Monday, October 16, 2023

தியானம் என்றால் என்ன?

 மனம் என்றால் என்ன? 


மனம் எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இயல்பு 

நம் கட்டுபாட்டில் இருக்காது ஒன்றை நினைத்தால் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூறி பயணித்து கொண்டே இருக்கும்


இந்த முரட்டு குதிரையின் இயல்பு என்ன ?

அந்த மனஅலை சுழலை  எப்படி வரிசைபடுத்துவது என்று புரிந்து கொண்டால் மனதின் தன்மை எளிமையாக நமக்கு புரிந்து விடும்


மனதின் அலை இயக்கத்தை விஞ்ஞானிகள் Electro Encephalogram அதாவது EEG என்ற கருவி மூலம் 

அளக்கும் போது

அலை நீளங்களை கீழ்கண்டவாறு வகைபடுத்துவார்கள் :


பீட்டா, ஆல்பா, தீட்டா, டெல்டா.


1) பீட்டா அலை : உணர்ச்சிவயப்பட்ட நிலை. நாம் பொதுவாக இருக்கும் மனநிலை. அலை நீளம் 40 To 14  Cycles per seconds.இந்த நிலையில் கோபம், கவலை, பதட்டம் இருக்கும். எதையும் நிதானமாக யோசிக்க முடியாது.


2) ஆல்பா அலை : மனம் அமைதியாக இருக்கும். சிந்திக்க முடியும். நல்லது கெட்டது புரிந்து கொள்ள நிதானம் இருக்கும்.

அலை நீளம் 13 To 08 Cycles per second.


சுருக்கமாக மன அமைதி, மன ஓர்மை, நினைவாற்றல், சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.


3) தீட்டா நிலை: 

அலை நீளம் 07 To 04  cycles per second.இறையோடு இணையும் தெய்வீக நிலை.ஒழுக்க நிலை, செயல் செய்வதில் மிக கூர்மையான சிந்தனை, இறை நிலை நாட்டம், குண நலப் பேறு நற்குணங்களே மேலோங்கும்.


4) டெல்டா நிலை: 

அலை நீளம் 03 To 01 Cycles per second. இதுவே இறுதி நிலை. தன்னிலை உணர்ந்தோர் நிலை. சமாதி நிலை. பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் உணர்தல் நிலை, அன்பும் கருணையும் மேலோங்கும் நிலை.


எப்படி மனஅலை நீளத்தை குறைப்பது?


தியானம் ஒன்றே தீர்வு. எங்கே சுற்றினாலும் மனம் ஒருமைப்பட தியானம் மட்டுமே உதவும்.


தியானம் செய்ய செய்ய, மனதின் குறைபாடுகள் குறைய குறைய, மனதை நெறிப்படுத்தி, ஆற்றல் மிக்கதாக உயர்த்தி கொள்ள முடியும்.


தவறாமல் தினம் தியானம்  செய்ய செய்ய, உங்களுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். செயல் சிறப்பாக செய்யும் திறன் கூடும். வாழ்வு சிறக்கும்.


சுருக்கமாக மனம் என்னும் முரட்டு குதிரையை கொட்டடியில் 

அடைக்க முயற்சிப்பதே  தியானம்.

No comments:

Post a Comment