்கும் ஹெவியான உணவுகளையும் தவிர்த்திடுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று அசைவ உணவுகளைக் கூடுமானவரை சாப்பிட வேண்டாம்.

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று உடலின் வெப்பம் கண் வழியே வெளியேறுவதால் கண் எரிச்சல் இருக்கும். குறிப்பாகத் தூக்கம் வரும். தூக்கம் வருகிறதே என்று மதியம் இரண்டு மூன்று மணிநேரம் தூங்கிவிட்டால் உடலின் வெப்பம் அதிகமாவதோடு உடல் சோர்வும் அதிகமாகும். எனவே, தூக்கம் வருவதுபோல இருந்தால் நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்துவிடுவது நல்லது.



உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு, உற்சாகத்தையும் சருமத்துக்கு பொலிவையும் எண்ணெய்க் குளியல் தரும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், எண்ணெய்யை உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தேய்க்கும்போது இதன்மூலம் உடலின் கழிவுகளை நீக்கக்கூடிய நிணநீரின் செயல்பாடு தூண்டப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, நன்மைகளின் சுரங்கமாக இருக்கும் எண்ணெய்க் குளியலை வரும் தீபாவளியிலிருந்தாவது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

எண்ணெய் தேய்த்து குளித்த அன்று செய்ய கூடாதது

குளியல் என்பது உச்சந்தலை முதல் பாதம் வரை குளிர்விப்பது. உஷ்ணமான உடலை எண்ணெய் குளியலின் மூலம் குளிரவைக்கும் முறை. எண்ணெய் குளியல் மறந்துவிட்ட பலரும் மீண்டும் இதை நோக்கி திரும்புகிறார்கள். எண்ணெய் குளியல் செய்தபிறகு செய்ய வேண்டிய செய்ய கூடாத விஷயங்களும் உண்டு. இதையும் எண்ணெய் குளியலோடு கடைப்பிடித்தால் முழுமையான பலனை பெற்றுவிட முடியும்.
சித்தமருத்துவம் படி தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை தின ஒழுக்கம் என்கிறது. பருவநிலை மாற்றத்தால் அதிக வெயிலும், அதிக குளிரும், அதிக மழையும் என மாறும் போது அதை தாங்கி பிடிப்பது நமது உடல் தான். இந்த சருமத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கை வெளியேற்றிவிடலாம். அதை குளியல் மூலமே சோப்பு போட்டு தேய்த்து வெளியேற்றலாம். ஆனால் சருமத்துவாரங்களில் ஊடுருவி அடைப்பை உண்டாக்கிய அழுக்கை வெளியேற்றும் தன்மை எண்ணெய் குளியலுக்கு உண்டு. வளரும் பருவம் முதல் சரியான முறையில் தவறாமல் எண்ணெய் குளியல் மேற்கொண்டால் சரும பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

எண்ணெய் குளியலின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோமா?

எண்ணெய் குளியலின் நன்மைகள் குறித்து ஏற்கனவே விரிவாக கொடுத்திருந்தாலும் சுருக்கமாக பார்க்கலாம். பாரம்பரியமிக்க தமிழ் மருத்துவத்தில் எண்ணெய் குளியலின் நன்மைகளாக சொல்வது உடல் சூடு தணியவும், ஆழ்ந்த உடல் உறக்கத்தை தருவதற்கும், சருமம் அதனோடு கூந்தலுக்கு பொலிவு தரவும், உடல் வலி நீங்கவும் எண்ணெய் குளியல் அவசியம் என்கிறது. மூட்டு வலிகள் இருப்பவர்கள் மூட்டுகளில் ஆயில் தடவி மசாஜ் செய்து குளிக்கலாம்.



எண்ணெய் குளியல் மற்றும் மசாஜ் யாருக்கு

பிறந்த 15 நாட்கள் ஆன குழந்தை முதல் அனைவருக்குமே ஏற்றது. அதே நேரம் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தீவிர நோயை கொண்டிருப்பவர்கள், காயங்கள் இருக்கும் போது, மாதவிடாய் பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள், கேசர் நோயாளிகள், உடலில் அதிக வலி கொண்டிருப்பவர்கள், கபம் சம்பந்தமான நோய்களை கொண்டிருப்பவர்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்ள கூடாது. மருத்துவரின் ஆலோசனையோடு தேவையெனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

எண்ணெய் குளியலின் போது செய்யகூடாதவை

காலை ஐந்து மணியிலிருந்து 7 மணிக்குள் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும். அதிக நேரம் ஊறவேண்டும் என்பதில்லை. 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்களுக்குள் குளிக்கவேண்டும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீர் பயன்படுத்தகூடாது. மிதமான சூடுடைய வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும் கூந்தலை உலர்த்த வேண்டும்.

அன்றைய தினம் அதிக காற்றோட்டமான இடங்களில் நடமாடவோ அங்கேயே இருக்கவோ கூடாது. குளிர்காற்று பட்டால் சளி பிடிக்க வாய்ப்புண்டு. அதே போன்று அதிக வெயிலிலும் சுற்றக்கூடாது.உடலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் உடல் சூடு அதிகரித்து மேலும் பாதிப்பை உண்டாக்க செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகமாக்கும் உணவு முறையும், வாழ்க்கை முறையும்!

அன்றைய தினத்தில் பகல் உறக்கம் செய்யவே கூடாது. ஏனெனில் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக உடலில் இருக்கும் அதிகப்படியான உஷ்ணம் வெளிவரும். அந்த நவதுவாரங்களில் ஒன்று கண்கள். பகலில் தூங்கும் போது இவை உடலினுள் தங்கிவிடும். அதனால் பகல் உறக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


அன்றைய தினம் உணவுகளிலும் அதிக கட்டுப்பாடு தேவை. அதிக குளிர்ச்சியான பானங்கள், ஐஸ்க்ரீம் வகையறாக்கள் தவிர்க்க வேண்டும். மாவு பொருள்களால் ஆன பொருள், வெல்லம், பூசணிக்காய், மாங்காய், தேங்காய், எளு, கொள்ளு, உளுந்து, அகத்திக்கீரை, அரைக்கீரை, கத்தரிக்காய், மொச்சை, கொத்தவரை, அசைவ உணவில் நண்டு, மீன், ( ஏரிமீன் அயிரைமீன் சுறா சாப்பிடலாம்) கோழி, ஆட்டிறைச்சி, பன்றி போன்றவையும் தவிர்க்க வேண்டும். தயிருக்கு மாற்றாக நெய் சேர்க்கலாம். சூப் வகைகள் எடுத்துகொள்ளலாம். பருப்பு மிளகு சேர்த்த ரசம், எளிதில் செரிமானமாக கூடிய உணவுகள் சேர்க்கலாம்.

எண்ணெய் குளியலின் பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் இந்த விதிமுறைகளையும் சீராக கடைப்பிடிக்க வேண்டும்.

சுவை எனும் நஞ்சு

தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்த நண்பர் ஒருவர், அவர் பார்த்து மிகவும் அஞ்சிய ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு உணவு உணவு. 


தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌ 


அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது. உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது. பல உணவகங்களில் இவை இல்லை. 


ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது. மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது. 


இந்த வரிசையில் காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன். விரைவில் அதனையும் ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம். தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.


ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன். ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. ஏன்டா ஏன்.


உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பிசா(சு), சவ(ம்)ர்மா போன்ற கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகிறது.


திக்கு எங்கிலும் பேக்கரி, அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார். சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும். 


ஊரில் எவனுக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை. கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை. இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் பெருகிவிட்டது. இனிப்பு பெருகிவிட்டு நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது.


அண்ணாச்சி கடைகளிலும் பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வட இந்திய பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது. ஏன் தின்பண்டங்கள் கூடக் கல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது. ஒரு காலத்தில் தூ என்று துப்பிய சுவை. இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர். 


இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் D-MART போன்ற கடைகள் தான். அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும். ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள். 


அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து. அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும். என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள்.


 உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம்.


உணவை மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள், கண்களால் தின்கிறார்கள். பிறகு கண்டதையெல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிகிறார்கள்.


முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால் வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் swiggy zomoto தூதுணவு வந்துவிட்டது.


இங்குப் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது, 

ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது. மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர். 


அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.


தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள், அது இன்றளவும் வெற்றி பெறவில்லை, என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது. 


தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை. அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். 


சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும். அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். 


இது நடக்காவிட்டால். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும், இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், மாரடைப்பு என அனைத்தும் தலைவிரித்தாடும்.


படித்த விழிப்புணர்வு செய்தி 👍👍👍👍சுவை எனும் நஞ்சு


தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்த நண்பர் ஒருவர், அவர் பார்த்து மிகவும் அஞ்சிய ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு உணவு உணவு. 


தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌ 


அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது. உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது. பல உணவகங்களில் இவை இல்லை. 


ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது. மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது. 


இந்த வரிசையில் காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன். விரைவில் அதனையும் ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம். தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.


ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன். ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. ஏன்டா ஏன்.


உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பிசா(சு), சவ(ம்)ர்மா போன்ற கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகிறது.


திக்கு எங்கிலும் பேக்கரி, அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார். சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும். 


ஊரில் எவனுக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை. கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை. இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் பெருகிவிட்டது. இனிப்பு பெருகிவிட்டு நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது.


அண்ணாச்சி கடைகளிலும் பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வட இந்திய பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது. ஏன் தின்பண்டங்கள் கூடக் கல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது. ஒரு காலத்தில் தூ என்று துப்பிய சுவை. இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர். 


இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் D-MART போன்ற கடைகள் தான். அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும். ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள். 


அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து. அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும். என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள்.


 உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம்.


உணவை மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள், கண்களால் தின்கிறார்கள். பிறகு கண்டதையெல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிகிறார்கள்.


முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால் வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் swiggy zomoto தூதுணவு வந்துவிட்டது.


இங்குப் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது, 

ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது. மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர். 


அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.


தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள், அது இன்றளவும் வெற்றி பெறவில்லை, என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது. 


தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை. அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். 


சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும். அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். 


இது நடக்காவிட்டால். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும், இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், மாரடைப்பு என அனைத்தும் தலைவிரித்தாடும்.


படித்த விழிப்புணர்வு செய்தி 👍👍👍👍

தினம் ஒரு மூலிகை - சாரணை கீரை

 *


*சாரணை கீரை*  இதன் தாவரவியல் பெயர்:Boerhavia diffusa சாரணை என்ற பச்சை சாரணை சிறுநீரகம் பாதிப்பு அடைந்தவர்கள் இதன் இலைகளை பறித்து நன்றாக இடித்து சாறு எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் அளவு பசும்பால் அல்லது வெள்ளாட்டுப்பால் எடுத்து காய்ச்சாதது ஒரு சங்கு அளவு இழைச்சாற்றை கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் குணமாகும் இந்த சாரணையில் செம்பு சத்தும் இரும்பு சத்தும் சுண்ணாம்பு சத்தம் அதிகமாக உள்ளது நன்றி.

Saturday, February 17, 2024

தலைவலி -ஒற்றைத் தலைவலி

35 விதமான காரணங்கள் உண்டு. 

மலச்சிக்கல், அதிக சூடு, முன் கோபம், தூக்கமின்மை, பிடிக்காதவர்கள் வீட்டில் இருப்பது, அதிக வேலை, போன்றவை பொதுவான காரணங்கள். 

தலைவலிக்கு சுக்கு பவுடரை வெண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்று போடலாம். கடுகை தேவையான அளவு எடுத்து மிக்ஷியில் அடித்து சலித்து சுடுநீரில் குழைத்து நெற்றியில் பற்று போடலாம். சூடான சுக்கு காபி குடிக்கலாம்.

ஒற்றைத் தலைவலி 

தலையில் நீர் ஊற்றிக் குளிக்கும் பழக்கம் இல்லாதவர்கும், மலச்சிக்கல் உள்ளவருக்கும்,வேளைக்கு சாப்பிடாமல் பசி உள்ளபோது சாப்பிடாமல் தவிர்பதும், பசி இல்லாதபோது சாப்பிடுவர்களுக்கும், ஓய்வின்றி அலைபவருக்கும் வரும். ஒரே நேரத்தில் தலைவலி வரும். சிலருக்கு சூரியன் வந்து மறையும் வரை தலைவலி வரும்.

அவரவர் கைப்பிடி அளவு மிளகாய் வற்றல் எடுத்து இரவு படுக்கும் முன் வடிகஞ்சியில் ஊறப்போடவும்,விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து வடிகஞ்சியில் ஊறப்போட்ட மிளகாய் வற்றலை வெண்ணெய் போல் அரைத்து ஊறிய வடிகஞ்சியில் கரைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலை குளிக்கவும். ஒற்றைத் தலைவலி என்றால் எரிச்சல் இருக்காது. குளு குளு வென இருக்கும். இதை ஞாயிற்றுக்கிழமை தோறும் மூன்று ஞாயிறு செய்யவும்.  

