வேதாத்திரிய விழாக்கு-20
*எது பேரின்பம்? பேரின்பத்தில் வாழ்பவர் யார்?*
தன்னையும், கடவுளையும், உடல் மன துன்பமில்லாமல் வாழும் அறிவையும் அறிந்த *"மனதின் நிறைவுநிலையே பேரின்பம்."*
தன்னையும் கடவுளையும் ஒன்றாக அறிந்தவரே, பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அனைவரும் நானே என்பதை அறிந்திருப்பார்.
அவருக்கே அனைத்து உயிர்களையும் தனக்கு சமமாக மதித்து ஒழுகும் அன்பு மலர்ந்திருக்கும்.
பொருள், புகழ், செல்வாக்கு புலனின்பம் நான்கும் போதும் என்ற மனநிறைவும் அமைதியும் இருக்கும்.
ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய அறநெறிகளைக் கடைப்பிடித்து, உலக இன்பங்களை அளவோடு அனுபவித்து உடல் நலத்தோடும், பொருள் வளத்தோடும், உயர்புகழோடும் துன்பமில்லாத நிலைத்த இன்பத்தில் வாழ்வார்.
வாழ்க வேதாத்திரியம். வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment