Thursday, October 26, 2023

ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி ஆங்கிலம் கற்று தந்தார்கள்

வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து கல்வி சேவை செய்யாமல் இருந்திருந்தால் இந்த மனுவாத பிராம்மணீய இந்து மதம் நம்மையெல்லாம் கல்வியறிவில்லாத மூடர்களாகவேதான் வைத்திருந்துக்கும், 


இன்றைக்கு இந்த மண்ணின் கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது என்றால் அது ஆங்கிலயனும் அவனது மிஷினரிகளும் போட்ட பிச்சை….  


இப்படிப்பட்ட புளுகுகளை பல நேரங்களில் பல மேடைகளில் பேசிக் கேட்ட விஷயம்தான். …… 


அவர்கள் சொல்வதில் என்ன தவறு என்றுதான் பெரும்பான்மையான ஹிந்துக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்…..


ஆனால், உண்மை என்ன என்பதைச் சிறிது ஆழமாக வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.


"இங்கிலாந்தில்'" முதல் பள்ளி 

1811 இல் திறக்கப்பட்டது. 


அதே நேரத்தில் 'இந்தியாவில்' 

732000 குருகுலங்கள் இருந்தன ..


நம் 'குருகுலங்கள்' எவ்வாறு மூடப்பட்டன என்பதைக் கண்டறிவோம்  . 


குருகுலக் கற்றல் எப்படி முடிந்தது ..??

'குருகுல கலாச்சாரத்தில்'

 (சனாதன் கலாச்சாரத்தில்) என்ன துறைகள் கற்பிக்கப்பட்டன என்பதை முதலில் பார்ப்போம் ..!!


பெரும்பாலான 'குருகுலங்கள்' பின்வரும் பாடங்களைக் கற்பித்தன.


01 அக்னி வித்யா (உலோகவியல்)

02 வாயு வித்யா (காற்று)

03 ஜல் வித்யா (நீர்)

04 ஆன்ட்ரிக்ஸ் வித்யா (விண்வெளி அறிவியல்)

05 பிரித்வி வித்யா (சுற்றுச்சூழல்)

06 சூரிய வித்யா (சூரிய ஆய்வு)

07 சந்திர மற்றும் லோக் வித்யா (சந்திர ஆய்வு)

08 மேக் வித்யா (வானிலை முன்னறிவிப்பு)

09 தாது ஊர்ஜா வித்யா (பேட்டரி ஆற்றல்)

10 தின் அவுர் ராத் வித்யா.

12 சிருஷ்டி வித்யா (விண்வெளி ஆராய்ச்சி)

13 ககோல் விக்யான் (வானியல்)

14 புகோல் வித்யா (புவியியல்)

15 கால் வித்யா (நேர ஆய்வுகள்)

16 பூகார்ப் வித்யா (புவியியல் மற்றும் சுரங்கத் துறை)

17 கற்கள் மற்றும் உலோகங்கள் (கற்கள் மற்றும் உலோகங்கள்)

18 ஆகர்ஷன் வித்யா (ஈர்ப்பு)

19 பிரகாஷ் வித்யா (ஆற்றல்)

20 சஞ்சார் வித்யா (தொடர்பு)

21 விமான் வித்யா (விமானம்)

22 ஜலயன் வித்யா (நீர் கப்பல்கள்)

23 அக்னேயா அஸ்ட்ரா வித்யா (ஆயுதங்கள் & வெடிமருந்துகள்)

24 ஜீவவித்யான் வித்யா (உயிரியல், விலங்கியல், தாவரவியல்)

25 யக்ஞ வித்யா (பொருள் Sic)

* இது அறிவியல் கல்வி பற்றிய பேச்சு. இப்போது உள்ளடக்கிய தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப துறைகளைப் பற்றி பேசலாம்!*

26 வியாபர் வித்யா (வர்த்தகம்)

27 க்ரிஷி வித்யா (விவசாயம்)

28 பசு பாலன் வித்யா (கால்நடை பராமரிப்பு)

29 பக்ஷி பாலன் (பறவை வளர்ப்பு)

30 யான் வித்யா (மெக்கானிக்ஸ்)

32 வாகன வடிவமைப்பு

33 ரதங்கர் (ரத்தினங்கள் & நகை வடிவமைத்தல்)

36 கும்ஹார் வித்யா (மட்பாண்டம்)

37 லாகு (உலோகம் மற்றும் கருப்பசாமி)

38 தக்காஸ்

39 ரங் வித்யா (சாயமிடுதல்)

40 கதவாகர்

41 ரஜ்ஜுகர் (லாஜிஸ்டிக்ஸ்)

42 வாஸ்துகார் வித்யா (கட்டிடக்கலை)

43 கானா பனனே கி வித்யா (சமையல்)