மிளகாய் தேய்த்துக் குளித்த அன்று காலை வெந்தயக் கஞ்சி சாப்பிடவும். மதியம் ரசம் சோறு சாப்பிடவும், இரவு உணவை ஆறு மணிக்குள் சாப்பிடவும்.

பத்தியம் -முட்டை, மாமிசம் வகை ,இனிப்பு பலகாரங்கள், நெய், தயிர், மோர், வாழைப்பழம், வேர்கடலை இவைகளை தவிர்க்கவும்.


-மரு,சித்தன்.

பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு

 


ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.*

     *அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.*

     *மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.*

     *பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாக சுற்றிக் கொண்டது.*

     *விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது.*

     *கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.*

     *தன் கூட்டத்தில் ஏதாவது உதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டது !!!*

     *ஆனாலும் எந்த குரங்கும் அந்த குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.*

     *"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு"*

     *"இது கொத்துனா உடனே மரணந்தான்"

     "குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும்"*

     *இவன் தப்பிக்கவே முடியாது"*

     —> *என்றெல்லாம் மற்றகுரங்குகள், குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.*

     *தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையில் அந்த குட்டிக் கரங்கிற்கு வேதனை சூழ்ந்துகொன்டது !!!*

     *எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பைப் பார்க்கப் பார்க்க பயம்தான் அதிகரித்தது !!!*

     *மரணபயம் குரங்கின் முகத்துக்கு முன்னால் விசுவரூபமாக காட்சியளித்தது !!!*

     *"ஐயோ. புத்தி கெட்டுப் போய்நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே" !!!*

     *குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது !!!*

     *ஆனாலும் எந்த பயனும் நிகழவில்லை !!!*

     *நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.*

     *உணவும், நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.*

     *கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.*

     *அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.*

     *குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார்.*

     *குரங்கை நெருங்கி வந்தார்.சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில்,*

     *தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.*

     *அவர் நெருங்கி வந்து சொன்னார், "எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற?*

     *அதைக் கீழே போடு" என்றார்.*

     *உடனே அந்த குட்டிக் குரங்கு, "ஐயய்யோ, பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்" என்றது.*

     *அவர் மீண்டும் சொன்னார், "பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு.*

     *அதைக் கீழே போட்டுவிடு".*

     *அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.*

     *அட !!! நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது.*

     *அப்பாடா. குரங்குக்கு உயிர் வந்தது. அவரை நன்றியுடன் பார்த்தது.*

     *"இனிமேலாவது, இந்த முட்டாள் தனத்தைப் பண்ணாதே" என்றபடி ஞானி கடந்து போனார்.*

     *ஆம் !!! சகோதர சகோதரிகளே !!! கிட்டத்தட்ட நாம் அனைவருமே, "மனக்கவலை" என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு ... விடவும் முடியாமல், பிடித்திருக்கவும் முடியாமல் மனதிற்குள் கதறிக் கொண்டிருக்கிறோம்.*

     *வெளி வேஷத்திற்கு, மகிழ்ச்சியாக இருப்பது போல், சிரித்தபடி காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் கதரிக் கொண்டிருக்கும் !!!*

     *ஆம் !!! நண்பர்களே !!! நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் !!! நடைமுறையில் வாழ்க்கையில் பார்த்தால், கவலை இல்லாத மனிதர் எவருமே இல்லை எனலாம் !!! ஆனால் கவலை என்பதே இல்லை என்று வேதம் கூறுகின்றது !!! கவலை இருக்கிறதே என்று சொல்லுவது எல்லாம் தோற்றம் ஆகும் !!! அப்படியானால் தோற்றம் என்பது என்ன? தோற்றங்கள் யாவும் இருப்பது போலவே  தோன்றினாலும் உண்மையில் அது இருக்காது !!!*

     *அப்படியானால் ஏன் கவலைகள் எல்லோருக்கும் இருப்பது போல் தோன்றுகின்றது? அதற்குக் காரணம் அறியாமை !!! ஒன்றைப் பற்றிய அரைகுறையான அறிவு அல்லது தவறான அறிவு அறியாமை எனப்படும்.*

     *இப்படியானால் கவலைகள் எல்லோரும் இருப்பது போல் தோன்றுகின்ற தோற்றத்திற்கு காரணமான அறியாமை ஏன் எல்லோரிடமும் காணப்படுகின்றன?  அதற்குக் காரணம் இடம் உள்ள ஞானமின்மை !!!

