ஒரு திருவிழா கூட்டத்தில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. யாரும் பொருட்படுத்தாத நிலையில் ஓர் இளைஞன் அதை கவனித்தான். மெல்ல அக்குழந்தையிடம் சென்று ஏன் அழுகிறாய் என்றான். இப்போது அழுகை சற்று அதிகமானதை அவனால் உணர முடிந்தது. குழந்தையை தன் மார்போடு இருத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியபடி மீண்டும் கேட்டான், ஏன் அழுகிறாய்
அழுகையை கட்டுப்படுத்தியவாறே, "என் அம்மாவை காணோம்" என்றது குழந்தை.
உன் அம்மா எப்படி இருப்பார்கள? என்றான் அவன்.
ரொம்ப அழகா