44 வாகன் வித்யா (ஓட்டுநர்)

45 நீர்வழி மேலாண்மை

46 குறிகாட்டிகள் (தரவு உள்ளீடு)

47 கusஷலா மேலாளர் (கால்நடை பராமரிப்பு)

48 பாக்வானி (தோட்டக்கலை)

49 வான் வித்யா (வனவியல்)

50 சஹ்யோகி (மருத்துவ உதவியாளர்கள்)


இந்த கல்வி அனைத்தும் குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது,


இதை மறுத்து ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்ப்பிக்கப்பட்டது என்று ஒரு கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.. இப்படி  பேசும் ஆங்கிலேய அடிமைகளுக்கு சில எடுத்துக்காட்டுகளை கீழே தந்துள்ளேன்


#Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,

காிகாலனின் கல்லணை.  சிதம்பரம்  நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்

பாா்க்கும்படி வைத்து

மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி 

தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான்...

இன்னும் இது 

போன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!


#Marine_Engineering தெரியாமல் கப்பல் கட்டி சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.


#Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.


#Aero_Technology  தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.


#Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.


#Explosive_Engineering தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.


#Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.


#Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.


#Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.


#Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது


#Bachelor/ Master_of_Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.


#Business_Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 


#Chartered_Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.


#Anomaly_Scan/ Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.


என்ன!  ஆச்சரியமாக இருக்கிறதா...?


 இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் பாரத திருநாட்டில் நமது இந்து தமிழர்கள் என்ற பெருமையை உணர்ந்து கொள்ள முடியும்


ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம்   மந்திரம்   போதும்


இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் பிளட்டெஸ்ட்டிங் கிடையாது 

லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient) படிப்பு கிடையாது.


ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும்  விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து  அதில்  பல அணுக்கள்  போராடி  அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா்

உண்டாகிறது என்று.


ஆனால்  நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான்  அற்புதமாக  தன் ஞானத்தினால்  லட்சமாக உருவெடுத்து  ஆயிரம் ஆகி

நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான் உயிா் என்றாா்.


எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது சனாதன (இந்து) மக்களின் தமிழர் மரபும் இந்து 

கலாச்சாரமும் ஞானமும்


இதனை அறியாத ஆங்கிலேய அடிமைகள் இந்த தேசத்தை ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகுதான் வளர்ச்சி அடைந்ததாக பேசி நமது கலாசாரத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள்


ஆங்கிலேய அடக்குமுறையில் காலப்போக்கில், குருகுலம் மறைந்தபோது, ​​இந்த அறிவு ஆங்கிலேயர்களால் மறைந்து போகச் செய்தது! 


பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெரிய கவலையாக இருந்தது எதுவென்றால் இந்தியாவை முழுமையாக அடிமைப்படுத்தி விட்டோம் ஆனால் இந்தியர்களை முழுமையாக மதமாற்றம் செய்ய முடியவில்லையே, மதமாற்றி கிருஸ்துவ நாடாக ஆகிவிட்டால் நமது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினை அசைக்க முடியாத  பேரரசாக ஆக்கிவிடலாமே என்று தீராத கவலையில் இருந்தனர்


இதற்க்கான ஆங்கிலேய பிரதிநிதிகள் இந்தியாவை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க இந்திய பாரம்பரியத்தை கலாச்சாரத்தை அழித்திட வழி  தேடினர் இதற்கான பல ஆய்வுகள் நடத்தினர்


இதில் "மக்காலே" என்ற ஆங்கிலேயர் பிரதிநிதியும் இந்தியாவை ஆய்வு செய்ய இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள் 


மக்காலே இந்தியா வந்து இந்தியர்களை எப்படி மதமாற்றம் செய்வது என்று இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் கல்வி கற்கும் முறையும் பற்றிய ஒரு கணக்கெடுப்பை நடத்தினான், 


அதே நேரத்தில் பல ஆங்கிலேயர்கள் இந்தியர்களை எப்படி மதமாற்றம் செய்வது என்று இந்தியாவின் வாழ்க்கை முறையையும் கல்வி கற்கும் முறையும் பற்றி தங்கள் அறிக்கைகளை அளித்தனர்.


பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஒருவர் ஜி.டபிள்யூ. லூதர் மற்றும் மற்றவர் தாமஸ் மன்றோ! இருவரும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். 