     *எந்த ஒரு ஞானம் இன்மை நம் அனைத்து கவலைகளுக்கும் காரணமாக உள்ளது என்கிறீர்களா?

     *இந்த பிரபஞ்சத்தையே மனிதன் பங்கு போட்டுக் கொள்கிறான். நான் எனது என்கிற உணர்வுகளே அந்த அறியாமை ஆகும் !!!

     *அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும் ? எதை புரிந்து கொள்ள வேண்டும் தெரியுமா? இல்லாத கவலையை இருப்பதாக எண்ணிக் கொண்டு நித்தம் நித்தம் நாம் வருந்தி கொண்டிருக்கிறோம் !!!*

     *எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களுக்கு தொல்லையை கொடுக்கிறதோ அவற்றை மறக்க முயற்சி செய்யுங்கள் !*

     *எவ்விதமான நிகழ்வுகள் எல்லாம்  உங்கள் மனதுக்கு நிம்மதியை தருகிறதோ, அவற்றை அடிக்கடி  நினைத்துப் பாருங்கள் !!!*

     *"கவலைகள் இருந்து விட்டுப் போகட்டுமே !!!" என்று மட்டும் எண்ணி விடாதீர்கள் !!! ஏனெனில் இவ்வுலகில் ஏற்படுகின்ற எண்ணற்ற தற்கொலைகளுக்கும் பைத்தியங்களுக்கும் இந்த கவலைகள் தான் காரணமாம் !!!*"

     *ஆம் எனது அருமை ஆன்மீகத்தையும் தாண்டிய ஆத்ம ஞான பிரியர்களே !!! எந்த ஒரு சிறிய கவலையே ஆயினும் அதையே தொடர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தால் அது பெரும் கவலையாக மாறி உன்னை பைத்தியம் பிடிக்க வைத்து விடும் அல்லது தற்கொலைக்கு தூண்டிவிடும் !!!

     *என்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று கண்ணதாசனின் வரிகளுக்கு இணங்க,  நீயே உன்னை அறிந்தால் இவ்வுலகில் உள்ள அனைத்து கவலைகளும் தானாக விலகுவதையும் மகிழ்ச்சிகள் தானாக நெருங்குவதை உணர்வீர்கள் !!!*

தினம் ஒரு மூலிகை - கல்யாண முருங்கை

 *

*கல்யாண முருங்கை* இதன் தாவரவியல் பெயர்.Erythirina indca கல்யாண முருங்கை இதை முள் முருங்கை என்றும் அழைப்பார்கள் பெண்கள் தலைக்கு குளிக்காமல் இருந்தால் மாதவிடாய் சரியாக போகாமல் இருந்தால் இம்மூலிகையின் இலையை பறித்து நன்றாக இடித்து ஒரு டம்ளர் அளவு சாறு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் பனங்கற்கண்டு சேர்த்து காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட மாதவிடாய் சரியாக போகும் உடலுக்கு தகுந்தவாறு அளவை கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம் மேலும் இந்த மூலிகை சளி இருமலை போக்கும் இதன் இலையை காய வைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர கல்லடைப்பு சதை அடைப்பு குணமாகும் கல்யாண முருங்கையின் பூ கருப்பையில் கட்டியையும் ரத்த குன்மத்தையும் விளக்கும் கருப்பை வளர்ச்சிக்கு சிறந்த மூலிகை வாந்தி வயிற்று வலி பித்தக் காய்ச்சல் அக்ரகம் அனல் வாய் சூடு ஆகியவைகளை நீக்கும் மிகுந்த அழகை உண்டாக்கும் இதில் அயோடின் சத்து அதிகம் உள்ளது நன்றி.

Friday, February 16, 2024

தினம் ஒரு மூலிகை - வெள்ளை கரிசலாங்கண்ணி

 


 *வெள்ளை கரிசலாங்கண்ணி*.   தாவரவியல் பெயர்.Eclypta alba வெள்ளை கரிசலாங்கண்ணி பெண்களுக்கு மாதவிடாய் சரியாக போகவில்லை எனில் இம்மாலிகையின் இலையை பறித்து காய வைத்து இடித்து பொடி செய்து காலையும் மாலையும் திரியடி பிரமாணம் சாப்பிட்டு வர மாதவிடாய் சரியாக போகும் கல்லீரல் செயல்பாட்டில் குறைவினால் ஏற்படும் ரத்த சோக நோய்க்கும் கரிசலாங்கண்ணி சாற்றை 100 மில்லி அளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கிவிடும் ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையை சீராக செயல்படும் கீரையாகவும் சமைத்து உண்ணலாம் இதில் வெள்ளி சத்து அதிகம் அடங்கி உள்ளன நன்றி.

