சிகரம் தொடு!
-------------------------
உங்களுக்கு..
உங்களை.
உங்களுக்கு எத்தனை
நபர்களை தெரியும்
என்பதைவிட,
உங்களை எத்தனை
நபர்களுக்குத் தெரியும்
என்பதே முக்கியம்.
உங்களுக்கு யாரெல்லாம்
நண்பர்கள் என்பதைவிட,
உங்களை யாரெல்லாம்
நண்பர்களாக ஏற்றுக்
கொண்டுள்ளார்கள்
என்பதே முக்கியம்.
உங்களுக்கு எத்தனை பேரை
பிடிக்கும் என்பதைவிட,
எத்தனை பேருக்கு
உங்களை பிடிக்கும்
என்பதே மிக முக்கியம்.
தினமும் எத்தனை பேரை
நீங்கள் நினைக்கிறீர்கள்
என்பதைவிட,,
எத்தனை பேர் உங்களை
நினைக்கிறார்கள்
என்பதே முக்கியம்.
நீங்கள் பேச விரும்புவர்கள்
யாரெல்லாம் என்பதைவிட,
யாரெல்லாம் உங்களிடம்
பேச விரும்புகிறார்கள்
என்பதே முக்கியம்.
யோசியுங்கள்.
சிந்தித்து பாருங்கள்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
உங்களை ஏன் உங்களுக்கு
பிடிக்கும்...என்ன காரணங்கள்
கண்டு பிடியுங்கள்.
பேசும் திறனா?
நகைச்சுவை உணர்வா?
உழைப்பா?
அறிவாற்றலா?
பழகும் தன்மையா?
ஒழுக்கமா?
அணுகுமுறையா?
கடமை உணர்ச்சியா?
புன்னகையா?
நேர்மையா?
இப்படி பல இருந்தாலும்
உங்களின் உண்மையான
சக்தி, பலம் எதில் என்று
கண்டுபிடிக்க வேண்டும்.
இருப்பதை பலப்படுத்த வேண்டும்
இல்லாததை வளர்க்க வேண்டும்.
நம்மை நாமே செதுக்குவதே
தலை சிறந்த செயலாகும்..
கல்லாக இருக்கும் நாம்
நல்ல சிலையாக வேண்டும்.
மரமாக இருக்கும் நாம்
புல்லாங்குழலாக வேண்டும்.
ஒரு சிற்பி
ஒரு சிலையை உருவாக்கும்போது,
ஒரு சிலை மட்டும் அல்ல,
ஒரு சிற்பியும் உருவாகுகிறான்.
அதுபோல,
நம்மை செதுக்கி உருவாக்கும் போது
நம்மை சுற்றி உள்ளவர்கள்
நம்மை விரும்பும் மனிதர்களாக
உருமாறுகிறார்கள்..
உருகுங்கள்
உறுமாறுங்கள்.
உருக்குங்கள்
உறு மாற்றுங்கள்.
வெற்றி நிச்சயம்
No comments:
Post a Comment