வட இந்தியாவை (உத்தர பாரத்) ஆய்வு செய்த லூதர், இங்கு 97 % கல்வியறிவு இருப்பதாக எழுதினார் மற்றும் தென்னிந்தியாவை (தக்ஷின் பாரத்) ஆய்வு செய்த முன்ரோ, இங்கு 100 % கல்வியறிவு இருப்பதாக எழுதினான்


இதற்கு ஆய்வுக்கு அனுப்பிய ஆங்கிலேயே பிரதிநிதிகளிடமிருந்து அறிக்கைகளை பிரிட்டிஷ் அரசு கேட்டு அரசவையில் தாக்கல் செய்தது


அதே நேரத்தில் பல ஆங்கிலேயர்கள் இந்தியாவின் கல்வி முறை பற்றி தங்கள் அறிக்கைகளை அளித்தனர்.


பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஒருவர் ஜி.டபிள்யூ. லூதர் மற்றும் மற்றவர் தாமஸ் மன்றோ! இருவரும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். 


வட இந்தியாவை (உத்தர பாரத்) ஆய்வு செய்த லூதர், இங்கு 97 % கல்வியறிவு இருப்பதாக எழுதினார் மற்றும் தென்னிந்தியாவை (தக்ஷின் பாரத்) ஆய்வு செய்த முன்ரோ, இங்கு 100 % கல்வியறிவு இருப்பதாக எழுதினான்


மற்ற ஆய்வாளர்களிலிருந்து இவன் சற்று வேறுபட்டு தனது ஆய்வு அறிக்கையை பிரிட்டிஷ் அரசவையில் தாக்கல் செய்தான்


முதலில் இந்தியா முழுவதும் ஆங்கிலேயே கல்வி கூடங்களை திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தான்


இந்த மெக்காலே அறிக்கையை பிரிட்டிஷ் அரசவையில் இது நமக்கு தேவையற்ற செலவை உண்டாக்கும் , அவ்வளவு செலவு செய்து இந்தியர்களுக்கு கல்வி கூடங்களை கட்டி கொடுக்கவா இந்தியாவில் ஆட்சி செய்து வருகிறோம் என்று விவாதித்தனர்


இந்தியா (பாரத்) என்றென்றும் அடிமைப்படுத்தப்பட வேண்டுமானால், அதன் ′ ′* பூர்வீக மற்றும் கலாச்சார கல்வி முறை* ′ completely முற்றிலும் அழிக்கப்பட்டு replaced ′ ஆங்கிலக் கல்வி முறையால் மாற்றப்பட வேண்டும் என்று மக்காலே தெளிவாக தனது அறிக்கையில் கூறியிருந்தான், அப்போதுதான் இந்தியர்கள் உடல் ரீதியாக இந்தியர்களாக இருப்பார்கள் , ஆனால் மனதளவில் ஆங்கிலயர்களாக மாறிவிடுவார்கள் என்று விரிவான அறிக்கை தந்தான். 


அப்படி இந்தியர்களை குருக்குல கல்வி முறையில் இருந்து மாற்றி ஆங்கில கல்வியை திணித்து கான்வென்ட் பள்ளிகள் அல்லது ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்து விட்டு இந்திய மாணவர்கள் வெளியேறும்போது, ஆங்கிலேய பற்று அவர்களுக்குள் உட்புகுந்து இருக்கும், ​​அவர்கள் பிரிட்டிஷாரின் நலனுக்காக வேலை செய்வார்கள் என்று அவன் பிரிட்டிஷ் அரசவையில் அறிக்கையை சமர்ப்பித்தது வாதிட்டான்


மெக்காலே ஒரு சொல்லை பயன்படுத்துகிறான் , ஒரு பயிர் நடவு செய்வதற்கு முன்பு ஒரு பண்ணை முழுமையாக உழப்படுவது போல், அதை உழுது ஆங்கிலக் கல்வி முறையில் கொண்டு வர வேண்டும்வேண்டும் என்றால் முதலில் குருகுலங்களை அழிக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்

அதற்கு முதல் படியாக குருகுல கல்வி பாடசாலைகளை சட்டவிரோதமாக அறிவித்தான், 


பின்னர் அவன் சமஸ்கிருதத்தை சட்டவிரோதமாக அறிவித்து குருகுலங்களை தீ வைத்து, அதில் ஆசிரியர்களை அடித்து சிறையில் அடைத்தான், 


1850 வரை இந்தியாவில் '7 லட்சத்து 32 ஆயிரம்' குருகுலங்கள் மற்றும் 7,50,000 கிராமங்கள் இருந்தன. அதாவது கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குருகுலம் இருந்தது, இந்த குருகுலங்கள் அனைத்தும் இன்றைய மொழியில் 'உயர் கல்வி நிறுவனங்கள்'. அவை அனைத்திலும் 18 பாடங்கள் கற்பிக்கப்பட்டன, குருகுல சமாஜத்தின் இந்த மக்கள் அரசரால் அல்ல, ஒன்றாக இதை நடத்தினார்கள்.

கல்வி இலவசமாக வழங்கப்பட்டது.