Thursday, February 15, 2024

எந்தப் பிரச்சினையையும் மூன்று வழிகளில் கையாளலாம்

பிரச்சினையிலிருந்து விலகலாம். பிரச்சினையை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பிரச்சினையை மாற்றலாம், சரி செய்யலாம். இவற்றைத் தவிர எதைச் செய்தாலும் பலன் இல்லை. நீங்கள் அதிகம் கவலைப் படும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 


கவலையைத் தவிர கோபம், பயம், சுயப் பரிதாபம், வெறுப்பு, பொறாமை, பதற்றம், சந்தேகம் என்று எந்த விதமான எதிர்மறை உணர்வுகள் வந்தாலும் அவை பிரச்சினையை இம்மி அளவு கூட மாற்றப் போவதில்லை. மாறாகப் பிரச்சினை பற்றிய பிம்பம் தான் பெரிதாகிக் கொண்டே இருக்கும்.


*தொலைக்காட்சி..*


தொலைக்காட்சி பார்ப்பது பற்றி நான் எழுதியிருந்த கருத்தைப் பலமாக ஆமோதித்த வாசகர் ஒருவர் 'எக்கார்ட் டாலே' சொன்ன வழிகளைப் பின் பற்றியதாய் கூறினார்.


“ டி.வி பார்ப்பதை முழுவதுமாக கைவிடுவது சாத்தியமில்லை. அதனால், ‘அதிகம் டி.வி பார்ப்பது’ என்பது நம் வீட்டில் இருக்கும் பிரச்சினை என்பதை முதலில் ஏற்றுக் கொண்டு விட்டேன். தொலைக்காட்சியில் வருகிற நெடுந் தொடர்களை அதிகம் பார்க்க வேண்டாம் என்று குடும்பத்தினர் எல்லோரும் பேசி இரண்டு சீரியல்கள் மட்டும் தான் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.


அதிகாலை நேரம் என்றால் பக்திப் பாடல்கள், இரவு என்றால் மெல்லிசை என வீடு முழுதும் இசையை ஒலிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது டி.வியிலிருந்து மெல்ல விலகச் செய்து எங்களை மற்ற காரியங்களைச் செய்ய வைக்கும்” எனச் அபாரமாய் சொன்னார் அந்த வாசகர்.


*நிஜமான பக்குவம்..*


இன்னொரு நண்பர் கேட்டார், “சுயக் கட்டுப்பாடு இல்லாமல் பிரச்சினையிலிருந்து தப்பித்தல் நிரந்தரமான தீர்வாகுமா? எது நடந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்க வழி கிடையாதா?”


சுயக் கட்டுப்பாடு தான் தீர்வு. சந்தேகமில்லை. நமக்கு வெளியில் என்ன நடந்தாலும் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பது தான் நிஜமான பக்குவம். ஆன்மிகம் கற்றுத் தருவதும் இதைத் தான். ஆனால், எடுத்தவுடனே அந்த நிலையை அடைவது கடினம். அதனால் தான் ஆரம்பத்திலேயே முக்தி நிலை என்று எந்த மார்க்கமும் சொல்வதில்லை. படிப் படியாகத் தான் பழக்குவார்கள். அது போலத்தான் இதுவும்.


*சூழலைத் தேர்வு செய்தல்..*


மது குடிப்பதை விட்டு விட நினைப்பவர்கள் முதலில் அதைக் குடிக்கும் நண்பர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது புத்திசாலித்தனம். சூழலைத் தேர்வு செய்தல் ஆரம்ப நிலைக் கட்டுப்பாடு. முடிந்தவரை இதைச் செய்வதில் தவறில்லை. பல கேடுகளுக்கு நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பண்புகளும் காரணமாகின்றன. ஒரு பிரச்சினையிலிருந்து மீள அந்தச் சூழலை விட்டு விலக நினைப்பது விவேகம்.


