Sunday, October 15, 2023

வேதாத்திரியம் - சிந்தனை

 🎌🚥🎌🚥🎌🚥🎌🚥🎌🚥🎌


*வாழ்க வையகம்*

*வளர்க வேதாத்திரியம்*

*வாழ்க வளமுடன்*



🎌🚥🎌🚥🎌🚥🎌🚥🎌🚥🎌


🕸️ *இன்றைய நித்தியக்கடன்*


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🕸️ *இன்றைய சாதகம்*



🕸️ *இன்றைய நற்சிந்தனை*


🕸️ மனிதர்களுக்கு ஆறறிவு என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். எதை வைத்து  நமக்கு ஆறறிவு இருக்கிறது என்பதை ஒற்றுக் கொள்கிறோம்.  முதலில் நாம் ஓரறிவு ஈரறிவு என்று வரிசைப்படுத்தும் போது எதை வைத்து இந்த வரிசைகள் அமைகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தொட்டால் உணர்ந்து கொள்ள கூடிய அறிவு தாவரம் ஓரறிவு, (உ-ம்: தொட்டாசுருங்கி) சுவைகளை உணரும் நாக்கு இரண்டறிவு,  வாசனையை உணரும்  மூக்கு மூன்றறிவு, பார்த்து உணரும் கண்கள் நான்கறிவு, ஓசையை உணரும் காதுகள்  ஐந்தறிவு.


🕸️ *இன்றைய தற்சோதனை*


🕸️ ஆறாவது அறிவு மனிதனுக்கு என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் நமக்கு ஆறாவது அறிவு என்பது என்ன..? எதனுடைய, அடிப்படையில் நமக்கு ஆறறிவு இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். உலகத்தில் பொதுவாக சொல்வதுண்டு, பகுத்தறிவே ஆறாவது அறிவு   என்பதை ஏற்றுக் கொண்டால் ஓர் அறிவு இனமாகிய செடிகளுக்கே இது உண்டு. நாம் தொட்டால் சுருங்கி கொள்கிறது. பக்கத்தில் உள்ள மற்ற இலை, கொடி, செடி அதன் மீது படும்போது சுருங்குவதில்லை. ஆனால் நாம் தொடும்போது சுருங்குகிறது இது பகுத்தறிவு தானே.


🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*


🕸️ ஆக பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவு கிடையாது. அதற்கும் மேலாக தன்னைத்தானே உணர்வதற்கான அறிவே ஆறாவது அறிவு. தன்னை உணர்ந்து கொண்டு தனக்கு மூலமான ஆற்றலையும் (இறைவன்) உணர்ந்து கொள்வதற்காகவே இந்த மனித உருவத்திற்கு  இப்பூமியில் நாம் தன்மாற்றம் பெற்றிருக்கிறோம். தன்னை தானே உணரக்கூடிய ஆறாவது அறிவில், பண்பில் உயர்வோம். எவரொருவர் எவரொருவருக்கும் துன்பம் செய்யாமலும், பிறர் படும் துன்பங்களை போக்கியும், தானும் வாழ்வில் உயர்ந்து பிறர் உயரவும் உதவுவதே ஆறாவது அறிவாகும். வாழ்க வளமுடன்...


🕸️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*


🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          *🌸வாழ்க வையகம்🌸*

    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*

          *🌸வாழ்க வளமுடன்🌸*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

No comments:

Post a Comment