இப்படி இந்தியாவில் குருகுல கலாச்சாரம் எப்படி முடிந்தது?

கான்வென்ட் கல்வியின் அறிமுகம் குருகுலங்களை அழித்தது. இந்திய கல்வி சட்டம் 1835 இல் உருவாக்கப்பட்டது (1858 இல் திருத்தப்பட்டது). இது 'லார்ட் மெக்காலே' என்பவனால் வரையப்பட்டது.


குருகுலங்கள் ஒழிக்கப்பட்டு ஆங்கிலக் கல்வி சட்டப்பூர்வமாக்கப்பட்டு கல்கத்தாவில் முதல் கான்வென்ட் பள்ளி திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது 'இலவச பள்ளி' என்று அழைக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், கல்கத்தா பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்த மூன்று அடிமை கால பல்கலைக்கழகங்கள் இன்னும் நாட்டில் உள்ளன!


இந்த கான்வென்ட் பள்ளிகளில் படிக்கும்  மாணவர்கள் இந்தியர்களைப் போல தோற்றமளிப்பார்கள் ஆனால் மனதளவில் ஆங்கிலேயர்களாக மாறிவிடுவார்கள் 


ஆம் மெக்காலே தயாரித்த தற்போதைய கல்வி முறை தாய் மொழியை இழிவாக நினைத்து ஆங்கிலத்தை பெருமையாக நினைக்க வைத்து கற்க வைக்கும் என்று மெக்காலே திட்டம்


தாய்நாட்டை கேவலமாக பேச வைத்து ஆங்கிலேய நாட்டை பெருமையாக பேச வைக்கும்


மூளையால் ஆங்கிலேயராக முழுமையாக மாற்றி படிப்பை முடித்த குழந்தைகளை  தங்கள் நாட்டைப் பற்றி எதுவும் தெரியாது, 


அவர்களுக்கு அவர்களின் கலாச்சாரம் பற்றி எதுவும் தெரியாது,


அவர்களின் பாரம்பரியம் பற்றி எந்த எண்ணமும் இருக்காது, 


அவர்களுக்கு தாய் மொழி இலக்கியம் முழுமையாக யில் தெரியாது, 


அத்தகைய குழந்தைகள் இந்த நாட்டில் இருக்கும்போது, ​​ஆங்கிலேயர்கள் சென்றாலும், ஆங்கிலம் இந்த நாட்டை விட்டு வெளியேறாது . ′ 


இப்படி இங்கிலாந்து அரசுக்கு மெக்காலே அக்காலத்தில் எழுதப்பட்ட கடிதத்தின் உண்மை இன்றும் நம் நாட்டில் தெளிவாகத் தெரியும். 


இந்தச் செயலால் உருவாக்கப்பட்ட துயரத்தைப் பாருங்கள். 


அவன் திட்டம் எப்படி நிறைவேறியது என்பதற்கு சிறு உதாரணம் தான் ஒரு தாய் தன்னை அம்மா என்று தன் குழந்தை அழைபதைவிட மம்மி என்று அழைப்பதையே பெருமையாக நினைக்க வைத்துவிட்டது


குறிப்பாக ராமசாமி என்று பெயர் வைத்து கொண்டு ராமரையை இழிவுபடுத்தும் அளவுக்கு இக் கல்வி முறை மாணவர்களை மாற்றிவிட்டது


நம் சொந்த தாய் மொழியைப் பேசவும், நம் சொந்த கலாச்சாரத்தை அங்கீகரிக்கவும் வெட்கப்படுகிற அளவுக்கு நம்மைநாமே  தாழ்ந்தவர்களாக  உணர்கிறோம்.


தாய் மொழியிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சமூகம் ஒருபோதும் வளராது, இது மெக்காலேயின் உத்தி! 


இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவை விட ஐரோப்பா பற்றி அதிகம் தெரியும். இந்திய கலாச்சாரத்தை இழித்து பழித்து பேசி வெறுக்கிறார்கள், அதே நேரம் மேற்கத்திய நாட்டையும் மேற்கத்திய கலாச்சாரத்தையும் விரும்பி பின்பற்றுகிறார்கள்- இதுதான் மெக்கலே கல்வி சூழ்ச்சியின் வெற்றி


ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி  ஆங்கிலம் கற்று தந்தார்கள் அவ்வளவுதான் 


ஆங்கிலம் என்பது மொழிதானே தவிர அறிவு அல்ல அல்ல.. . 


மெக்காலே பிறந்தநாள் என்று இவனை கொண்டாடும் இந்த நாளில் இந்த உண்மையை உணர்ந்து அனைவரும் விழித்துக்கொண்டு நமது சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது ..


ஜெய்ஹிந்த்!


சிவ பரமசிவம்

No comments:

Post a Comment