ஆனால், பல சமயங்களில் இது இயலாததாய் இருக்கலாம். உங்கள் குடும்ப மனிதர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திருமணத்திலிருந்து விலகுவது அவ்வளவு எளிதானதல்ல. உங்கள் படிப்பு, தொழில் போன்றவை தரும் சூழல்களைத் தேர்வு செய்வதும் அல்லது விலகிச் செல்லுதலும் கடினமானவை தான்.


*கிடைத்ததை விரும்பு..*


பிரச்சினையாக இருப்பதைச் சீர்படுத்துவதும், மாற்றம் செய்வதும் அடுத்த வழி முறை.


எக்ஸ்னோரா அமைப்பை நிறுவியவர் எம்.பி. நிர்மல். தன் புது வீட்டுக்குக் குடியேறிய போது சுற்றுப்புறம் மிகவும் தூய்மைக் கேடாய் இருப்பது கண்டு மனம் பதறினார். “நல்ல சுற்றுப் புறத்தில் என்னால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், கிடைத்த வீட்டின் சுற்றுப்புறத்தை நல்ல விதமாக மாற்ற முடியும்” என்று அப்போது நினைத்துக் கொண்டாராம். அந்தச் சிந்தனை விதையில் துளிர்த்தது தான் எக்ஸ்னோரா அமைப்பு.


“விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்பு” என்பது ஒரு பிரபலமான வாசகம். காதலித்தவர் வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கவில்லை. ஆனால், மணந்தவரைக் காதலிப்பதில் என்ன தடை?


*ஏற்றால் தான் மாற்றம்..*


துல்லியமாகப் பார்த்தால் ‘ஏற்றுக் கொள்ளுதல்’ ஏற்பட்டால் தான் ‘மாற்றம்’ பிறக்கும். பிரச்சினையை ஏற்றுக் கொள்ளுதல் தான் அதை மாற்றுவதற்கான மன வலிமையையும் தரும்.


“ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே” என்று தாழ்வு மனப்பான்மை கொள்வதற்குப் பதில் முதலில் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். நமக்குக் கிடைத்த சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஆங்கிலம் வசப்படவில்லை. அவ்வளவு தான். அதனால், நாம் நம்மைக் குறைவாக எண்ணத் தேவையில்லை. இப்படி ஏற்றுக் கொண்டால் ‘எப்படி ஆங்கிலம் பேசக் கற்கலாம்?’ என்று நம்பிக்கையோடு யோசிக்க முடியும்.


ஆக, சூட்சுமம் இது தான். முதலில் தேவை இல்லாத எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் விலக்குங்கள். பிரச்சினையின் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்ற முயற்சி செய்யுங்கள். மாறுதல் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. வெற்றி பெறாவிட்டாலும் அதையும் ஏற்று மீண்டும் மாறுதலுக்கு உட்படுத்துங்கள். இந்தத் தொடர் முயற்சி தான் வாழ்க்கை. இதை விருப்பு, வெறுப்பு இல்லாமல் செய்வது தான் பக்குவம்.


*பூதக்கண்ணாடி எண்ணங்கள்..*


ஒரு செய்கையை விட அந்தச் செய்கை தொடர்பான எண்ணம் தான் உங்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.


காதலிக்குக் காத்திருக்கையில் கால் வலிக்கவில்லை. அவளே மனைவியான பின் காத்திருந்தால் கால் வலிக்கிறது. யாருக்குச் சமைக்கிறோம் என்பதைப் பொறுத்து ருசியே மாறுகிறது. பொய் சொல்லி வாங்கிப்போனார் என்று தெரிந்ததும் கொடுத்த நூறு ரூபாய் பெரிய நஷ்டமாகத் தெரிகிறது.


நம்பிக்கையுடன் பூஜைக்குப் பணம் தருகையில் பெருமைப் படுகிறோம். பெரிய மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை செய்தால் பெருமையாக உறவினர்கள் அனைவரிடமும் சொல்வோம். மனச்சிதைவு வந்தால் மூன்றாம் மனிதருக்கு அறியாமல் சிகிச்சை தருவோம்.


பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு முன் அவற்றைப் பற்றிய எண்ணங்களைச் சமாளிப்போம். பிரச்சினைகளைப் பார்க்கும் சில பூதக்கண்ணாடி எண்ணங்கள் நம்மிடம் உள்ளன. அவற்றைக் கையாண்டால் நம் பிரச்சினைகள் பாதிக்கு மேல் காணாமல் போயிருக்கும்..!!